search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thug law"

    • போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வழிப்பறி, கஞ்சா விற்பனை, பண மோசடி, ரேசன் அரிசி கடத்தல்,மதுபாட்டில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த லதா (53), அடையாறை சேர்ந்த மெர்சிதீபிகா, துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ், தரமணி மிதுன்சக்கரவர்த்தி, திருவொற்றியூர் அகில் அகமது உள்ளிட்ட மொத்தம் 19 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான உத்தரவை போலீஸ்கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார். இந்த ஆண்டில் மொத்தம் 667 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கட்டப்பஞ்சா யத்து, மிரட்டி பணம்பறித்தல், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    • காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.

    • தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). ரவுடி. இவரை கடந்த 11-ந் தேதி மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தார்.

    பின்னர் தினேசை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ரவுடி தினேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை சூப்பிரண்டிடம் வழங்கினார்.

    • வாலிபர் தலை துண்டித்து கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, வீரசோழன் அருகே உள்ள பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 24). இவரது நண்பர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தரைக்குடியைச் சேர்ந்த வசந்தபாண்டி (23), கமுதி கோட்டைமேட்டை சேர்ந்த இருள் என்ற இருளாண்டி (31), இருளாண்டி (19), சிலம்பரசன் (40) ஆகிய 4 பேரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பாப்பாங்குளத்தில் உள்ள மயானத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது ஆனந்தராஜூக்கும், நண்பர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்தவர் நண்பர்கள் ஆனந்தராஜை கழுத்தை அறுத்து கொன்றனர்.

    திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் இருள் என்ற இருளாண்டி, வசந்த பாண்டி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் ரவுடிகள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் பட்டா கத்தியுடன் தங்கியிருந்த 5 பேரை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய திருநின்றவூர், ஜோசப் என்ற தேவகுமார் (35), புட்லூர் பகுதியை சேர்ந்த மோகன்பிரபு (23), மப்பேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு, புது இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அவினாசி (19), நயப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இந்த 5 பேரையும் மணவாளநகர் போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ரவுடிகள் மணிகண்டன் தேவகுமார் ஆகிய இருவரும் பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே சிறை சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் ரவுடிகள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ரவுடிகள் மணிகண்டன், தேவகுமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கனார்.

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IGPonManickavel
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பங்கேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெறுவதையொட்டி ரெயில்வே போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்த பொதுமக்களுக்கும் பொன். மாணிக்கவேல் வெகுமதிகளை வழங்கினார். அப்போது அவர் போலீசார் மத்தியில் பேசியதாவது:-

    போலீஸ் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணிச்சுமையுடனேயே பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 600 வழக்குகள் பதிவாகின்றன. இதனால் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு போலீசாருக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. கொலை வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    ஒரு வழக்கை பதிவு செய்யும் போது போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டநுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் வழக்கை திறம்பட நடத்த முடியும். நீதிமன்றத்தை எப்போதும் மதித்து செயல்பட வேண்டும்


    ஒரு வழக்கை பதிவு செய்யும் அதிகாரி எக்காரணம் கொண்டும் குற்றவாளிகளை தப்ப விட்டு விடக் கூடாது. கோர்ட்டில் குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் 2 அல்லது 3 மாதங்களில் குண்டர் சட்டத்தை உடைத்துக் கொண்டு குற்றவாளிகள் வெளியில் வந்து விடுகிறார்கள்.

    தமிழக அரசுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சில அதிகாரிகளால்தான் பிரச்சனை. முழுமன நிறைவோடு பணி ஓய்வு பெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #PonManickavel
    சென்னையில் ஒரே நாளில் 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை நகரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    பல்லாவரத்தில் வீட்டு உரிமையாளர்களை கட்டிப் போட்டு 135 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையை வீட்டு வேலைக்காரி மகாராணி மதுரையில் இருந்து ஆட்களை வரவழைத்து நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மகாராணி, சுரேஷ், அருண்குமார், செல்வம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த படித்துறை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆயிரம்விளக்கைச் சேர்ந்த சதீஷ், புளியந்தோப்பைச் சேர்ந்த ஆனந்தன், வியாசர்பாடியைச் சேர்ந்த எல்லப்பன், பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன், யானை கவுனியைச் சேர்ந்த அஜித், பாலவாக்கத்தைச் சேர்ந்த கோபி உள்ளிட்ட 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே உள்ள வி.புதூர்கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). ரவுடியான இவர் மீது வளவனூர் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அடி, தடி தகராறு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த சில வாரத்துக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மகேசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் மகேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மகேசை வளவனூர் போலீசார் கைது செய்தனர்.
    தமிழகத்தை முன்னேற்றமடைய செய்யும் புதிய திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். #BJP #HRaja
    தென்காசி:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்திருந்தார். முன்னதாக குற்றாலத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் குற்றாலம் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் சாமக்கொடை திருவிழா என்பது பரவலாக நடைபெற கூடிய வி‌ஷயம். இதற்கு காவல் துறையினர் தேவையற்ற கெடுபிடிகளை விதிக்கின்றனர் என்ற குற்றசாட்டு உள்ளது. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாங்கள் எந்த கட்டுபாடுகளும் விதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.


    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காவல் துறையினர் எந்தவிதமான கட்டுபாடுகளும் விதிக்க கூடாது. ஒலிப்பெருக்கி பயன்படுத்தாத மத சடங்குகளிலும், மத ஊர்வலங்களிலும் காவல் துறையினர் தலையிட அனுமதியில்லை. மேலும் கூடன்குளம் திட்டம் வரக்கூடாது என்று வெளிநாடுகளில் நிதி பெற்று போராட்டம் நடைபெற்றுள்ளதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    வெளி நாடுகளில் பணம் பெற்று கொண்டு போராட்டம் நடத்துபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமா? இதே போல் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாமிரத்தின் விலை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து எய்ம்ஸ், 8 வழிச்சாலை, தொழிற்சாலைகள் வரக்கூடாது என்று போராடுபவர்கள் மீது பல வழக்குகள் உள்ளது, இவர்கள் நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டியவர்கள். எனவே தமிழக அரசு அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja

    ×