search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife condemns"

    மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் செவிலியராக உள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    நேற்று இரவு கார்த்திகேயன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஜெங்கலேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (வயது 65). இவருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதில் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதியும், வழக்கம் போல் அதிக அளவில் மது குடித்துவிட்டு வந்த ராமச்சந்திரன் தனது 2-வது மனைவியான மாதம்மாள் (35) என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அதில் மாதம்மாள் தனது கணவர் ராமச்சந்திரனை இனி மது குடிக்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

    இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராமச்சந்திரின் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ராமச்சந்திரன் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி அருகே மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் அப்பிபட்டி காந்திஜி நடுநிலைப்பள்ளி விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(43). இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் ராஜேந்திரன் மிதமிஞ்சிய போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் ஆர்த்தி சத்தம்போட்டார். இதில் மனமுடைந்த ராஜேந்திரன் தன்னுடைய மதுபழக்கத்தால் வீட்டில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது என வேதனையடைந்து தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர், தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×