search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
    X

    தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    • இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள நத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 39).

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனிடையே சம்பவத்தன்றும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×