search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Control Room"

    • நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
    • வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார் தெரிவிக்கலாம்.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.

    1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஏற்பாடு
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் தேவைகளை நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பக்தர்களிடம் பெறப்படும் புகார்கள் மற்றும் இதர தகவல்களை பெறுவதற்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 8072502744, 04175-2333444, 04175-233345 என்ற தொலைபேசி எண்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது.
    • இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் நாளை ஆர். எஸ் .எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்தில் ஆர். எஸ். எஸ். ஊர்வலம் திண்டி வனம் செஞ்சி ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டு திண்டி வனம் நேருவீதி, வேதங்கர் வீதி, ஆர். எஸ். பிள்ளை வீதி,பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது. ஊர்வலம் வரும் பகுதி, நேரு வீதி, காந்தி சிலை, போன்ற 23 இடங்களில் தற்காலிகமாக கேமிராக்க ளை அமைத்து போலீசார் விடிய விடிய தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தற்காலிக மாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் திண்டிவனம் முழுவதும் வாகன தணிக்கை யிலும் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர்.திண்டிவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு வதாக போலீசார் வட்டா ரத்தில் தெரிவித்தனர். மேலும்கிறிஸ்தவ தேவா லயம், மசூதி, திராவிட கழக அலுவலகம் ஆகிய இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    • வேலூர் சரக டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்
    • சோதனை‌ சாவடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் உள்ள தாமரைப்பாக்கம் மற்றும் அவளூர் போலீஸ் நிலையம் உள்ளது.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்பாளையம் சத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய சோதனை சாவடி கட்டிடங்கள் மற்றும் மொத்தமுள்ள 9 சோதனை சாவடிகளிலும் பொருத்தப்ப ட்டுள்ள 18 அதிநவீன கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமை தாங்கினார்.

    கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திறந்து வைத்து, கேமராக்களின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையி லிருந்து பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்ட ர்கள், சப்-இன்ஸ்பெக்ட ர்கள், போலீசாருக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வ ரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன் ஆகியோர் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர்.
    • விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர். இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.

    இந்நிலையில் இந்த உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கினர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் 10 பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம், நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலகம், சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அலுவலகம் மற்றும் நெல்லை, பாளை, மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாசில்தார் அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த அறைகளுக்கு நேரில் சென்று தேவையான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வருகிற 30-ந் தேதி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தினமும் காலை முதல் மாலை வரை மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தி ற்கான விண்ணப்ப ப்பதிவு முகாம்கள் கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766 ரேஷன் கடைகளில் 4,34,663 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், முதற்கட்ட மாக 580 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 2,75,356 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்டு 4 வரை நடைபெற்ற முகாம்களில் 80 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில் 41 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 36,166 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சின்னசேலம் வட்டத்தில் 39 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 31,478 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சங்கராபுரம் வட்டத்தில் 52 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 46,690 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், கல்வராயன்மலை வட்டத்தில் 11 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 6,901 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 18 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 16,787 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 25 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 21,285 ரேஷன் கார்டுதா ரர்களின் விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 186 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,59,307 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்கள், புகார்கள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தவிர, அனைத்து தாசில்தார் அலுவலக ங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்ப ட்டுள்ளன. எனவே அந்தந்த பகுதி பொதுமக்கள் அவர்களது தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
    • வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையத்தை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு காணொளி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-

    மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் அதன் வழியாக செல்லும் வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

    வேலூர் மாவட்டத்தில் 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்ற சம்பவங்களை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பு கொள்ளாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநில ரெயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், ஒடிசா மாநில முதல்-அமைச்சரையும், அலுவல ர்களையும் தொடர்பு கொண்டு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணம் செய்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை, உறவினர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 04172- 271766 மற்றும் 271966 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க புதுவை அரசு கட்டுப்பாடு அறையை திறந்துள்ளது.
    • புதுவையை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும்

    புதுச்சேரி:

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் புதுவையை சேர்ந்தவர்களும் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படு கிறது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க புதுவை அரசு கட்டுப்பாடு அறையை திறந்துள்ளது.

    இதுதொடர்பாக புதுவை கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசாவில் நடத்த கோரமண்டல் ரெயில் விபத்தில் புதுவையை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும் மற்றும் அவரச உதவிக்கும், புதுவை மாநில அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கீழ்க்காணும் தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும்: 1070, 1077,112, 0413-2251003, 2255996. இந்த அவசரகால மையம் 24 மணி நேரமும் இயங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவித்தனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அறையினை உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் திறந்து வைத்தார். இதில் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

    மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கு உதவி புரிந்த சன் பீவல்ஸ்- சன் மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் கௌதம், சுகுணா நிறுவனத்தின் பொது மேலாளர் அருள் ஆனந்த் கிருஷ்ணன், மற்றும் எஸ் .எம். டிராவல்ஸ் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவித்தனர்.

    • நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
    • அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணி–யாற்றி வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 49).

    இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்–சந்திரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா இவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ஏட்டு ஜெயச்சந்திரன் மனைவி காயத்ரி சேலம் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல–கத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு ஜெயசூர்யா என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். ஜெயச்சந்திரன் கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று மழை பரவலாக இடி, மின்னலுடன் பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, பெருமழையின் காரணமாகவும், இடி, மின்னல் தாக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் உடமைகளுக்கும் சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், அவற்றினை தடுக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு தேவையான தற்காலிக தங்க வைப்பதற்கான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் வடகிழக்கு பருவமழைக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் அவர்களின் எல்லைகளில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால் கால்வாய்கள் ஆகிய அடைப்பு இருப்பின் அவற்றை அகற்றவும், மழை நீர் தங்கு தடையின்றி செல்லவும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறையினருக்கு அவர்களது பள்ளி கல்லூரிகளில் பழைய இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிப்பதற்கான கடிதங்கள் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுப்பணி த்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களும் ஆய்வு செய்து இடிந்து விடக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிப்பதற்கான கடிதங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மின் துறையினருக்கு தாழ்வான நிலையில் செல்லும் மின் தடங்கள், சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பங்களை கண்டறிந்து அவைகளை அகற்ற சீர் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மழை மற்றும் இடி, மின்னலின் போது நீர் நிலைகளில் குளிப்பதையும், வெளியில் வருவதையும், மரங்களில் கீழ் நிற்பதையும், ஆடு மாடுகளை மின் கம்பங்களில் கட்டுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அரக்கோணம் 04177-236360, 9445000507, ஆற்காடு 04172-235568, 9445000505, வாலாஜா 04172-299808, 9445000506, சோளிங்கர் 04172-290800, 9944353601, நெமிலி 04177-247260, 9789641611, கலவை 8012729137 இந்த எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 04172-273166 / 273188 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோ வடிவில் வாட்ஸ் அப் 9489668833 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.

    நடப்பில் உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிர் சேதங்கள் இன்றி இருக்க அனைவரும் உதவ வேண்டும்.இவ்வாறு ம அதில் கூறப்பட்டுள்ளது.

    ×