என் மலர்
நீங்கள் தேடியது "OPS Team"
- முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்தார்
- ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார்
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.வில் இணைந்தார்
அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரன் அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குன்னம் ராமச்சந்திரன் 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- 2021 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் ராமச்சந்திரனை தோற்கடித்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வென்றார்
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து நேற்று தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை எனவும், குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்?
அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது திமுக வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுகவில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் அ.தி.மு.க உட்கட்சி மோதலால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவரும் இவர், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
- எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
- அதிமுக உட்கட்சி மோதலில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்தவர்
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து இன்று தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்?
அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது திமுக வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுகவில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் அ.தி.மு.க உட்கட்சி மோதலால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவரும் இவர், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் அணி முடிவெடுப்பதில் தாமதம் செய்வதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
- ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
- விரைவில் அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளன. குறிப்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக தரப்பு கூறிவரும் நிலையில், அதிமுகவுடன் யார் யார் கூட்டணி? அமமுக, ஓபிஎஸ் தரப்பு, ஆகியோர் அதிமுகவில் இணைவார்களா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் விஜய்யின் தவெகவில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தவெகவுடன் கூட்டணி வைக்க ஏழு கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே வேற்று கட்சியினரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். கடந்த மாதம் செங்கோட்டையன் இணைந்தநிலையில், இன்னும் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். விரைவில் அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசிடி பிரபாகர் ஜெயலலிதா தலைமையிலான 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அந்த வகையில் ஜேசிடி பிரபாகரும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து நீங்கி தவெகவில் இணைந்துள்ளார்.
- நெல்லை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி புதிய நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சிலைக்கு வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி மாநகர் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி மணிமண்டபத்தில் உள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட இணைசெயலாளர் செல்லசித்ரா, துணைசெயலாளர் சரவணன், மகளிரணி துணைசெயலாளர் பால்கனி, பாளை சட்டமன்ற தொகுதி இணைசெயலாளர் சாம்சன் ஆசிர்ராஜ், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் நிர்வாகிகள் ராஜபிரபு, முண்டசாமி, லெனின், இசக்கிராஜா சர்மா, வேல்பாண்டியன், மனோகரன், செல்வகணபதி, செல்வபிரதீப், தமிழ்செல்வி, பாலசுப்பிரமணியன், மகாராஜன், வக்கீல் பீர்முகைதீன், அருள்இமானுவேல், ஜெய்வெங்கட், காஜாமைதீன், கிருஷ்ணன், சுந்தர்ராஜ், காசிவிஸ்வநாதன், ஜெகநாதன் என்ற ஜெகன், துரைப்பாண்டியன், டோமினிக் பாண்டி, நம்பிராஜன், பரமசிவன், பீர்முகம்மது, கந்தையா, லெட்சுமணன், ராமமூர்த்தி, சாம்சன் சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- பஸ்சில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் காமராஜ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் செல்வகணபதி, சிறுபான்மையினர் அணி செயலாளர் சாந்தகுமார், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் லெனின், மாவட்ட அவைத்தலைவர் ஜோதி பரமசிவன், பொருளாளர் மணிமாளிகை கணேசன், துணைச்செயலாளர் டால் சரவணன், மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, இணைச்செயலாளர் செல்வசித்ரா, மாணவ ரணி செயலாளர் செல்வபிரதீப், பேரூர் செயலாளர்கள் தங்கப்பல் பரமசிவன், பீர்முகைதீன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர்ராஜ், கிருஷ்ணன, ஜெகன், சிதம்பரம், வள்ளல் வைகுண்டம், பகுதி செயலாளர்கள் ஸ்டீபன், வெங்கட், நல்லி சுப்பையா, காஜா மைதீன், தொகுதி செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் நிர்வாகிகள் முத்து சரவணன், லெட்சுமணன், சாமி, வக்கீல் அணி வேல்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பஸ்சில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மதுரை
இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது.
- தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது.
விழுப்புரம், மே.18–-
விழுப்புரம் மாவ ட்டம்,மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்தவ ர்கள் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். அவர்களை நேற்று ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாள ர்ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர்அவர் கூறியதாவது:-
மரக்காணம்,எக்கியார் குப்பம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க ஓ.பி.எஸ்., கூறியதின் பேரில் இங்கு வந்துள்ளோம். .செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோல் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளார்.அரசினுடைய மெத்த னப்போக்கு காரணமாகவும் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது. அரசு முறையான, சீரான ஒரு மதுவிலக்கு கொள்கை யை உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு தனது அலட்சியப் போக்கை விட்டு விட்டு சரி செய்ய வேண்டும். உளவு, காவல்,அமலாக்கம் போன்ற துறைகளில் பணிபுரி வோரை தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது. மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு உடனடியாக மாற்ற ங்கள் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் கோரிக்கையை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட செயலா ளர் ஏழுமலை, துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் வேலு, விழுப்புரம் நகர செயலாளர் கமருதீன், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெயரா மன், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, நகர செயலா ளர் சங்கரலி ங்கம், அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள் ஏழும லை ,துரை, மாவட்ட ஜெயல லிதா பேரவை தனுசு ஜெயரா மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்உ டனிருந்தனர்.
- அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது.
- கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
பவானி:
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி நகரில் இன்று மாலை காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆப்பக்கூடல் கோவிந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.
இதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் பவானி நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பரிந்துரைப்படி நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு பவானி போலீசில் ஓ.பி.எஸ். அணி மீது புகார் செய்தனர்.
அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சாராத மாற்றுக்கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடி, சின்னங்கள் போஸ்டர்கள் பயன்படுத்தி அ.தி.மு.க.வின் மாண்பை கெடுக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தனர்.
பவானி நகரில் ஓ.பி.எஸ். அணியினர் இன்று நடத்தும் செயல் வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒ.பி.எஸ். அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ராமநாதபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 1-ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது எனவும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பி.எஸ். வேட்பாளர் போட்டியிடுவார் எனவும், அதற்காக இப்போதே பணிகளை தொடங்கி விட்டதாகவும், தொண்டர்கள் தீவிர பிரசா ரத்தில் ஈடுபடவேண்டும் என்றும் தர்மர் எம்.பி. கேட்டுக்கொண்டார். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.
- ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.
- கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்று தர தி.மு.க.வை வலி யுறுத்தி ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.
நெல்லை வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே ஓ.பி.எஸ் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரம சிவன், நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தச்சநல்லூர் பகுதி செயலாளர் சொர்ணம் வரவேற்றார்.
தொடர்ந்து கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த தி.மு.க. அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆவின் அண்ணசாமி, துவரை பேச்சிமுத்து, மணி மூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், ஓ.பி.எஸ். அணி இளைஞர் பாசறை செயலாளர் லெனின், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலசுப் பிரமணியன், மாணவரணி செயலாளர் செல்வ பிரதீப், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வ கணபதி, மகளிர் அணி செயலாளர் தமிழ் செல்வி,
நாங்குநேரி சட்ட மன்ற தொகுதி செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பகுதி செயலாளர்கள் நெல்லை சுப்பையா, காஜா மைதீன், ஒன்றிய செயலா ளர்கள் ராமர், டோமினிக் பாண்டி, தங்கப்பல் பரம சிவன், பொதுக்குழு உறுப்பி னர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளை வடக்கு பகுதி செயலாளர் அருள் இம்மானுவேல் ஸ்டீபன் நன்றி கூறினார்.
- ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓ.பி.எஸ். தரப்பு நகர செயலாளர் கோபி சங்கர் தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு கலந்துகொண்டனர். இதில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 100 பேர் ஓ.பி.எஸ். அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் நகர அவை தலைவர் சாஜாத் உசேன், சிறுபான்மை நகர செயலாளர் ஆதில் அஹமத், சிறுபான்மை அவைத் தலைவர் அத்தாவுல்லா, சிறுபான்மை துணை செயலாளர் நாசிர் அஹமத், மாவட்ட பிரதிநிதி சலீம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.






