search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking alcohol"

    • ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.

    அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.

    ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.

    • கூலித்தொழிலாளியான செல்வராஜ் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் மாதாகோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) இவர் தனது மனைவி கோமதி மற்றும் 2 மகன்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான செல்வராஜ் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அது போல்  செல்வராஜ் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். அப்போது செல்வராஜை அவரது மகன்கள் மற்றும் மனைவி கண்டித்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் செல்வராஜின் மகன்களுக்கு போன் செய்து உனது தந்தை வீட்டில் தூக்கு போட்டு தொங்குவதாக கூறினார்.

    உடனே செல்வராஜின் மகன்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தூக்கில் இருந்து செல்வராஜை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வராஜின் மூத்த மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுகுடித்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (57), சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்களான இவர்கள் 3 பேரும் மதுவிருந்துடன் கொண்டாட முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபான பாட்டில்களை வாங்கினர். பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் இரவு முதல் விடிய விடிய மதுகுடித்ததாக தெரிகிறது.

    பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் முருகானந்தம், பார்த்திபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்து அவர்களது குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், 3 பேரும் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது.

    ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    3 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்து இருக்கலாம் என்று அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனையில், 3 பேரும் அதிக போதைக்காக விஸ்கியில், பெயிண்டுக்கு கலக்கும் தின்னரை கலந்து குடித்தது தெரியவந்துள்ளது. இதனால் தொண்டையில் இருந்து வயிறு வரை அரிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுகுடித்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஜெங்கலேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (வயது 65). இவருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதில் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதியும், வழக்கம் போல் அதிக அளவில் மது குடித்துவிட்டு வந்த ராமச்சந்திரன் தனது 2-வது மனைவியான மாதம்மாள் (35) என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அதில் மாதம்மாள் தனது கணவர் ராமச்சந்திரனை இனி மது குடிக்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

    இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராமச்சந்திரின் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ராமச்சந்திரன் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில், வார இறுதி நாட்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து உள்ளது.
    கோவை:

    கோவை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அதிகாலை 1 மணிக்கு வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திங்கள் முதல் வியாழன் வரை சாதாரண நாட்களில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டும் 50 முதல் 60 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து 150 முதல் 160 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மதுகுடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை 6 ஆயிரத்து 218 வழக்குகளும், அதே கால கட்டத்தில் நடப்பு ஆண்டில் 14 ஆயிரத்து 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை கோர்ட்டுக்கு சென்று செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வாகன ஓட்டிகளை வலியுறுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதின் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத் தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை 196 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டில் அதே கால கட்டத்தில் 111 பேர் இறந்துள்ளனர்.

    போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 96 ஆயிரத்து 761 வழக்குகளும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 180 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×