search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest"

    • குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.
    • குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேக்கோரை கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த குரங்குகள் அவ்வப்போது, வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தன.

    இந்நிலையில் இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் வாயில் குட்டியை கவ்வி கொண்டு சுற்றியது. குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.

    ஆனால் அருகே சற்று தூரத்தில் இருந்து பார்த்த போது, குரங்கு குட்டி இறந்த நிலையில் இருந்தது. இறந்த தன் குட்டியை என்ன செய்வது என்று தெரியாமல், வாயில் கவ்வியபடி குட்டியுடன் அந்த கிராமத்தையை சுற்றி சுற்றி பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

    சக குரங்குகள் பொதுமக்கள் யாரையும், குரங்கின் அருகே விடாமல் காத்து வருகின்றனர். பொதுமக்கள் யாராவது மீட்க சென்றால் குரங்கள் ஒன்றாக சேர்ந்து மக்களை நோக்கி வருகிறது.

    இதையடுத்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் அந்த பகுதிக்கு வரவே இல்லை. குரங்கு இறந்த தனது குட்டியுடன் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, குரங்கு இறந்த தனது குட்டியுடன் சுற்றி வருகிறது. இறந்த குரங்கு குட்டியில் இருந்து மற்ற குரங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    • யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புலி மற்றும் யானை ஒரே நேரத்தில் ரோட்டை கடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொதுவாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது சகஜம் தான். ஆனால் புலி நடமாட்டம் இருப்பதை கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இது குறித்து பவானி சாகர் வனத்துறையினர் கூறும்போது,

    பவானிசாகரில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் 2 பக்கமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்பொழுது யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    ஆனால் புலி நடமாட்டம் மிகவும் அரிதான ஒன்று. எனவே இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். அதேபோல் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.
    • ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே உள்ள அர்த்தம் வலசா என்ற இடத்தில் தண்டவாளத்தில் 7 காட்டு யானைகள் நின்று அட்டகாசம் செய்தன.

    இந்த கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.

    அந்த யானையை காணாமல் மற்ற யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன. 7 யானைகளும் தண்டவாள பகுதிகளிலேயே நின்றன. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனப்ப குதிக்குள் விரட்டினர்.

    இதனை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து சீரானது.

    • விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

    இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர். 

    • 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், உப்பட்டி, அத்திகுன்னா, பந்தலூர் இரும்பு பாலம், இன்கோ நகர், காலனி அட்டி, நெல்லியாளம் டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கரடி ஒன்று சுற்றி திரிந்து வந்தது.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் கரடி, வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வந்தது. குறிப்பாக வீட்டில் உள்ள எண்ணை உள்ளிட்டவற்றை உடைத்து குடித்து வந்தது.

    தொடர்ந்து இதுபோன்று கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார், உதவி வனபாதுகாவலர் கருப்பையா, தேவாலா வனசரகர் சஞ்சிவி, பிதர்காடு வனசரகர் ரவி மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து, கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ள அத்திகுன்னா, அத்திமாநகர், புவலம்புழா உள்பட 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில், கரடி சிக்கியது. கரடி சிக்கிய தகவலை வன ஊழியர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கால்நடை டாக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் பிடிபட்ட கரடியின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை முதுமலை வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் கரடியை விடுவித்தனர்.

    கடந்த 2 மாதங்களாக அத்திகுன்னா, நெல்லியாளம் டேன்டீ, பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதம்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 60 காட்டுயானைகளை வனத்துறையினர் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டியிருந்த நிலையில், அவை மீண்டும் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிக்கு திரும்பின.

    இந்த நிலையில், சானமாவு காட்டில் 40 யானைகள் மற்றும் 20 யானைகள் என 2 குழுக்களாக 60 யானைகள் பிரிந்துள்ளன.

    மேலும் இவை தனித்தனியாக அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து நடமாடும் அபாயம் உள்ளது. எனவே, சானமாவு, போடூர், ஆழியாளம், ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும், யானைகளை கோபப்படுத்தும் விதமாகவோ, பொதுமக்கள் செல்பி எடுக்க முயற்சிக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆழியாளம் கிராமத்திற்குள் 40 யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    • அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.

    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே சானமாவு வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தஞ்சமடைந்தது. அந்த யானைகள் கூட்டத்தை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது, யானைக் கூட்டங்களை மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும், இதேபோல் இந்த ஆண்டும் ஜவளகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் புகுந்தது.

    பல குழுக்களாக பிரிந்த யானை கூட்டங்கள் 50-க்கும் மேற்ப்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.

    தற்போது ராகி, நெல் அறுவடை சீசன் காலம் என்பதால் யானைக் கூட்டங்களை விரட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து யானைக் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் நேற்று மாலை முதல் 20-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளை விரட்டும் பணியை ஈடுபட்டனர்.

    அப்போது 50-க்கு மேற்ப்பட்ட யானைகள் தனது குட்டிகளுடன் கூட்டமாக கெலமங்கலம் உத்தனப்பள்ளி சாலையை கடந்து சென்றது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அவைகள் அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.

    தற்போது ராயக் கோட்டை வனச்சரகர் வெங்கட்டாசலம் தலைமையில் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
    • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

    இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

    சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

    கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

    வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு விஷப்பாம்பு சாலையின் குறுக்கே சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது.
    • பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில், மோட்டார் வாகன உதிர் பாகங்கள் விற்கும் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் எப்பொழுதும் அதிக அளவில் இருக்கும். மேலும் இரவு நேரம் வேலை முடித்து வீட்டிற்கும் அருகில் உள்ள கிராமத்திற்கும் செல்லும் பொது மக்கள் அந்த சாலையை கடந்து செல்வதால் எப்பொழுதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெருசலாகவும் அந்தப் பகுதி இருக்கும்.சமீபத்தில் அந்த சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைத்து புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த சாலையில் குறுக்கே புகுந்த ஒரு விஷப்பாம்பு சாலையின் குறிக்கே புதிதாக எடுக்கப்பட்ட சுவற்றினால் அந்த சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது. மேலும் அந்தப் பாம்பை சுற்றி கூட்டம் கூடி வாகனங்கள் என்றதால் பதற்றம் அடைந்து சாலையில் குறுக்கே அங்குமங்கமாக ஓடியதால் சிறிது நேரம் அந்த பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் வாகனங்கள் ஏதும் அந்த பாம்பின் மீது ஏறி விடாமல் பாதுகாத்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பினை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காட்டுபகுதியில் விட்டார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    • பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல.
    • கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே கூட்லு கேட் பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்லு கேட் பகுதியில் இருந்து நகர பகுதியான ஓசூர் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் ஒரு வீட்டின் அருகே சாலையில் சிறுத்தை ஒன்று தென்படுகிறது.

    அப்போது அந்த சாலையில் உள்ள தெருநாய்கள் விரட்டியதும் சிறுத்தை அங்கிருந்து தப்பி விடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கூட்லு கேட் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட், சிங்கசந்திரா, குட்லு கேட் ஆகிய பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் குழு தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது பெரிய பூனையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. நேற்றிரவு ஒரு குழுவை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அங்கு அனுப்பியிருந்தோம். பின்னர் மேலும் ஒரு குழு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

    இதனிடையே பரப்பன அக்ரஹாரா போலீசாரும் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன. 

    • வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள்ளன.
    • ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    சதுரகிரி சுந்தர மகாலிங் கம் சுவாமி மலையில் மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடை பெறும். நவராத்திரி திரு விழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கபட்டது. ஆனால் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலிப்குமார் ஆஜரானார்.

    வனத்துறை சார்பில் ஆஜ ரான வக்கீல், சாத்தூர் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. புலிகள் சரணாலய பகுதியாகவும் உள்ளதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் திருவிழா நேரத்தில் பக்தர்களை அனுமதித்த போது பக்தர்கள் மாற்றுவழியில் வனத்திற்குள் நுழைந்து உணவு சமைத்ததால் வனத்தில் தீ பற்றிய சம்பவம் ஏற்பட்டு வன விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.

    குறைந்த அளவில் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களை அனுமதிப்பது என்பது இயலாதது. வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள் ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் 18 மடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு உள்ளன. போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்று தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, பக்தர்கள் மற்றும் சாதுக்களின் உணவுர்களை புரிந்து கொண்டு ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு அனுமதி வழங்க முடியாதா? பக்தர்களை கோவிலில் தங்க அனுமதிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரமாவது தரிசனத்திற்கு அனுமதிக்கலாமே? அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கலாமே.

    வனத்துறைக்கு நிறைய பணிகள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என கேட்பார்கள். அனுமதி கொடுத்தால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மலை போல போட்டுவிட்டு செல்வார்கள். இது தான் வாடிக்கையாக நடக்கிறது.

    அன்னதானம் போடுகிறோம், திருவிழா நடத்துகிறோம் என கூறி பணத்தை வசூல் செய்து கோவில் பெயரை சொல்லி வனத்தை மொத்தமாக குப்பைக்காடாக மாற்றுகிறீர்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    மேலும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை வனப்பகுதியில் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் மதுரை விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

    • சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பெங்க ளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்குள்ள வனப்பகுதியில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி ரோட்டை கடக்கும். அப்போது யானைகள் ரோட்டோரம் உள்ள மரம், செடி, கொடிகளை பறித்து தின்பது வழக்கம்.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் என்ற இடத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் 2 குட்டிகளுடன் சாலையோ ரம் நடந்து வந்தது. குட்டிகள் நடுவில் நடந்து வர இருபுறமும் இரு யானைகள் பாதுகாப்புடன் அழைத்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டனர். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும்போது, வன ப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் உலா வருகின்றன. வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. வாகன ஓட்டிகள் ஆர்வம் மிகுதியால் வாகனங்களை விட்டு கீழே இறங்கி போட்டோவோ, வீடி யோக்கள் எடுக்க முயற்சிக்க கூடாது. யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.

    ×