search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்"

    • ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு 23-ந் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) பலியானார்.

    தீபாவளிக்கு முந்தைய தினத்தில் மக்கள் கூட்டத்தில் காரை வெடிக்க செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த ஜமேஷாமுபினும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபினே பலியானார்.

    இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கார் குண்டுவெடிப்பில் கைதானவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. தற்போது விசாரணையில் இறங்கி உள்ளது.

    இதுதொடர்பாக முகமது உசேன், ஜமேசா உமரி உள்ளிட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் இன்று சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரி விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அரபிக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் ஆசாத் நகர் பகுதிக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    • காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி.
    • சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டம்.

    நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.

    நேற்று அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சோரணை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

    இந்த நிலையில் ஹேமந்த் சோரணை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

    இதையடுத்து அவரிடம் சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி 14-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதன் வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஜனவரி 11ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வன்முறையை தடுக்க தனி காவல் நிலையம் வேண்டும்

    புதுக்கோட்டை 

    அண்ணல் அம்பேத்கர் பவுத்தம் தழுவி 67 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பாபாசாஹேப் அம்பேத்கர் பொறியாளர் இயக்கத்தின் சார்பில் அம்பேத்கரிய இளைஞர்கள் மாநாடு மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

    இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமுருகு முத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் மட்டுமல்லாது தென் மாநிலங்களிலும் அதிலும் தமிழகத்திலும் பல்வேறு வன்கொடுமைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.

    ஆனால் அந்த வழக்கில் 300 நாட்களை கடந்தும் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிமான வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் அதில் வெறும் 25 சதவீத வழக்குகள் மட்டுமே தீர்த்து வைக்கப்படுகின்றன. 75 சதவீத வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன.

    மேலும் பல்வேறு காவல் நிலையங்கள் வழக்குகளை பதிவு செய்வதே இல்லாத அலட்சிய போக்கு தான் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலைநீடிக்காமல் இருக்க வன்கொடுமை சட்டங்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும்.

    மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்ய மகளிர் காவல் நிலையம் உள்ளதை போல வன்கொடுமை வழக்குகளுக்கு தனி காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார்.
    • உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதுறை ஊராட்சி உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள இந்த ஊராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ள இந்த கிராம பகுதிகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    மருதுறை ஊராட்சிக்குட்பட்ட சின்ன புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் தனியார் பனியன் நிறுவன சூப்பர்வைசர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.மேலும் மருதுறை ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 10 அடி தூரத்தில் உள்ள நொய்யல் ஆற்றை கடந்தால் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருங்கத்தொழுவு ஊராட்சி கிராம பகுதிகள் ஏராளமாக உள்ளன.

    இந்த நிலையில் கடந்த வாரம் சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதைத்தொடர்ந்து மருதுறை ஊராட்சி கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி காங்கயம் போலீசார் தற்போது மருதுறை பஸ் நிறுத்தத்தில் பட்டீஸ்வரர் கோவில் முன்புறம் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸ் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.

    இதில் 24 மணி நேரமும் போலீசார் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து இருசக்கர, கனரக வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
    • மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்

    திருப்பூர்:

    திருப்பூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் நடப்பதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இதனைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லையில் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட், ஓடக்காடு புஷ்பா தியேட்டர் அருகில் செயல்பட்டு மசாஜ் சென்டர் உள்ளிட்ட மூன்று சென்டர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் திருப்பூர் பின்னிகா ம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சென்டரை பூட்டிய போலீசார் அங்கிருந்த உரிமையாளர் மற்றும் இரண்டு பெண்களை திருப்பூர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது திருப்பூர் மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நள்ளிரவில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது திடீரென அவர் மேற்கு காவல் நிலையத்தில் உள்ளே சென்றார் அங்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்தார் அவரிடம் தான் யார் என கூறாமல் மனு கொடுக்க வந்திருப்பதாக சூப்பிரண்டு கூறினார்.

    அவரை அடையாளம் கண்டு கொள்ளாத காவலர், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருப்பதாகவும், வந்தவுடன் அவர்களிடம் மனு கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த சூப்பிரண்டு அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் பணியில் இருந்த காவலருக்கு யாரோ உயர் அதிகாரி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் எங்கு சென்றிருக்கிறார்கள் என காவலரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்தார்.

    அவர்கள் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார். மேலும் காவலரிடம் தன்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்ததில்லை என்று காவலர் கூறியுள்ளார். அவரிடம் தான் தான் போலீஸ் சூப்பிரண்டு என்பதை தெரிவித்துவிட்டு மீண்டும் தான் வந்த சைக்கிளில் ஏறி அவர் அங்கிருந்து சென்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதாரண உடையில் சைக்கிளில் வந்து போலீஸ் ஸ்டேசனில் ஆய்வு செய்தது விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவல் நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது
    • வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று தூய்மை பணி மேற்கொள்வது வழக்கம் அந்த வகையில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார்கள் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் போலீஸ் நிலையம் உள்ளே ஒட்டடை அடிக்கப்பட்டு ஒழுங்கற்ற முறையில் இருந்த பொருட்களை ஒழுங்கு படுத்தப்பட்டதுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் கைது சிறையை தூய்மைப்படுத்தியும், புகார் அளிக்கப்படும் தாய்மார்களின் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களை ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் தேவையற்ற பொருட்களை வெளியேற்றியும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    • இரவு ஆட்டுமந்தை காவலுக்காக படுத்திருந்தனர்.
    • அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த கருப்பம் புலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வைத்திருக்கும் ஆட்டு மந்தையை, வேதாரண்யம் அடுத்த மணியன் தீவில் கடற்கரையில்மேய்ச்சவுக்கு விட்டுதங்களும் அங்கேயே கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர்.

    நேற்று இரவு ஆட்டுமந்தை காவலுக்கு படுத்திருந்தனர்.அப்பொழுது அதிகாலை அங்கு ஆடுகளைபிடிக்க வந்த நரி அங்கு தூங்கிகொண்டி ருந்த கருப்பம்புலத்தை சேர்ந்த மணியன் (வயது 75), காசிநாதன் (70) ஆகிய இருவரையும் கடித்தது. இதில் இருவரும் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    • தீரன் நகரில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
    • 17 கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையிட்டார்

    திருச்சி:

    திருச்சி மாநகர் அருகில் உள்ள தீரன் நகரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பாக முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்புகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 17 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தற்போதைய நிலையில் மூன்றாவது கண்ணாக கண்காணிப்பு கேமராக்கள் விளங்குகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலே குற்றவாளிகள் நகருக்குள் வர பயப்படுவார்கள். குற்றம் நடந்தாலும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கண்காணிப்பு கேமராகளை பொருத்துவதோடு மட்டும் நின்று விடுகிறார்கள். அதை சரியாக பராமரிப்பது இல்லை. முக்கிய குற்றங்கள் நடந்த பிறகு போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும்போது, அது தற்போது செயல்படவில்லை என்ற பதில் மட்டுமே வருகிறது.

    எனவே தற்போது தொடங்கி இருக்கும் இந்த கண்காணிப்பு கேமரா பணி தொடர்ந்து பராமரித்து செயல்பட வேண்டும். தீரன் நகரில் விரைவில் சோமரசம்பேட்டை காவல் நிலையம் சார்பாக புறங்காவல் நிலையம் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி மக்கள் தங்களையும் தங்கள் வீடுகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .

    இந்நிகழ்ச்சியில் ஜீயபுரம் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், நாச்சி குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தீரன்நகர் பாரதியார் மக்கள் நல சங்க நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
    • அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணி–யாற்றி வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 49).

    இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்–சந்திரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா இவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ஏட்டு ஜெயச்சந்திரன் மனைவி காயத்ரி சேலம் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல–கத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு ஜெயசூர்யா என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். ஜெயச்சந்திரன் கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×