search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    60 காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகுந்து
    X

    60 காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகுந்து

    • யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதம்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 60 காட்டுயானைகளை வனத்துறையினர் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டியிருந்த நிலையில், அவை மீண்டும் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிக்கு திரும்பின.

    இந்த நிலையில், சானமாவு காட்டில் 40 யானைகள் மற்றும் 20 யானைகள் என 2 குழுக்களாக 60 யானைகள் பிரிந்துள்ளன.

    மேலும் இவை தனித்தனியாக அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து நடமாடும் அபாயம் உள்ளது. எனவே, சானமாவு, போடூர், ஆழியாளம், ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும், யானைகளை கோபப்படுத்தும் விதமாகவோ, பொதுமக்கள் செல்பி எடுக்க முயற்சிக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆழியாளம் கிராமத்திற்குள் 40 யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×