என் மலர்
உள்ளூர் செய்திகள்

நரி கடித்து இருவர் படுகாயம்
- இரவு ஆட்டுமந்தை காவலுக்காக படுத்திருந்தனர்.
- அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த கருப்பம் புலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வைத்திருக்கும் ஆட்டு மந்தையை, வேதாரண்யம் அடுத்த மணியன் தீவில் கடற்கரையில்மேய்ச்சவுக்கு விட்டுதங்களும் அங்கேயே கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர்.
நேற்று இரவு ஆட்டுமந்தை காவலுக்கு படுத்திருந்தனர்.அப்பொழுது அதிகாலை அங்கு ஆடுகளைபிடிக்க வந்த நரி அங்கு தூங்கிகொண்டி ருந்த கருப்பம்புலத்தை சேர்ந்த மணியன் (வயது 75), காசிநாதன் (70) ஆகிய இருவரையும் கடித்தது. இதில் இருவரும் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story






