search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commit"

    • ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கோட்டை கணக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32).

    இவரது மனைவி சுகுணா. ரவீந்திரன், சுகுணா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அவரை திருச்செங்கோட்டில் உள்ள மது அடிமை மறு வாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சைக்காக அனுமதி த்தனர். அதன் பின்னரும் ரவீந்திரன் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனால் சுகுணா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்த ரவீந்திரன் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். சுகுணா வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் கொடு முடி அடுத்த கொளத்துப்பாளையம், வேலன் காட்டூர் பகுதி யைச் சேர்ந்தவர் துரை சாமி (65). தனியார் கட்டு மான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். துரைசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மகன் தந்தையிடம் கேட்டபோது, விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதையடுத்து துரைசாமி யை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூர் திருப்பூண்டி, மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளா (28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரிமளா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பரிமளா தனது தங்கையுடன் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் 3 வருடங்களாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பரிமளா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டார். இது குறித்து அவரை தங்கைக்கு தெரிய வந்ததும் அக்கா பரிமளாவை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பரிமளா தான் வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பரிமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா வெங்கம்பூர் அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அளவுதீன். அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் ஆயிஷா பீவி (63). மகன் வீடு அருகே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயிஷா பீவி கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வயிற்றுவலியால் துடித்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி னார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பீவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ×