search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "80 percent"

    • கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தி ற்கான விண்ணப்ப ப்பதிவு முகாம்கள் கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766 ரேஷன் கடைகளில் 4,34,663 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், முதற்கட்ட மாக 580 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 2,75,356 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்டு 4 வரை நடைபெற்ற முகாம்களில் 80 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில் 41 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 36,166 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சின்னசேலம் வட்டத்தில் 39 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 31,478 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சங்கராபுரம் வட்டத்தில் 52 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 46,690 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், கல்வராயன்மலை வட்டத்தில் 11 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 6,901 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 18 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 16,787 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 25 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 21,285 ரேஷன் கார்டுதா ரர்களின் விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 186 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,59,307 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்கள், புகார்கள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தவிர, அனைத்து தாசில்தார் அலுவலக ங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்ப ட்டுள்ளன. எனவே அந்தந்த பகுதி பொதுமக்கள் அவர்களது தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×