search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mercenary"

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிவகாசி அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • திருத்தங்கல் ேபாலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ் கரித்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இளையமகன் பொன்னு பாண்டி (23). கூலி வேலைக்கு சென்ற இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக வசித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு பொன்னுபாண்டி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காளீஸ்வரி என்பவர் தனது மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். பட்டாசு வெடி சத்தத்தில் அந்த மாடுகள் மிரண்டன.

    உடனே காளீஸ்வரி வீரபாண்டியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதையடுத்து அங்கு வந்த பொன்னு பாண்டியின் சகோதரர் முனிராஜ் இருவரையும் சமாதானம் செய்துவைத் தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வீரபாண்டி முனிரா ஜிடம், இந்த பிரச்சினை யில் நீ தலையிடாதே என்று எச்சரித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பின்னர் வீரபாண்டி தனது தோட்டத்திற்கு சென்றார். வடமலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவ ருக்கு சொந்தமன இந்த தோட்டத்தை வீரபாண்டி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்கிடையே பொன்னு பாண்டி, முனிராஜ் ஆகி யோரை பத்திரமாக பார்த் துக்கொள்ளுமாறும், பிரச்சி னைகளுக்கு செல்லவேண் டாம் என்று அறிவுரை கூறு மாறும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வத்தி டம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு பொன்னுபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியின் தோட்டத் திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதுபற்றி அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் செல்வம் அங்கு சென்றுபார்த்தபோது, பொன்னுபாண்டி அரிவா ளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந் தார்.

    அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பொன்னுபாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார், வடமலாபுரம் கார்த்திக், வீரபாண்டி, அசோக் என்ற அய்யாதுரை உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகி றார்கள்.

    சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,ராதா. இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது மனைவி சுமதிதனது மகனுடன் அதே பகுதியில் வசித்துவந்தார்.சரவணனுக்கும் சுமதிக்குமிடையே வீட்டு மனை பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும்போலீசார் சுமதி வீட்டில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்துவீட்டினை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.

    இதற்கிடையில்கூலிப் படையாக செயல்பட்ட பண்ருட்டி போலீஸ் லைன் 3- வது தெரு ரவி மகன் கோகுல் (வயது 19) ,தேவராஜ் மகன்பாலாஜி என்ற அருண்பாலாஜி (வயது 26),ராதாகிருஷ்ணன்மகன் பாலாஜி (வயது 27),பாலமுருகன் மகன்மணிகண்டன் (வயது 20) ஆகி ய 4பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரிகிருஷ்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்து சென்னை - கும்பகோணம் சாலையில் ப.வில்லியனூர் கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆனந்தராஜ் (38). இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி உறவு முறைகொண்டவர்கள். இருவருமே விவசாயக் கூலி மற்றும் சமையல் வேலை தொழிலாளிகள். இதில் ஆனந்தராஜ் வீட்டில் இருந்த மரத்தின் இலைகள், அரிகிருஷ்ணன் வீட்டில் விழுந்து வந்தது. எனவே, மரக்கிளைைய வெட்டுமாறு ஆனந்தராஜிடம் அரிகிருஷணன் கூறியுள்ளார்.

    இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்க வந்த ஆனந்தராஜ் நடந்தது தொடர்பாக மனைவி மற்றும் மகன்களிடம் கூறினார். தொடர்ந்து அனைவரும் அரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பேசினர். அப்போது வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. 

    அப்போது ஆனந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அரிகிருஷ்ணனின் தொடையில் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அரிகிருஷ்ணன் மயங்கிவிட்டார். இது குறித்த தகவலி்ன் பேரில் வளவனூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தொடர்ந்து அரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜ், அவரது மனைவி விஜயா, மூத்த மகன் ஈஸ்வரன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆனந்தராஜின் 17 வயது மகன், 15 வயது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர்
    • கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சுப்புராய நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். 

    மேலும், அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்தும் போலீசார் விசாரித்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மகும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.   இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மளிகை கடைக்காரருக்கும் சுந்தரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது. மளிகை கடைக் காரரின் மனைவிக்கு சுந்தரமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை வெளியில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மளிகை கடைக்காரரின் மனைவி கடந்த ஆண்டு இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த மளிகை கடைக்காரர் கூலிப் படையை வைத்து ஸ்டூடியோ உரிமையாளர் சுந்தரமூர்த்தியை கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மளிகை கடைக்காரரை பிடித்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி கூலிப்படையை சேர்ந்த மர்மக்கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் அனைவரும் இன்று மாலை அல்லது நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

    • மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி. கொடல வாடி பகுதியைச் சேர்ந்த வர் முத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு ஏரி வேலைக்கு சென்றார். மீண்டும் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசாருதீன் வழப்பதிவு செய்து கூலித் தொழிலாளி வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மோகனூர் தாலுகா லத்துவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பலி.
    • நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றவர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா லத்துவாடி ஊராட்சி நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் ராஜ் (வயது 55) . இவரது மனைவி பாவாயி (வயது 50) . நேற்று முன்தினம் இரவு பாவாயி மாரியம்மன் கோவில் அருகில் கழிப்பிடம் சென்றுவிட்டு நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது 26) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாவாயி மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள், மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே பாவாயி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுரேஷ்குமார் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாவாயி கணவர் ராஜ் மோகனூர் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை அருகே கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கணபதி பாண்டியனின் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கவிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் 1-ந் தேதி இரவு சந்தோஷ் ராஜாவின் வீட்டிற்கு ஒரு காரில் 5 பேர் கும்பல் வந்தது. அப்போது வீட்டில் சந்தோஷ் ராஜா மட்டும் இருந்தார். உடனே அந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் ஏற்றி சாத்தான்குளம் நோக்கி கடத்திச்சென்றது. வழியிலேயே அவரை 5 பேரும் சரமாரியாக தாக்கினர். பின்னர் படுகாயத்துடன் அவரை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு தப்பி சென்று விட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் ராஜா உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக கணபதி பாண்டியன் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகநேரியை சேர்ந்த சிவராமன், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ், சங்கரமூர்த்தி, பூவேஸ், பாலா ஆகிய 5 பேரை பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் சந்தோஷ் ராஜா கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட சந்தோஷ் ராஜாவின் அத்தை வீடு ஆறுமுகநேரியில் உள்ளது. இதனால் அவர் ஆறுமுகநேரிக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் என்பவரின் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் சந்தோஷ் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுடன் முகநூலிலும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. உடனே அவர் சந்தோஷ் ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு பலமுறை எச்சரித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் ராஜா, ராதாகிருஷ்ணன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் சேர்ந்து சந்தோஷ் ராஜாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

    இதற்கு ஏதுவாக சந்தோஷ் ராஜாவின் பெற்றோர் நெல்லையில் உள்ள இளைய மகனின் வீட்டில் தங்கியிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் ராஜாவை கூலிப்படையை ஏவி காரில் கடத்திச்சென்று கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திசெல்வி மற்றும் போலீசார் கூலிப்படையைச் சேர்ந்த சிவராமன் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் மற்றும் இதில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த ராதாகிருஷ்ணனை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர். அவரை உவரி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தோஷ் ராஜா கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    ×