search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல் நிலையத்தில் தூய்மை  பணி
    X

    காவல் நிலையத்தில் தூய்மை பணி

    • காவல் நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது
    • வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று தூய்மை பணி மேற்கொள்வது வழக்கம் அந்த வகையில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார்கள் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் போலீஸ் நிலையம் உள்ளே ஒட்டடை அடிக்கப்பட்டு ஒழுங்கற்ற முறையில் இருந்த பொருட்களை ஒழுங்கு படுத்தப்பட்டதுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் கைது சிறையை தூய்மைப்படுத்தியும், புகார் அளிக்கப்படும் தாய்மார்களின் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களை ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் தேவையற்ற பொருட்களை வெளியேற்றியும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×