search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிப்பழக்கம்"

    • வினோதன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார்.
    • மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் கிராம த்தை சேர்ந்தவர் வினோதன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று மதியம் 3 மணியளவில் பண்ருட்டி ராஜானி சாலையில் நோ பார்க்கிங்கில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த போக்குவரத்து போலீசார், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர கூறியுள்ளனர். ஸ்கூல் சவாரி உள்ளதால், மாணவர்களை வீட்டில் விட்டுவிட்டு போலீஸ் நிலையம் வருவதாக கூறி சென்றுள்ளார். பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியு ள்ளார். அப்போது அவர் குடித்துவிட்டு வந்ததை அறிந்த அவரது மனைவி அம்சவள்ளி அதனை கண்டித்துள்ளார். போலீசார் கண்டித்ததாலும், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர சொன்னதாலும் குடித்ததாக வினோதன் அம்சவள்ளி யிடம் கூறினார்.

    இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, உன்னுடன் நான் வாழமாட்டேன் எனக் கூறி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு 8 மணிக்கு தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு பண்ருட்டி 4 முனை சந்திப்பிற்கு வந்த வினோதன், கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டார். மேலும், மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார். அங்கு போக்குவரத்து சீரமைக்கும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், வினோதனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரது மனைவியை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
    • இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

    இரணியல் :

    இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஞானபிரகாசம். இவரது மகன் பிரவீன் ரெஞ்சித் (வயது 27). இவர் மார்பிள் வேலை செய்து வருகிறார். பிரவீன் ரெஞ்சித்தும், இரணியல் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பி.இ.பட்டதாரி இளம்பெண் ஒருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பிரவீன் ரெஞ்சித் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதால் இளம்பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் பிரவீன் ரெஞ்சித் அடிக்கடி இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடனும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை இளம்பெண் வேலை முடிந்து குருந்தன்கோட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குருந்தன்கோடுகுளம் அருகே சென்றபோது பின்னால் வந்த பிரவீன் ரஞ்சித் அவரை கையால் தாக்கி அவதூறாக பேசியுள்ளார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வயிற்றில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரவீன் ரெஞ்சித்தை கைது செய்தனர். குடிப்பழக்கம் காரணமாக காதலி பேசாத ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாக இரணியல் போலீசாரிடம் பிரவீன் ரெஞ்சித் வாக்குமூலம் அளித்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை.
    • தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது27). இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா(26) என்பவரை கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    தாசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அவர் தினமும் வீட்டிற்கு மதுகுடித்து வந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். குழந்தை தொடர்பாகவும் நிகிதாவிடம் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை. தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.

    சம்பவத்தன்றும் தாஸ் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நிகிதா கணவர் கண்முன்பே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாஸ் காதல் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் உடல் கருகி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தாஸ் மற்றும் அவரது மனைவி நிகிதா ஆகிய 2 பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிகிதா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் தாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபரின் குடிப்பழக்கத்தால் அவரது குடும்பமே சிதைந்து போனது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • வடிவேல் திவ்யாவை காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • வடிவேல் நாகராஜ் என்பவருடன் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் வேலன் என்கிற வடிவேல் (38). கட்டிட தொழிலாளி. இவர் விழுப்புரம் கே.கே. சாலை மணி நகரில் வசித்து வந்த திவ்யாவை காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் வடிவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இப்பழக்கத்தை நிறுத்த சொல்லி வடிவேலுவை திவ்யா வலியுறுத்தியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை திவ்வாவை காண பக்கத்துவீட்டில் இருந்தவர்கள் சென்றனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டினுள் திவ்யா பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவ்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திவ்யாவின் கணவர் வடிவேல், அவரது உறவினர் நாகராஜ் (30) என்பவருடன் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திவ்யாவின் கணவர் வடிவேல், அவரது உறவினர் நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முத்து தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பொதட்டூர்பேட்டை:

    பள்ளிப்பட்டு தாலுகா ராம சமுத்திரம் ஊராட்சியில் உள்ள வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 25). இவர் பொக்லைன் எந்திரம் ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அனு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. முத்துவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனு குடிப்பழக்கத்தை விடும்படி முத்துவிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அனு கணவரிடம் தட்டிக்கேட்டு தகராறு செய்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அனு படுக்கை அறைக்கு சென்ற நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டார் அனுவை கீழே இறக்கி உடனடியாக சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அனுவின் தந்தை ராஜேந்திரன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்களே ஆவதால் இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 13 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்தோணிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    நடுவீரப்பட்டு அடுத்த சிலுவை பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 60). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து அந்தோணிசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அந்தோணிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல்,நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 37). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தராததால் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள நத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 39).

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனிடையே சம்பவத்தன்றும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது.
    • அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் மந்தக்கரை சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கவரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். மேலும் குடிப்பதற்கு பணம் இல்லாததாலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்து வந்த செல்வராஜ் நேற்று வீட்டில் இருந்த கவரிங் நகை தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த சைனைடை சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் மனைவி காமாட்சி சிதம்பரம் நகர போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர்.
    • மனம் உடைந்த ராமு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்புசாவடி விஜயமண்டப தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 23 ).

    சமையல் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனம் உடைந்த ராமு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சைக் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியாக வசித்து வந்த இவர் குடிப்பழக்கம் உடையவர். கடந்த 17-ந் தேதி அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற பரமேசுவரன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவருடைய உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம்அருகே உள்ள சங்கரன்புதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பரமேஷ்வரன் (வயது 64). தனியாக வசித்து வந்த இவர் குடிப்பழக்கம் உடையவர். கடந்த 17-ந் தேதி அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற பரமேசுவரன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. காலையில் ஆற்றில் குளிக்க சென்றவர்கள், அங்கு அவர் பிணமாக கிடப்பதை பார்த்து மகன் ரமேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவருடைய உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதர்சனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வல்லம்:

    தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவானன் என்பவரின் மகள் சுடர்மணி (29) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அனைவரும் தஞ்சை வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்துள்ளனர். தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுதர்சன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுதர்சனுக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு குடித்து விட்டு வந்த சுதர்சனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் இதனை பார்த்த சுதர்சன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுடர்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுடர்மணியின் தந்தை நீலவானன் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது குறித்து தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று சுடர்மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலை (32). திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ரவி (40). இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    திருமலை, ரவி ஆகியோரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். எனவே, திருமலை, தனது அண்ணன் ரவியின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அன்று இரவு மல்லிகை பூவிற்கு அடிக்கும் மருந்தை (விஷம்) குடித்து ரவி வாந்தி எடுத்துள்ளார். மனைவி சத்யா விசாரித்தபோது அவர் எதுவும் கூறவில்லையாம். இதையடுத்து மறுநாள் ரவியின் உடல் நிலை மோசமடையவே உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, ரவியின் தம்பி திருமலை அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×