search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓபிஎஸ் அணி"

    • இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.

    இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

    இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    • அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது.
    • கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

    பவானி:

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி நகரில் இன்று மாலை காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆப்பக்கூடல் கோவிந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் பவானி நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பரிந்துரைப்படி நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு பவானி போலீசில் ஓ.பி.எஸ். அணி மீது புகார் செய்தனர்.

    அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சாராத மாற்றுக்கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடி, சின்னங்கள் போஸ்டர்கள் பயன்படுத்தி அ.தி.மு.க.வின் மாண்பை கெடுக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தனர்.

    பவானி நகரில் ஓ.பி.எஸ். அணியினர் இன்று நடத்தும் செயல் வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×