search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cables"

    • கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் இட்டேரி ரோடு பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அங்கிருந்த கேபிள் வயரில் பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மின் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த கேபிள் வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

    இது குறித்து மின் வாரிய உதவி என்ஜினீயர் கண்ணன் ( 48) பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து சேதமானதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • இருவரையும் மரத்தில் கட்டிப்போட்டு பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
    • இரண்டு பேரை அடிக்கும் வைரலான வீடியோவில் காணப்பட்ட சில கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் மின் கேபிள்களை திருடியதாக கூறி இரண்டு பேரை அதே மின் கேபிளில் மரத்தில் கட்டிப்போட்டு தடியால் அடித்து தக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், "மின் கேபிள்களைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரை ஒரு கிராமவாசி தடியால் அடிக்கும் காட்சி காண முடிகிறது. அப்போது அந்த இருவரும் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சும் காட்சியும் பதிவாகியுள்ளது.

    குளித்தலை பாக்தா பாய் கா என்ற இடத்தில் விவசாய வயல்களில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டாரின் மின் கேபிள்கள் அண்மையில் இரவு திருடர்களால் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    தண்ணீர் மோட்டார் பழுதடைந்து கிடப்பதை கவனித்த விவசாயிகள், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து திருடர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, 2 பேரை பிடித்து, திருடப்பட்ட மின் கேபிள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர், இருவரையும் மரத்தில் கட்டிப்போட்டு பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து பதிண்டா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அஜய் காந்தி கூறுகையில், "இரண்டு பேரை அடிக்கும் வைரலான வீடியோவில் காணப்பட்ட சில கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம். சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும், குற்றம் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    ×