search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோக்கர் கைது"

    • புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
    • குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவரது மனைவி நாகதேவி (26). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7-ந் தேதி சூரியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகதேவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் 3-வது பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்று தருவதாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் டாக்டர் அனுராதா என்பவரும், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த புரோக்கர் லோகாம்பாள் என்பவரும் பேரம் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து தினேஷ் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் டாக்டர் அனுராதா பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த 2 கிளீனிக்குகளும் மாவட்டம் நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
    • இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி பேஸ் 16-ல், மாருதி நகர் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து, இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    • திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர்.
    • போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி மும்பை நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும், வெங்காயம் வாங்கி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.

    விலை அதிகரிக்கும் சமயங்களில் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார். வெங்காயத்தில் முதலீடு செய்தால் எந்த காலத்திலும் நஷ்டம் கிடையாது என தெரிவித்ததோடு 30 சதவீதம் அதிகமாக பணத்தை திருப்பி தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.

    இதனை நம்பி சென்னை வளசரவாக்கம் தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் (40), சூர்யாவை தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சம் செலுத்தினார்.

    இதேபோல் திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் கூறியபடி பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் சூர்யாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார்.

    இதுகுறித்து சென்னை சந்திரசேகர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சூர்யாவை கைது செய்தனர்.

    • ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
    • லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ்(53). இவர் கோவையில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அந்த ரியல் எஸ்டேட் சார்பில் விளாங்குறிச்சி ஜீவா நகர் அருகே வீட்டுமனை பிரிக்கப்பட்டு அங்கு தற்காலிக அலுவலகம் உள்ளது.

    கடந்த 9-ந் தேதி அந்த அலுவலகத்துக்கு அதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் புரோக்கராக பணியாற்றும் ரவிக்குமார் என்ற கென்னடி(45) வந்தார். அவர் திடீரென்று லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 23 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசாரிடம் ரவிக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பல பேரிடம் கடன் வாங்கியிருந்தேன். பணம் கேட்டு அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அந்த கடனை எப்படி திருப்பி கொடுப்பது என யோசித்து வந்தேன்.

    அப்ேபாது தான் நான் வேலை செய்யும ரியல்எஸ்டேட் அலுவலகத்தின் மேலாளரிடம் ரூ.82 லட்சம் இருப்பதை அறிந்தேன். அதை பறிக்க திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று அலுவலகத்துக்கு சென்றபோது, மேலாளர் மட்டுமே இருந்தார். இதுதான் சரியான நேரம் என்று நினைத்து நான் வைத்திருந்த ஆக்சா பிளேடால் அவரை வெட்டினேன். இதில் காயம் அடைந்த அவர் அப்படியே கீழே விழுந்தார். உடனே நான் 82 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு நான் வந்த காரில் ஏறி தப்பினேன். அந்த பணத்தை கொண்டு நான் கடன் வாங்கியவர்களுக்கு திருப்பி கொடுத்தேன். மீதி பணத்தை வைத்துக் கொண்டு பாலத்துறை அருகே வந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் ரவிக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான ரவிக்குமார் சுமார் 10 பேரிடம் கடன் வாங்கியிருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டுமனை மற்றும் வீடு வாங்கி தருகிறேன் என பலரிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். இதற்காக அவர்களுக்கு எழுதியும் கொடுத்திருக்கிறார். அவர் பறித்துச் சென்ற 82 லட்ச ரூபாயில் கடன் வாங்கிய சிலருக்கு கடனை திருப்பி கொடுத்ததாக கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை சரிபார்ப்பதற்காக சிலரிடம் நாங்கள் விசாரித்த போது அவர்களும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் ரவிக்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் பணத்தை திருப்பி வாங்கியவர்களை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளோம். ரவிக்குமார் அவர்களிடம் கடன் வாங்கினாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? என்று அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதற்கிடையில் ரவிக்குமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. அப்போது தான் இதில் உண்மையான விவரங்கள் தெரியவரும்

    ×