search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Screaming"

    • சினேகா கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
    • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் சினேகா (வயது 21). பட்டதாரி. இவருக்கு கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியினை தாங்க முடியாமல் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்ட சினோகா தீ வைத்துக் கொண்டார்.

    அப்போது சினேகாவில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்றனர். அங்கு தீயில் கருகிய நிலையில் இருந்த சினேகாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சினேகா நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு ஆட்டுமந்தை காவலுக்காக படுத்திருந்தனர்.
    • அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த கருப்பம் புலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வைத்திருக்கும் ஆட்டு மந்தையை, வேதாரண்யம் அடுத்த மணியன் தீவில் கடற்கரையில்மேய்ச்சவுக்கு விட்டுதங்களும் அங்கேயே கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர்.

    நேற்று இரவு ஆட்டுமந்தை காவலுக்கு படுத்திருந்தனர்.அப்பொழுது அதிகாலை அங்கு ஆடுகளைபிடிக்க வந்த நரி அங்கு தூங்கிகொண்டி ருந்த கருப்பம்புலத்தை சேர்ந்த மணியன் (வயது 75), காசிநாதன் (70) ஆகிய இருவரையும் கடித்தது. இதில் இருவரும் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    • அரித்துவாரமங்கலம் கடைத்தெரு பகுதியில் சூர்யா என்ற வாலிபர் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியுள்ளார்.
    • கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு காவலர் மணிகண்டனின் கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து விட்டு வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் என்பவர் மீது அரித்துவா ரமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்ற நபர் கத்தியால் காது மற்றும் கழுத்தை கீறியுள்ளார்.

    அரித்துவா ரமங்கலம் கடைத்தெரு பகுதியில் சூர்யா என்ற வாலிபர் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியுள்ளார், இதுகுறித்து பொதுமக்கள் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரை ஏற்றுக்கொண்டு, அங்கு வந்த காவலர் மணிகண்டன், சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளார், அப்போது "என்னை கேட்க நீ யார்"? என்று, தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு காவலர் மணிக ண்டனின் கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

    இதுகுறித்து அரித்துவா ரமங்கலம் கா வல்து றையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் மேல்சிகி ச்சை க்காக காவலர் மணிகண்டன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    • சவுடாம்பிகை அம்மன் கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது.
    • கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மல்லிகை கரகம் எடுத்து செல்லும்போது கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் இந்த ஆண்டு திருவிழாவில் வழக்கம்போல் நிகழ்ச்சிகள் நடைெபற்றது.

    விழாவை முன்னிட்டு டி.குன்னத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் மக்கள் காப்பு கட்டி ஒரு வாரம் விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    மல்லிகை கரகம் எடுத்து வரும்போது பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனம் பூசி கொண்டு கத்தியை கைகளால் பல மாக தட்டியும் தங்களது உடலில் கத்தியை வைத்து தன்னைத் தானே கீறிக் கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர். துஷ்ட சக்திகள் அண்டவிடாமல் தடுக்கும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடலில் கத்தி கொண்டு தன்னை தானே வெட்டி கொண்டு மல்லிகை கரகத்திற்காக ரத்த காணிக்கை கொடுப்பது ஐதீகம். அந்த வகையில் நேற்று நடந்த கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×