search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விசாகப்பட்டினம் அருகே காட்டு யானைகளால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
    X

    விசாகப்பட்டினம் அருகே காட்டு யானைகளால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

    • கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.
    • ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே உள்ள அர்த்தம் வலசா என்ற இடத்தில் தண்டவாளத்தில் 7 காட்டு யானைகள் நின்று அட்டகாசம் செய்தன.

    இந்த கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.

    அந்த யானையை காணாமல் மற்ற யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன. 7 யானைகளும் தண்டவாள பகுதிகளிலேயே நின்றன. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனப்ப குதிக்குள் விரட்டினர்.

    இதனை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து சீரானது.

    Next Story
    ×