search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking"

    • நாமகிரிபேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை குடித்த 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்ற பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது பிலிப்பாக்குட்டை கிராமம். இங்குள்ள சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்துதான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்தத் தண்ணீர் ஒருவித வாசனையுடன் வந்ததாக தெரிகிறது. இதனால் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.

    இந்த தண்ணீரை 10-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியதாக தெரிகிறது. தண்ணீரை குடித்த பழனிச்சாமி (வயது50), வெள்ளையம்மாள் (60), விஜயா(47) உள்பட 10 பேர் வாந்தி எடுத்தனர். உடனடியாக அவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் 9 பேர் வீடு திரும்பினர்.

    நேற்று நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயா சங்கர் தலைமையில் சமத்துவபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். ஒருவித வாசனையுடன் வந்த தண்ணீர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி உதயா (51). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் உதயா வுக்கு உடல்நிலை சரி யில்லை என கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் அவர் மன வேதனையில் இருந்த வந்தார். இந்த நிலையில் உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42) . இவர் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூர் திருப்பூண்டி, மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளா (28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரிமளா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பரிமளா தனது தங்கையுடன் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் 3 வருடங்களாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பரிமளா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டார். இது குறித்து அவரை தங்கைக்கு தெரிய வந்ததும் அக்கா பரிமளாவை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பரிமளா தான் வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பரிமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா வெங்கம்பூர் அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அளவுதீன். அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் ஆயிஷா பீவி (63). மகன் வீடு அருகே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயிஷா பீவி கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வயிற்றுவலியால் துடித்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி னார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பீவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணையொட்டிய பகுதிகளில் வருவதால் சாயகழிவு நீர் தேங்கிய காரணத்தால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூர், காங்கேயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை குடிநீர் கேட்டு புஞ்சை பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை -ஊத்துக்குளி மெயின் ரோட்டில் ஆலமரம் 4 ரோடு சந்திப்பில் அரசு டவுன் பஸ்சினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஆக வில்லை. இதனால் காலையில் திருப்பூர் பனியன் நிறுவனத்திக்கு வேலைக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லும் வேன்கள் அதிகளவில் வந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக பெருந்துறை தாசில்தார் குமரேசன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக லாரி தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விரைவில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமரேசன் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொட்டியின் பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவருக்கும் தொட்டியின் தூண்களுக்கும் இடையில் பிரம்மாண்டமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சியின் பஸ் நிலைய வளாகத்தில் பெரிய அளவிலான மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டி காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1955-ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். 65 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்த குடிநீர் தொட்டி உறுதி குறையாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் தற்போது அது பெரும் ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பதாக பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

    அதாவது மேல்நிலைத் தொட்டியின் பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவருக்கும் தொட்டியின் தூண்களுக்கும் இடையில் பிரம்மாண்டமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதனால் மரத்து வேர்களின் வளர்ச்சி காரணமாக குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதமடையகூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து நெருக்கடியும் நிறைந்த இப்பகுதியில் பெரும் விபத்து ஏதேனும் நடந்து விடாமல் இருக்க உடனடியாக குடிநீர் தொட்டியை ஆக்கிரமித்து நிற்கும் மரங்களை அகற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலரான முகமது அலி காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    • சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் புன்னைவனம். இவரது மகன் அழகர் (30). மில் தொழிலாளியான இவர் திருமணத்துக்கு மறுத்து வந்தார். இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்த போது கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் அழகர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த அழகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மனமுடைந்து வீட்டில், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தார்.
    • அக்கம் பக்கத்தினர்ம மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் இறந்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கற்கத்தி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 57). இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மனமுடைந்து வீட்டில், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர்ம மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மது குடித்த அண்ணன்-தம்பி பலியானார்கள். மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார் பட்டியை சேர்ந்தவர்கள் ஜோதி லட்சுமணன்(வயது31), முனீஸ்வரன்(33), ரமேஷ்(35), இவரது தம்பி பாண்டியன்(28).

    இவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பார்கள். கடந்த 8-ந்தேதி 4 பேரும் வீட்டில் அமர்ந்து மது குடித்தனர். பின்பு உணவு சாப்பிட்டனர். அதன்பின் சிலமணிநேரத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    உடனே அவர்களை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் ரமேஷ் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் ரமேஷ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து ரமேசின் மனைவி அமுதா தனது உறவினர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது கணவரும், அவரது தம்பியும் மது குடித்து மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

    இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் இப்பகுதியில் போலி மது விற்பனை நடக்கிறது. அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே பாண்டியனின் மனைவி லதாவும், தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்திருந்தார். பாண்டியன் இறந்ததும் அவரது உடல் புதைக்கப்பட்டது. லதா புகார் செய்ததை தொடர்ந்து பாண்டியன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆண்டிப்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணி, ஏ.டி.எஸ்.பி பழனிக்குமார் ஆகியோர் முன்னிலையில் பாண்டியன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.

    மது குடித்த அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் செவிலியராக உள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    நேற்று இரவு கார்த்திகேயன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாபநாசம் அருகே குடி போதையில் மது என்று நினைத்து பெயிண்டை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பாபநாசம்:

    பாபநாசம் வங்காரம் பேட்டை கீழவழிநடப்பு தெருவில் வசித்து வந்தவர் குமார் (வயது51). பெயிண்டர். இவர் குடிபழக்கம் உள்ளவர். அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மது என்று நினைத்து பெயிண்டை எடுத்து குடித்து விட்டார். 

    அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

    இதுபற்றிய புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×