search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி -  அமைச்சர் மு.ெப.சாமிநாதன் திறந்துவைத்தார்
    X

    அமைச்சர் குடிநீர் குழாயை திறந்து வைத்த காட்சி.

    ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி - அமைச்சர் மு.ெப.சாமிநாதன் திறந்துவைத்தார்

    • ரூ.10 லட்சம் மதிப்பிலான நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது.
    • விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பாப்பினி ஊராட்சி, வரதப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். குடிநீர் தொட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவனாந்தன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×