search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "incidents"

    • அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
    • இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வெளி மற்றும் உள் நோயா ளிகளாக தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிதடி தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இருந்த பகுதிக்கு, இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை மிரட்டி சென்றனர்.

    அடிக்கடி அந்த மர்மந பர்கள் வந்து சென்றதால், மூதாட்டி மருத்துவ அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து வலியுறுத்தி யதின் காரணமாக பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.

    இதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூர் அருகே ராயர்பாளை யத்தை சேர்ந்த பெண் பிரச வத்திற்காக சேர்க்கப்பட்டி ருந்தார். அவருக்கு துணையாக இருந்த, அந்த பெண்ணின் தாய் கைப்பை யில் 2 செல்போன்கள், பணம், கொலுசு உள்ளிட்டவை வைத்திருந்தார்.

    இந்நிலையில் இரவில் பிரசவ வார்டிற்கு வந்த மர்ம நபர்கள், செல்போன், கொலுசு, பணம் வைத்தி ருந்த கைப்பையை திருடி சென்று விட்டனர். இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் தெரிவித்தார்.

    அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கண்கா ணிப்பு கேமராவை பரிசோ தனை செய்தாகவும் தெரி வித்துள்ளார். மேலும் போலீசில் புகார் செய்யு மாறு அறிவுறுத்தியுள்ளார். அவர்களும் திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மருத்துவ மனை நிர்வாகமும் இதை கண்டுகொள்ளவில்லை.

    இதே நிலைமை நீடித்தால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் உடமை களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே திருட்டு, நோயாளிகளை மிரட்டுவதை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோயா ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இதனால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள கஸ்பா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (51). இவரது கணவர் பழனிசாமி (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது.

    கட்டிட வேலை பார்த்து வந்த பழனிசாமி, கை, கால், இடுப்பு வலி போன்ற உடல் உபாதைகளால் கடந்த 3 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை. மேலும், தனது மகளுக்கு திருமணமாகவில்லை என மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் உடல் உபாதை காரணமாக பழனிசாமி சம்பவத்தன்று இரவு எலி மருந்தை மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டார்.

    இதுகுறித்து தெரிய வந்ததையடுத்து அவரது மனைவி கோவிந்தம்மாள் உறவினர்கள் உதவியுடன் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கூச்சிக் கல்லூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (54). இவரது 2வது மகன் கலைநாதன் (24).

    இவர், பவானி, காலிங்கராயன்பா ளையம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திரும ணமாகவில்லை.

    கலைநாதனுக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. அதற்காக அந்தியூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றுவந்த கலைநாதனுக்கு அன்றைய தினம் நள்ளிரவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    குடும்பத்தினர் விசாரித்த தில், விஷத்தை குடித்து விட்டதாக கலைநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கலைநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையைச் சேர்ந்தவர் கவுதம் (24). பைக் மெக்கானிக். இவரது தந்தை கிட்டான் (58). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கவுதமின் தாய் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கவுதமின் மூத்த சகோதரி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதையில் அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாயில் புண் இருந்த காரணத்தால் சரிவர மருந்து, மாத்திரைகளை சாப்பிட முடியவில்லையாம்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு , மகன் கவுதம் வீட்டில் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அதன் காரணமாக அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, கவுதமின்பாட்டி அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த கவுதம் தந்தை கிட்டானை சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கிட்டான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கோட்டை கணக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32).

    இவரது மனைவி சுகுணா. ரவீந்திரன், சுகுணா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அவரை திருச்செங்கோட்டில் உள்ள மது அடிமை மறு வாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சைக்காக அனுமதி த்தனர். அதன் பின்னரும் ரவீந்திரன் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனால் சுகுணா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்த ரவீந்திரன் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். சுகுணா வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் கொடு முடி அடுத்த கொளத்துப்பாளையம், வேலன் காட்டூர் பகுதி யைச் சேர்ந்தவர் துரை சாமி (65). தனியார் கட்டு மான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். துரைசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மகன் தந்தையிடம் கேட்டபோது, விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதையடுத்து துரைசாமி யை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×