search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramachandran"

    • 17 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படுவோருக்கு 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
    • விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ந்தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும்.

    ஊட்டி,

    தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண பங்குதாரா், விமான பங்கு தாரா், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம்,

    சுற்றுலாவை ஊக்குவிக்கும் சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், சுற்றுலாப் பிரிவுகளின் ஏற்பாட்டாளா், சாகசம் மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்தின் சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகியவை உள்பட 17 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படுவோருக்கு 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    அதன்படி 2022-2023-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம். இதற்காக அவர்கள் சுற்றுலா இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து வருகிற 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    அப்படி அனுப்பப்படும் விண்ணப்பங்கள், விருது குழுவினரால் பரிசீலிக்கப் பட்டு தோ்வு செய்யப்படும் நபா்களின் விவரம் உரிய வா்களுக்கு தெரிவிக்கப்படும்.

    இந்த விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ந்தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.53.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
    • விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சித் துறை சாா்பில் அதிகரட்டி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேமந்தாடா முதல் பூசானிதுறை வரை ரூ.28.65 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகள் முடிந்து உள்ளது

    இதேபோல சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் தூரட்டி கிராமத்தில் தாா் சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.53.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    இதனைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரட்டியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூட சமையலறை மேற்கூரை பணி, 2022-2023 நகா்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.87.50 லட்சம் மதிப்பில் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டேரி முதல் கேத்தி பாலாடா வரை மற்றும் கோடேரி கிராம தாா் சாலை மேம்பாட்டுப் பணி, தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ரூ.24.50 லட்சம் மதிப்பில் வளம் மீட்புப் பூங்காவில் கான்கிரீட் தரைத்தளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி ஆகியவை உள்பட மொத்தம் ரூ.1.22 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

    முன்னதாக, அதிகரட்டி தோ்வு நிலை பேரூராட்சி வளம் மீட்புப் பூங்காவில் உரம் விற்பனை நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர், அங்கு உள்ள விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார். மரக்கன்றுகளை நடவு செய்தார். ஜெகதளா, உலிக்கல், அதிகரட்டி ஆகிய பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்த சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள் 4 பேருக்கு உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

    இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷணகுமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இப்ராகிம் ஷா, கேத்தி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) நடராஜன், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு மழை மிக அவசியம்.
    • நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.

    ஊட்டி:

    நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.58 லட்சம் செலவில் குன்னூர் தாலுகா பந்துமை முதல் ரேலியா டேம் வரை தார்ச்சாலை, பந்துமையில் ரூ.4 லட்சம் மதிப்பில் வெள்ளத்தடுப்பு சுவர், அருவங்காடு ஒசட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், காரக்கொரையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்ட நீர்தேக்கதொட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கூடலூர், ஊட்டி, குந்தாவிலும், வடகிழக்கு பருவமழை கோத்தகிரி, குன்னூரிலும் அதிகமாக பெய்யும்.

    கடந்த வருடம் 239 மி.மீட்டர் மைம், நடப்பாண்டில் 264.2 மி.மீட்டர் மழை இன்று வரை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மழை மிக அவசியம். கூடலூரில் பெய்து வரும் இந்த மழையால் அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.

    தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டதால் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதன் ஒருபகுதியாக பேரிடர் மீட்பு குழுவினர் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து துறை ஊழியர்களும் தயார்நிலையில் இருந்தனர். இதனால் நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.

    மழை தொடங்குவதற்கு முன்பாகவே கூடலூர், ஊட்டியில் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால் இந்த பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவுமில்லை.

    இருந்தபோதிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மணல் மூட்டைகளும், தீயணைப்புத்துறை மூலம் பவர்சா கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், கோத்தகிரி தாசில்தார் கோமதி, ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
    • நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லையில் கொக்கிரகுளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டலை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நடத்தி வருகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், திருக்குறுங்குடி கோவில், உவரி கப்பல் மாதா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் திட்டப் பணிகள்.
    • பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட வனத்துறை நடவடிக்கை.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இணைப்புச் சாலைப் பணிகள் ரூபாய்.294.21 கோடி மதிப்பிலும், தெரு விளக்குகள் ரூபாய்.3.79 கோடி மதிப்பிலும், சோலார் மின் விளக்குகள் ரூபாய்.16.99 கோடி மதிப்பிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூபாய் 79.69 கோடி மதிப்பிலும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், கூடுதல் திட்டங்களுக்காக ரூபாய்.93.99 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஆணையின்படி பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட பல்வேறு பணிகள் வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

    நீதிமன்ற வழிகாட்டுதழின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவும், பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதி, கல்வி, விவசாயம், தொழில் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க முதல்கட்டமாக 700 எக்டேர் பரப்பளவில் பணிகளை மேற்கொள்ள ரூபாய்.535.21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் பலியான தலைமை ஆசிரியர் ராமச்சந்திரனின் உடலுக்கு ஆண்டிப்பட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் (வயது 69). இவரது மனைவி நாகரத்தினம் (67). இவர்கள் இருவர் உள்பட அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றனர்.

    நேபாளம் வழியாக கைலாய மலைக்கு சென்ற போது மோசமான வானிலை காரணமாக ராமச்சந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் வெங்கடேஷ் நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராமச்சந்திரன் உடலை பெறுவதற்காக அவர்கள் 2 பேரும் நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு சென்றனர்.

    அங்கு ராமச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மகன் வெங்கடேசன் நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் காட்மாண்டுவில் இருந்து நேற்று மாலை ராமச்சந்திரனின் உடல் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு பகல் 12.30 மணியளவில் உறவினர்கள் கொண்டு வந்தனர்.

    அவரது வீட்டு முன்பு ராமச்சந்திரன் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் கிராம மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்படுகிறது. #tamilnews
    ×