என் மலர்

    நீங்கள் தேடியது "Water"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்ணீர் வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன.
    • சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டதும் விவசாயிகள் உற்சாகத்துடன் வழக்கமான அளவை விட அதிக அளவில் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். செப்டம்பர் 30-க்குள் சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைய வேண்டும்.

    ஆனால், தமிழகத்திற்கு, கர்நாடகம் வழக்கமாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை.
    • ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மனு

    55-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை. இந்த மாதமும் இதுவரை நடைபெற வில்லை. இதனால் மக்கள் குறைகளை மன்ற கூட்டங்களில் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத காரணத்தால் ஏராளமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    அடிப்படை தேவையான குடிநீர் சரிவர கிடைக்காததற்கு காரணம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததே காரணம். எனவே உடனடியாக மாநகராட்சி கூட்டத்தை நடத்தி, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திராவிடர் தமிழர் கட்சி

    திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருகுமரன் கொடுத்த மனுவில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் தச்சை மண்டலம் வண்ணார்பேட்டை பகுதியில் தூய்மை பணியில் வடிவேல் முருகன் என்பவரை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி உள்ளனர்.

    இதனால் அவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரை கட்டாயப்படுத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    சீரான குடிநீர்

    5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் கொடுத்த மனுவில், எங்கள் வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்கி 1 மாதத்திற்கும் மேலாகிறது. ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறப்பாளராக பணியாற்றியவர் மாற்றப்பட்டு வேறொருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    நீர் மட்டம் உயர்வு

    இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர், காக்காச்சியில் 28 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 27 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதேபோல் பாளையங்கோட்டை, நெல்லை, களக்காடு, ஊத்து, முன்னீர்பள்ளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக நேற்று 64.50 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 67.60 அடியாக உள்ளது. அணைக்கு 1946.215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 354.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 82.41 அடியாக உள்ளது.

    இதேபோல் மணி முத்தாறு அணை நீர்மட்டம் 44.90 அடியாக உள்ளது. நேற்று இரவு பெய்த மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    குறிப்பாக சந்திப்பு பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.
    • இச்செய்தியை உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமூர்த்தி நகர் தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாலும் முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதாலும் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் உடுமலை நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாரத்திற்கு 2 முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் 2 வாரத்துக்கு ஒரு முறை வரும் சூழல் நிலவுகிறது.
    • மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

    உடுமலை:

    உடுமலை பகுதியில் நிலவுகின்ற நிர்வாக குளறுபடிகள், குடிநீர் குழாய் உடைப்புகள் காரணமாக கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.இதனால் வாரத்திற்கு 2 முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் 2 வாரத்துக்கு ஒரு முறை வரும் சூழல் நிலவுகிறது.

    இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாள்தோறும் குடிநீரை வழங்க முடியாமல் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக மன்ற நிர்வாக கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை

    . மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யாத குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் எதற்கு?அதில் பணிபுரியும் அதிகாரிகள் எதற்கு? என்ற கேள்வியே நம் முன்னே நிற்கிறது.கிராமங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கணக்கீடு செய்து தண்ணீர் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

    எனவே பொதுமக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் உடுமலை பகுதி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேல்நிலை தொட்டிக்கு செல்லும் தண்ணீரை மோட்டார் வைத்து திருடும் தனிநபர்களால குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்படுகிறார்கள்.
    • குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் பனைக்குடி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பல மாதங்களாக குடிநீருக்காக கடும் அவதி வருகின்றனர்.

    பனைக்குடி பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை தொட்டி மட்டுமே உள்ளது.இதற்கு நாள்தோறும் குடிநீர் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் பனைக்குடி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வரும் தனி நபர்கள் சிலர் பம்பு செட்டிலிருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குடிநீரை திருடி தங்களது வீடுகளில் வைத்துள்ள சின்டெக்ஸ் டேங்குகளில் நிரப்பி வருகின்றனர்.

    இதனால் கிராம மக்கள் போதிய குடிநீர் கிடைக்க வழியின்றி கடும் அல்லல் படுகின்றனர். சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீரை சேகரிப்பவர்கள் குளிப்ப தற்கும், புழங்குவதற்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சவும் என வீணாக பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்து வரு கின்றனர்.

    நாள்தோறும் குடிக்கவே தண்ணீரின்றி குடங்களை தூக்கிக்கொண்டு அடுத் தடுத்த தெருவிற்கு அலைந்து வரும் சூழ்நிலையில் தனி நபர்களின் இவ்வாறான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில சமயங்களில் மேல் நிலை தொட்டி நிரம்பினா லும் குடிநீர் வீணாகி 24 மணி நேரமும் மின் மோட்டார் இயங்குவதுடன் குடிநீரும் அப்பகுதியின் பல்வேறு இடங்களில் ஆறாக ஓடுவதாகவும், இது குறித்து ஆபரேட்டரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து கண்டுகொள்வதே இல்லையெனவும் பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    ஆகவே சம்மந்தப்பட்ட நரிக்குடி யூனியன் அலுவலக அதிகாரிகளும், குடிநீர் வாரிய அதிகாரிகளும் உடனடியாக பனைக்குடி கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீரை வழிமறித்து அதனை சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீரை வீணாக்கி வருபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் குடிநீர் நீரேற்று நிலையத்தை 24 மணி நேரமும் இயக்கி அதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணாக முக்கிய காரணமாக இருந்து வரும் குடிநீர் ஆப்ரேட்டர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி களின் ஆய்வாளரான மாவட்ட கலெக்டருக்கும் பொதுமக்களும், சமூக அலுவலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
    • நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.

    பூதலூர்:

    மேட்டூர் அணையில் நீர் இருப்பு நிலவரம் நாளுக்கு நாள் கவலை அளிப்பதாக உள்ளது.

    இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 40.38டிஎம்சி ஆக இருந்தது.

    நீர்வரத்து 2556கன அடி, தண்ணீர் 6503 கன அடிதிறந்து விடப்படுகிறது.

    கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    வெண்ணாற்றில் 2402 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வெண்ணாற்றில் 2601 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மேலும் தண்ணீர் திறப்பு குறைக்கபட்டுள்ளது.

    விடுமுறை நாளான நேற்று கல்லணையில் சுற்றுலா பயணிகள் கூடி மிக சிறிய அளவில் காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி பாசன பகுதிகளில் பல இடங்களில் குறுவை பயிர் கதிர் வந்து காணப்படுகிறது.

    முன்னதாக நடவு செய்த குறுவை இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்படும்.கால்வாய்களில் தண்ணீர் வந்து நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.

    தற்போதயசூழலில் மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் குறுவை பயிரை காப்பாற்ற போது மானதாக இருக்காது என்று விவசா யிகள் கருதுகின்றனர்.

    குறுவை பயிர் செய்துள்ள பகுதியில் மழை பெய்தால் குறுவை தப்பிக்கும்.

    இல்லை என்றால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னோடி விவசாயகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது
    • பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 74.33 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,534 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கா ல் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கரா யன் பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று முதல் 550 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புன்னம் சத்திரம் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்
    • இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் வடிகால் பணிகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், சிலர் வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணல்களை கொட்டி வைத்து அடைத்து விடுவதாலும், கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்பதால் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகிய தொற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள்புன்னம் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று சாக்கடை கழிவு நீர் கால்வாயில் அடைபட்டு கிடக்கும் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோட்டப்பாளையம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • இங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் கிராம பகுதிகளில்முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து கோட்ட பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கோட்டப்பாளையம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் மிகக் குறைந்த அளவே விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறோம். மேலும் இங்குள்ள கிணறுகளில் சப்பைத் தண்ணீர் உள்ளது.

    அதனை எடுக்க சுமார் 5 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print