search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "separate"

    • ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கோட்டை கணக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32).

    இவரது மனைவி சுகுணா. ரவீந்திரன், சுகுணா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அவரை திருச்செங்கோட்டில் உள்ள மது அடிமை மறு வாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சைக்காக அனுமதி த்தனர். அதன் பின்னரும் ரவீந்திரன் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனால் சுகுணா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்த ரவீந்திரன் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். சுகுணா வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் கொடு முடி அடுத்த கொளத்துப்பாளையம், வேலன் காட்டூர் பகுதி யைச் சேர்ந்தவர் துரை சாமி (65). தனியார் கட்டு மான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். துரைசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மகன் தந்தையிடம் கேட்டபோது, விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதையடுத்து துரைசாமி யை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×