என் மலர்
நீங்கள் தேடியது "overhead reservoir tank"
- குளத்துக்குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.
- அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
தென்திருப்பேரை:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடையனோடை பஞ்சாயத்து குளத்துக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு தடை இன்றி குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15.55 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் அப்பகுதி மக்களிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருக்கோளூர் பஞ்சாயத்து பால்குளம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை போடும் பணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எடிசன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் ஆழ்வார்திருநகரி கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, வட்டார செயலாளர் நிலமுடையான், முன்னாள் நகரத்தலைவர் வக்கீல் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் சீனி ராஜேந்திரன், சிவகளை பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.10 லட்சம் மதிப்பிலான நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது.
- விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார்.
காங்கயம் :
காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பாப்பினி ஊராட்சி, வரதப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். குடிநீர் தொட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவனாந்தன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை.
- தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பிரச்சனையாகி, இப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் முடிவுக்கு வருவதற்கு முன்பாக வேங்கை வயல் போன்று இன்னொரு சம்பவம் திருச்சி மாநகராட்சி பகுதியில் நடந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
நேற்று மாலை 7 மணி அளவில் இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய மர்ம ஆசாமிகள் சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்று உள்ளனர். இதை கவனித்த மக்கள் தொட்டியின் மேலே சென்று பாலித்தின் பையில் மிதந்தது மனித மலம் போன்று இருந்தது.
இந்த தகவல் அறிந்த 20-வது வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர் கள், தண்ணீரில் கிடந்த கழிவை அகற்றி விட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப் படுத்தினர். பின்னர் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.
அவர்கள் தரப்பில் மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை. ஆனால் இதுவரை அதில் தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.
இது குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்கு பயன் படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி ஆகும். மலம் கலந்த மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- நாமகிரிபேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை குடித்த 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
- சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்ற பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது பிலிப்பாக்குட்டை கிராமம். இங்குள்ள சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்துதான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்தத் தண்ணீர் ஒருவித வாசனையுடன் வந்ததாக தெரிகிறது. இதனால் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்த தண்ணீரை 10-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியதாக தெரிகிறது. தண்ணீரை குடித்த பழனிச்சாமி (வயது50), வெள்ளையம்மாள் (60), விஜயா(47) உள்பட 10 பேர் வாந்தி எடுத்தனர். உடனடியாக அவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் 9 பேர் வீடு திரும்பினர்.
நேற்று நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயா சங்கர் தலைமையில் சமத்துவபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். ஒருவித வாசனையுடன் வந்த தண்ணீர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






