search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் திரிந்த பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடிப்பட்டது
    X

    சாலையில் திரிந்த பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடிப்பட்டது

    • ஒரு விஷப்பாம்பு சாலையின் குறுக்கே சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது.
    • பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில், மோட்டார் வாகன உதிர் பாகங்கள் விற்கும் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் எப்பொழுதும் அதிக அளவில் இருக்கும். மேலும் இரவு நேரம் வேலை முடித்து வீட்டிற்கும் அருகில் உள்ள கிராமத்திற்கும் செல்லும் பொது மக்கள் அந்த சாலையை கடந்து செல்வதால் எப்பொழுதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெருசலாகவும் அந்தப் பகுதி இருக்கும்.சமீபத்தில் அந்த சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைத்து புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த சாலையில் குறுக்கே புகுந்த ஒரு விஷப்பாம்பு சாலையின் குறிக்கே புதிதாக எடுக்கப்பட்ட சுவற்றினால் அந்த சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது. மேலும் அந்தப் பாம்பை சுற்றி கூட்டம் கூடி வாகனங்கள் என்றதால் பதற்றம் அடைந்து சாலையில் குறுக்கே அங்குமங்கமாக ஓடியதால் சிறிது நேரம் அந்த பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் வாகனங்கள் ஏதும் அந்த பாம்பின் மீது ஏறி விடாமல் பாதுகாத்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பினை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காட்டுபகுதியில் விட்டார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    Next Story
    ×