search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்காரரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலைவீச்சு
    X

    காவலர் மணிகண்டன்.

    போலீஸ்காரரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலைவீச்சு

    • அரித்துவாரமங்கலம் கடைத்தெரு பகுதியில் சூர்யா என்ற வாலிபர் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியுள்ளார்.
    • கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு காவலர் மணிகண்டனின் கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து விட்டு வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் என்பவர் மீது அரித்துவா ரமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்ற நபர் கத்தியால் காது மற்றும் கழுத்தை கீறியுள்ளார்.

    அரித்துவா ரமங்கலம் கடைத்தெரு பகுதியில் சூர்யா என்ற வாலிபர் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியுள்ளார், இதுகுறித்து பொதுமக்கள் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரை ஏற்றுக்கொண்டு, அங்கு வந்த காவலர் மணிகண்டன், சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளார், அப்போது "என்னை கேட்க நீ யார்"? என்று, தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு காவலர் மணிக ண்டனின் கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

    இதுகுறித்து அரித்துவா ரமங்கலம் கா வல்து றையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் மேல்சிகி ச்சை க்காக காவலர் மணிகண்டன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    Next Story
    ×