search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Task Force"

    • பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது.
    • இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் நாளை ஆர். எஸ் .எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்தில் ஆர். எஸ். எஸ். ஊர்வலம் திண்டி வனம் செஞ்சி ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டு திண்டி வனம் நேருவீதி, வேதங்கர் வீதி, ஆர். எஸ். பிள்ளை வீதி,பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது. ஊர்வலம் வரும் பகுதி, நேரு வீதி, காந்தி சிலை, போன்ற 23 இடங்களில் தற்காலிகமாக கேமிராக்க ளை அமைத்து போலீசார் விடிய விடிய தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தற்காலிக மாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் திண்டிவனம் முழுவதும் வாகன தணிக்கை யிலும் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர்.திண்டிவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு வதாக போலீசார் வட்டா ரத்தில் தெரிவித்தனர். மேலும்கிறிஸ்தவ தேவா லயம், மசூதி, திராவிட கழக அலுவலகம் ஆகிய இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    • மத்திய அரசு வேலைவாய்ப்பு முகாம்களில் 5.60 லட்சம் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடி இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மத்திய இணை மந்திரி சோபா கரண்ட்லஜே கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ் 8-வது முகாம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று அதன் மூலம் மொத்தம் 51 ஆயிரம் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அதனடிப்படையில் சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 206 நபர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற 7 முகாம்களின் மூலம் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், காவல்துறை துணைத்தலைவர் (சத்தீஸ்கர்) விஜயகுமார் டோக்ரா, கமாண்டெண்ட் சுரேஷ்குமார் யாதவ், மத்திய வேளாண்மை இயக்குநர் வெங்கட சுப்ரமணியன், இந்தோ திபத் எல்லைக்காவல் படையைச் சார்ந்த துணை கமாண்டெண்ட்கள் துர்கேஷ் சந்திரா, தீபக் சிமல்டி, உதவி கமாண்டெண்ட் ராகுல் ராணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×