என் மலர்
நீங்கள் தேடியது "வேங்கை வயல்"
- எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள்.
- புள்ளி விவரங்களை தி.மு.க. வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டப வளாகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாம் மிகப்பெரிய உயரத்தை எட்டிக்கொண்டு இருக்கின்றோம். 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற பாரத பிரதமர் கனவு நிறைவேற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள். புள்ளி விவரங்களை தி.மு.க. வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு தி.மு.க. முழுக்க முழுக்க எதிரியாக உள்ளது.
ஆளும் கட்சியாக தி.மு.க. வந்த பிறகும், முதலமைச்சர் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க., எதிர்க்கட்சி போல் நடப்பது சரியா?. குழந்தைகளின் அறிவுத்திறனை பொறுத்து என்ன படித்தால் மேன்மை பெற முடியும் என்பதை பார்க்க வேண்டும். பெற்றோரின் கனவை குழந்தைகள் மீது திணிப்பதும் தவறு.
வேங்கை வயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். இன்னும் முதலமைச்சர் வன்மத்தை தூண்டுகிறார்.
அ.தி.மு.க. பொன்விழா மாநாடு மிக சிறப்பாக நடக்க எங்கள் வாழ்த்துக்கள். சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். சமூகத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்களே பல இடங்களில் சாதி வன்மத்தை கடைப்பிடிக்கிறார்கள். ரெட் ஜெயின் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய படம் எடுக்கிறார்கள். இதை பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். படம் சமூக அக்கரையில் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை படம் எடுப்பது என்பது வேறு. வன்முறையை தூண்டுவதை தடுக்க வேண்டும். இதனை முதலமைச்சர் பாராட்டுகிறார்.
நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் அவர் வீட்டில் இருந்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேங்கைவயல் கொடூரம், நாங்குநேரி வன்முறை இரண்டையுமே தமிழகத்தின் அவமானச் சின்னங்களாகவே பார்க்க வேண்டும்.
- குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வருத்தத்துடன் கூறியதாவது:-
"வேங்கைவயல் கொடூரம், நாங்குநேரி வன்முறை இரண்டையுமே தமிழகத்தின் அவமானச் சின்னங்களாகவே பார்க்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும், சமூகநீதிக்குச் சவால்விடும் சம்பவம் இது. அமைச்சர்கள் அங்கு சென்றிருந்தாலும், முதல்வர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்திருக்க வேண்டும். அப்போதுதான், சாதியவாதிகளுக்கு இதுபோல் செய்வதற்குத் துணிச்சல் வராது. முதல்வர் நேரில் அங்கு செல்லாதது வருத்தம்தான்!"
- மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை.
- தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பிரச்சனையாகி, இப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் முடிவுக்கு வருவதற்கு முன்பாக வேங்கை வயல் போன்று இன்னொரு சம்பவம் திருச்சி மாநகராட்சி பகுதியில் நடந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
நேற்று மாலை 7 மணி அளவில் இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய மர்ம ஆசாமிகள் சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்று உள்ளனர். இதை கவனித்த மக்கள் தொட்டியின் மேலே சென்று பாலித்தின் பையில் மிதந்தது மனித மலம் போன்று இருந்தது.
இந்த தகவல் அறிந்த 20-வது வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர் கள், தண்ணீரில் கிடந்த கழிவை அகற்றி விட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப் படுத்தினர். பின்னர் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.
அவர்கள் தரப்பில் மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை. ஆனால் இதுவரை அதில் தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.
இது குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்கு பயன் படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி ஆகும். மலம் கலந்த மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






