search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 teenagers"

    • சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.
    • வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் கிருஷ்ணம்பா ளையம் காலனியை சேர்ந்த வர் சரண் (20). இவர் சோப் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    சரணின் அக்காவிற்கு திருமண வரன் பார்ப்ப தற்காக குடும்பத்தினர் அனைவரும் திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றனர். வீட்டில் சரண் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சரணின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியபோது திறக்க வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த குடும்ப த்தினர் ஜன்னல் வழியே பா ர்த்த போது சரண் வீட்டின் மேற்கூரை ஆங்கிள் கம்பியில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரணி னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரணினின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுத்தம்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (28). இவர் தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    ராஜேந்திரன் மதுப்ப ழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அடிக்கடி வயிற்கு வலியால் அவதி ப்பட்டு வந்தார். கடந்த 6 மாதமாக தனியார் மருத்துவ மனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு ராஜேந்திரன் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ராஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜே ந்தி ரனுக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், 2½ வயதில் மகன் உள்ளனர்.

    • கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மன்னதபாளையம், குருசாமி நகரை சேர்ந்தவர் கார்த்தி (28). இவரது மனைவி அகல்யா. கார்த்தி ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக கார்த்திக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பும்போது மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது.

    மதியம் 12 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திக் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்தி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் ஈரோடு கொல்லம்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதாப் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் பிரதாப் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதாப் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. .
    • 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்தது.இதற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்இதில் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேதராப்பட்டு மந்தகரையில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.
    • அப்போது சுந்தர்- அரவிந்தன் ஆகியோருக்கும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு புது காலனி பகுதியை சேர்ந்த வர்கள் சுந்தர் (வயது 25). அரவிந்தன் (27). இருவரும் இரவு சேதராப்பட்டு மந்தகரையில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.

    அப்போது கரசூர் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லிங்கேஸ்வரன் (32) அதே கடைக்கு ஐஸ்கிரீம் வாங்க வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது சுந்தர்- அரவிந்தன் ஆகியோருக்கும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட நிலையில் லிங்கேஸ்வரன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரையும், அரவிந்தனையும் ஓட, ஓட விரட்டி குத்தினார்.

    மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலால் தாக்கியதில் சுந்தருக்கு முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட பழைய காலனி பகுதிக்குள் ஓடினார். அரவிந்தனும் படுகாயம் அடைந்தார்.பின்னர் லிங்கேஸ்வரன் தப்பி ஓடி விட்டார்.

    ரத்தம் சொட்ட சொட்ட ஊருக்குள் ஓடிய வாலிபர்களை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ நடந்த கடை வாசலில் இருந்து இடத்தில் இருந்து 20 அடி தூரத்திற்கு ரத்தக்கறைகள் படர்ந்து கிடந்ததால் இன்று காலை அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கொலை வெறி தாக்குதல் நடத்திய லிங்கேஸ்வரனை போலீசார் தேடிவரும் நிலையில், காலை சேதரப்பட்டு மற்றும் கரசூர் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கோட்டை கணக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32).

    இவரது மனைவி சுகுணா. ரவீந்திரன், சுகுணா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அவரை திருச்செங்கோட்டில் உள்ள மது அடிமை மறு வாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சைக்காக அனுமதி த்தனர். அதன் பின்னரும் ரவீந்திரன் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனால் சுகுணா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்த ரவீந்திரன் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். சுகுணா வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் கொடு முடி அடுத்த கொளத்துப்பாளையம், வேலன் காட்டூர் பகுதி யைச் சேர்ந்தவர் துரை சாமி (65). தனியார் கட்டு மான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். துரைசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மகன் தந்தையிடம் கேட்டபோது, விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதையடுத்து துரைசாமி யை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தலை துண்டித்து கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, வீரசோழன் அருகே உள்ள பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 24). இவரது நண்பர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தரைக்குடியைச் சேர்ந்த வசந்தபாண்டி (23), கமுதி கோட்டைமேட்டை சேர்ந்த இருள் என்ற இருளாண்டி (31), இருளாண்டி (19), சிலம்பரசன் (40) ஆகிய 4 பேரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பாப்பாங்குளத்தில் உள்ள மயானத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது ஆனந்தராஜூக்கும், நண்பர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்தவர் நண்பர்கள் ஆனந்தராஜை கழுத்தை அறுத்து கொன்றனர்.

    திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் இருள் என்ற இருளாண்டி, வசந்த பாண்டி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    ×