search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 women"

    • திருமங்கலம் அருகே 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகம், அம்பட்டையன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியில் இருந்த சிவரஞ்சனி இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த சிந்து பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக உசிலம் பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவரஞ்சனி தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட தூம்பக் குளம் முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி தேவி(55). இவர் களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகளாக தேவிக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர், தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மலர்விழி, கண்ணகி. ஆகியோர் காளான் பறிக்க சென்ற போது கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
    • இந்த கொடூர கொலை சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலர்விழி, கண்ணகி. இவர்கள் இரண்டு பேரும் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வழக்கமாக காளான் பறிக்க செல்வது வழக்கம்.

    அதேபோன்று கடந்த 22 ஆம் தேதி அதிகாலையில் காளான் பறிக்க சென்ற போது இரண்டு பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர கொலை சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நபர் தான் கொலையாளி என்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 39) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் இரண்டு பெண்களையும் தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அப்போது பால்ராஜ் தான் வழக்கமாக அதிகாலை நேரங்களில் காட்டுப்பன்றி வேட்டைக்கு செல்வதாகவும், அப்போது கடந்த சில நாட்களாக இந்த 2 பெண்களும் காளான் பறிக்க வருவதை நோட்டம் கண்டதாகவும், அவர்களின் நகைகளை பறிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

    சம்பவத்தன்று புதருக்குள் அசைவு கேட்டதால் தனது நாட்டு துப்பாக்கியால் அந்த பகுதியை நோக்கி சுட்டதாகவும், அப்போது கண்ணகியின் தொடையில் குண்டு பாய்ந்து அலறியுள்ளார். இந்த நிலையில் அருகே காளான் பறித்துக் கொண்டிருந்த மலர்விழி அங்கிருந்து ஓடி வந்து பால்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த பால்ராஜ் துப்பாக்கியை பின்பக்கமாக திருப்பி கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இந்த நிலையில் கண்ணகி தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி சுவிட்ச்ஆப் செய்து விட்டு அவரை தான் வைத்திருந்த சூரி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மலர்விழி அணிந்து இருந்த 6½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு காரைக்கால் தப்பிச் சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து தாலிச் சங்கிலி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சூரிக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பால்ராஜை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபடுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மதுரையில் 2 பெண்களிடம் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுரை

    மதுரை ராஜகம்பீரம், ராஜேஸ்வரி நகர், பாரதி கண்ணன் மனைவி சுஜித்ரா (வயது 32). இவர் சம்பவ த்தன்று மதியம் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார்.அப்போது அம்மாபட்டி அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம கும்பல், சுஜித்ராவிடம் 3.5 பவுன் தங்கச்நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.

    இது தொடர்பாக சுசித்ரா ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பசுமலை, தியாகராஜர் காலனியைச் சேர்ந்தவர் ராஜாமுகமது உசேன் (வயது 45). இவர் சமூகத்தன்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன், மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது திருமங்கலம்-மதுரை ரோட்டில், தோப்பூர் அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், ராஜா முஹம்மது மனைவியிடம் கைப்பையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டது. அந்த கைப்பையில் செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை இருந்தது. இது தொடர்பாக ராஜாமுகமதுஉசேன் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலமேடு வாரச்சந்தையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் சனிக்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.

    நேற்று முன்தினம் நடந்த வாரச்சந்தையில் வியாபாரி சீனியம்மாள் (வயது72) என்பவரிடம் ரூ.40-க்கு 2 பெண்கள் மக்காச்சோளம் வாங்கினர். அதற்கு ரூ.500 கொடுத்து மீதி பணத்தையும் பெற்றுக்கொண்டனர்.

    அதேபோல் மற்றொரு பெண் வியாபாரியிடம் காய்கறி வாங்கிவிட்டு ரூ.500 கொடுத்து சில்லறை வாங்க முயன்றபோது அது கள்ள நோட்டு என அறிந்த பெண் வியாபாரி இதுகுறித்து பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    விரைந்து வந்த போலீசார் 2 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நத்தம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரா (42), அலங்காநல்லூர் வலசை பகுதியை சேர்ந்த பத்மாவதி (43) என்பது தெரியவந்தது. இருவரும் சந்தை கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு மாற்ற முயன்றதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூர் திருப்பூண்டி, மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளா (28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரிமளா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பரிமளா தனது தங்கையுடன் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் 3 வருடங்களாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பரிமளா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டார். இது குறித்து அவரை தங்கைக்கு தெரிய வந்ததும் அக்கா பரிமளாவை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பரிமளா தான் வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பரிமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா வெங்கம்பூர் அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அளவுதீன். அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் ஆயிஷா பீவி (63). மகன் வீடு அருகே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயிஷா பீவி கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வயிற்றுவலியால் துடித்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி னார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பீவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ×