என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "investigation"
- விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
- கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'
திருப்பதி:
தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.
- தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.
- கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து அண்டை நாடான இலங்கை கடல் வழியாக 30 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இருநாட்டில் இருந்தும் சமூகவிரோதிகள் படகு மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், தங்கம், மஞ்சள், மருந்துகள், பீடி இலைகள் போன்றவற்றை சட்ட விரோதமாக கடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.
இதனை தடுக்க கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. தங்க கடத்தல் குறித்து தகவல் அறிந்து உடனே கடலோர காவல் படை போலீசாரும் நடுக்கடலிலேயே கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டுவரும் தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து ஒரு படகு மூலமாக ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர போலீசார் ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடையே ஒரு படகு சந்தேகத்திற்கிடமாக சென்றது. உடனே கடலோர போலீசார் அந்த படகை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதை பார்தத கடலில் இருந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை கடலில் வீசியதாக தெரிகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் படகை மறித்த போலீசார் அதில் இருந்த 3 பேரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தங்கம் கடலில் வீசியது தெரியவந்தது. ஆனால் அதன் அளவு எவ்வளவு என்பது தெரியவில்லை.
கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடைபெற்ற தேடுதலில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாலையில் தேடும் பணி கைவிட்ட போலீசார் இன்று காலை அந்த பகுதியில் நீச்சல் வீரர்கள், கடலில் மூழ்கும் பயிற்சி பெற்ற ஸ்கூபா டை வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் மூலம் கடலில் குதித்து 2 நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் மதிப்பு எவ்வளவு? யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது? மூளையாக செயல்பட்டது யார்? என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய்துறை அதிகாரிகள், கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர்.
- விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தூர்:
கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 67). அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்.
அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பஸ் காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.
நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.
இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.
இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.
இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.
இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.
இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.
- எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
- கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.
ஏ.டி.எம். மையங்களில் நின்று கொண்டு அங்கு வரும் கிராமப்புற பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் பணம் எடுத்து தருவதாக அவர்களது கார்டை வாங்கி அந்த பணத்தை திருடிச் சென்றார். இவர் மீது தேனியில் 3 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3, ராஜபாளையத்தில் 2, வாலந்தூரில் 2, செக்காணூரணியில் 2, திருமங்கலத்தில் 3, சென்னையில் 1, ஆந்திராவில் 2, கேரளாவில் 1, கர்நாடகாவில் 4 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீசார் தேடி வந்தனர்.
இவர் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
கடைசியாக அவர் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். மையத்தில் இருந்து அவரது புகைப்படத்தை கைப்பற்றி தேனி உள்பட பல்வேறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் போடி வந்து தம்பிராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
4 மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல ஏ.டி.எம். கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
- ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
- சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் சனிக்கிழமை மாலையில் அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 8 நாட்களாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாலை வரையில் ரூ.11கோடியே 41 லட்சம் பணம் பிடிபட்டு உள்ளது.
இந்த சோதனையில் மதுபாட்டில்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சம் மதிப்பி லான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.13 கோடியே 22 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் சென்னையில் நேற்று பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 7½ கிலோ தங்கம் பிடிபட்டு உள்ளது. தி.நகரில் 5½ கிேலா தங்கமும், சைதாப்பேட்டையில் 2 கிலோ தங்கமும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கி உள்ளது. சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே மர்ம பொருள் வெடித்து பசுமாடு வாய் கிழிந்தது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜானகி (வயது55). இவரது 3 பசுமாடுகள் நேற்று மாலை அருகிலுள்ள ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தபோது. அப்பகுதியில் கிடந்த மர்மபொருள் ஒன்றினை மாடுகள் கவ்வியபோது அந்த மர்ம பொருள் வெடித்தது.
இதில் ஒரு பசுமாட்டின் வாய் கிழிந்தது. வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் பசு மாடு வாய் கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காட்டுப்பன்றிகள், மான் போன்ற வனவிலங்குகளை சமூகவிரோதிகள் சிலர் இதுபோல வெடி வைத்து வேட்டையாடுவதாக அப்பகுதிபொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அது வெடித்ததில் பசு மாடு வாய் கிழிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
கோவை:
கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு 23-ந் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) பலியானார்.
தீபாவளிக்கு முந்தைய தினத்தில் மக்கள் கூட்டத்தில் காரை வெடிக்க செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த ஜமேஷாமுபினும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபினே பலியானார்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கார் குண்டுவெடிப்பில் கைதானவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. தற்போது விசாரணையில் இறங்கி உள்ளது.
இதுதொடர்பாக முகமது உசேன், ஜமேசா உமரி உள்ளிட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் இன்று சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.
என்.ஐ.ஏ. அதிகாரி விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அரபிக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் ஆசாத் நகர் பகுதிக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
- கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
- வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மெய்யனூர் இட்டேரி ரோடு பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அங்கிருந்த கேபிள் வயரில் பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மின் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த கேபிள் வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
இது குறித்து மின் வாரிய உதவி என்ஜினீயர் கண்ணன் ( 48) பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து சேதமானதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
- பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்
இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்