search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகள்"

    • கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
    • தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.

    எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

    காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ரவுடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பதுங்கி இருக்கும் ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்ற போது தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். சமீபத்தில் கூட காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதேபோல் துப்பாக்கி சூடு சம்பவம் மீண்டும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26) என்பவரை பிடிக்க திருநெல்வேலி போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் சுப்பிரமணி போலீசார் கண்ணில் தென்படாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். திருநெல்வேலியில் சுப்பிரமணி மீது கொலை, கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா உள்பட மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சுப்பிரமணி தனது கூட்டாளிகள் முத்து மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா 4 பேருடன் ஒவ்வொரு ஊராக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க திருநெல்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சுப்பிரமணி குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து வந்தனர்.


    அதன்படி தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் குள்ளம்பாளையத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மறைந்திருந்து சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த வீட்டில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் திடீரென சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ மீது வீசி உள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தற்காப்புக்காக ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டு சுப்பிரமணி மீது படாமல் வீட்டின் ஓரத்தில் பாய்ந்தது. இதனையடுத்து சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசாரும் அவர்களை பிடிக்க விரட்டி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தனிப்படை போலீசார் பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள், அவரது கூட்டாளிகள் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி சோதனை செய்தனர்.
    • ஆய்வு மற்றும் சோதனை இன்று காலை 6 மணி முதல் நடந்து வருகிறது.

    விருத்தாசலம்:

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியில் வந்தவர்கள் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது.

    அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் விருத்தாசலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டு 50-க்கும் மேற்பட்டோரின் பட்டியலை தயார் செய்தனர்.

    அவர்களின் தற்போதைய நிலை குறித்து விசாரிக்க விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான டெல்டா போலீசார் இன்று காலை தனி வாகனத்தில் புறப்பட்டனர். விருத்தாசலம் நகரம், புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், மணவாளநல்லூர் போன்ற கிராமங்களில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது, தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், அவர்களின் குடும்பத்தாருடன் தொடர்பில் உள்ளனரா? எங்கு பதுங்கியுள்ளனர்? பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா? அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? போன்றவை குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும், போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி சோதனை செய்தனர். இந்த ஆய்வு மற்றும் சோதனை இன்று காலை 6 மணி முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் விருத்தாசலம் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவுகிறது.

    • மன்னார்குடியில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
    • அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

    மன்னார்குடி:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.

    ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

    நகரச் செயலாளர் லெட்சுமணன் வரவேற்று பேசினார்.

    அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

    இதில் அ.ம.மு.க. நகர செயலாளர் ஆனந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோடநாடு பங்களாவில் நடந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
    • தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே தண்டிக்கக்கோரியும், இது குறித்து தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ( ஓ. பன்னீர்செல்வம் அணி ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அ.ம.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    அதன்படி தஞ்சை ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. ( ஓ.பி.எஸ் அணி ) வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்யராஜ், பகுதி செயலாளர்கள் அறிவுரை நம்பி, ரமேஷ், சாமிநாதன் ,சண்முக பிரபு, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன்,

    ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் வீரராஜ், தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், அ.ம.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வேலு கார்த்திகேயன், மாணவர் அணி செயலாளர் வக்கீல் நல்லதுரை, பூக்கார தெரு பகுதி செயலாளர் செந்தில் குமார், ஒன்றிய செயலாளர் மனோகரன், வேலாயுதம், கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை.
    • குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநில வளர்ச்சி பாதையில் யாராவது தடைகளை உருவாக்கினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை. அரசு சொத்துக்களை சட்ட விரோதமாக அபகரித்தவர்களுக்கு நான் ஆரத்தியா எடுக்க முடியும்? குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அனைத்து பண்டிகைகளும் அமைதியாக கொண்டாடப்படுகிறது என்றார்.

    • முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இருப்பினும் செயின் பறிப்பு, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுவோர் அடிக்கடி கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு கேமராக்களே பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிர்பயா பாதுகாப்பு மற்றும் சென்னை மாநகர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்தார். சென்னை மாநகர் முழுவதும் 1750 முக்கிய இடங்களில் 5250 கேமராக்களை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த கேமராக்கள் மூலமாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்பது கட்டுப்பாட்டு அறையின் சிறப்பம்சமாகும்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக புதிய தொழில் நுட்பத்தின்படி கேமராக்கள் கண்காணிக்கப்படுவதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள் குற்ற செயல்களை பகுப்பாய்வு செய்து எச்சரிக்கை தகவல்களையும் உடனுக்குடன் அளிப்பதால் போலீசார் விரைந்து செயல்பட முடியும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

    செயின் பறிப்பு, பெண்களை கிண்டல் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபடுதல், கடத்தல் சம்பவங்கள், பொருட்களை சூறையாடுதல், வாகன திருட்டு உள்ளிட்ட அனைத்து குற்றசெயல்களில் ஈடுபடுவோரையும் கண்டுபிடிப்பதற்கு வசதியாக கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேமராவில் பதிவாகும் அவசர காட்சிகளை கூட செயற்கை தொழில்நுட்ப மென்பொருள் உதவியுடன் ஆய்வு செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பம்சமாகும்.

    இப்படி கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்து தேவைப்படும்போது பார்ப்பதற்கும் வசதி உள்ளது. அதே நேரத்தில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது. இந்த காட்சிகளை சென்னை மாநகரில் உள்ள 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் தங்களது அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்படி பெண்களின் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு திட்டத்தால் போலீசார் தங்களது பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே கிராமத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் 18 குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தது.
    • நடுவீரப்பட்டில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ளது நடுவீரப்பட்டு கிராமம். சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர தூரத்தில் உள்ளது. இப்பகுதியை சுற்றி அதிக அளவில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடந்து வந்தன.

    இது தொடர்பாக போலீசார் ஆய்வு செய்த போது நடுவீரப்பட்டு பகுதியில் மட்டும் ஒரே கிராமத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் 18 குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதும் சிரமம் ஏற்பட்டது.

    தொழிற்சாலைகள், கல்லூரிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    அதன்படி நடுவீரப்பட்டில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.

    இங்கு 4 போலீசார் ஷிப்டு முறையில் பணியாற்றுகிறார்கள். மேலும் அப்பகுதியை சுற்றிலும் கூடுதல் கண்காணிப்பு கேமிராக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, நடுவீரப்பட்டு பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இங்கு மட்டும் 18 தொடர் குற்றவாளிகள் உள்ளனர்.

    மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் எ்ணணிக்கையும் அதிகரித்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது' என்றார்.

    • இரட்டை கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய், மகளை கொலை செய்து 60 நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து தப்பினர்.

    இரட்டை கொலை நடந்து 27 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு இரவுசேரி நாடு, தென்னிலைநாடு உட்பட 14 நாட்டார்கள் முன்னிலையில் நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

    இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக், த.மா.கா மாநில செயலாளர் இருமதி துரைகருணாநிதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் வர்த்தக சங்கத்தினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரதம் இருந்தனர்.

    உண்ணாவிரத்தை முடித்து கொண்ட காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், இந்த வழக்கு சம்பந்தமாக கூடுதலாக ஒரு மாதத்திற்குள் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லை யென்றால் அடுத்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறும்.

    ஒரு மாத காலத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தேவகோட்டை துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சி.சி.டி.வி காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்ற–வாளிகளை தேடி வந்தனர்.
    • 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.

    இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த தனிப் படையில் போலீஸ்

    சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீஸ்காரர்கள் புகழேந்தி, திருக்குமரன், கோதண்டம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த தனிப்டையினர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில், தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த ராஜ் (வயது 29), ஆனந்த் (31), கோபிநாத் (19), பிரகலாதன் (19) ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்–பட்டவர்களிடம் இருந்து 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    கைது செய்யப்பட்ட 4 பேரையும் தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராஜபாளையத்தில் சி.சி.டி.வி. காமிராவை உடைத்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    • குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி முடங்கியார் ரோட்டில் உள்ள வனச்சரக சோதனை சாவடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த வழியாக வந்த சிலர் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மீது கல்வீசினர். இதில் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு காமிரா உடைந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு தலைமை காவலர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்காணிப்பு காமிரா மீது கல்வீசி சேதப்படுத்தியது சோமையாபுரம் தெருவைச் சேர்ந்த நீராத்துலிங்கம் மகன் வனஅரவிந்த் என்ற கபாலி, கூடலிங்கம் மகன் தங்கபழம், மாலையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வைரவன் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×