என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water"

    நமது தமிழ் மருத்துவ நூல்களில் நீரின் வகைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ பயன்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை அருந்தும் முறை பற்றியும் விளக்குகின்றன.
    தண்ணீர் நமது உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது.சராசரியாக நமது உடலுக்கு 2½லிட்டர் நீர் பருகவேண்டும். நீரின்றி அமையாது உலகு என்கிறார் திருவள்ளுவர். உலகில் முக்கால்பங்கு நீராகவும், கால் பங்கு நிலமாகவும் அமைந்துள்ளது. அதே போல நமது உடலிலும் 60 முதல்70 சதவீதம் திரவப் பொருள்களே உள்ளன.

    நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், பருகும் நீரின் மூலமாகவும் நமது உடலுக்கு தேவையான நீர் கிடைக்கின்றது. வளர்ந்த வாலிப பருவத்தில் உள்ளவர்கள் 2 முதல் 2½ லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அருந்தலாம். உடல் எடைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் நாம் அருந்தும் நீரின் அளவு மாறுபடும். நமது தமிழ் மருத்துவ நூல்களில் நீரின் வகைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ பயன்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பனி நீரினால் பலவிதமான தோல் நோய்கள் நீங்கும். ஆலங்கட்டி நீரினால் வெள்ளை நோய், பெரும்பாடு, தேள்கடி வி‌ஷம் போன்றவை நீங்கும். மழை நீரினால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். அகால மழைநீர் பருகுவதற்கு தகுந்ததாக அமையாது. இதே போல கிணறு, ஆறு, ஏரி, குளம் போன்ற அனைத்து நீர்நிலைகளுக்கும் குறிப்பிட்ட மருத்துவ பயன் இருப்பதாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

    சராசரியாக நமது உடலுக்கு 2½லிட்டர் நீர் தேவைப்படுவதாக கூறினோம். அதில் 1500மிலி நாம் பருகும் நீராகவும், 750மிலி நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், 250மிலி நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் மூலமாகவும் கிடைக்கின்றது. அதேபோல 2½லிட்டர் நீர் தினசரி நம் உடலில் இருந்து வெளியேற்றவும் செய்யப்படுகிறது. 1500மிலி சிறுநீரின் மூலமாகவும், 700மிலி நமது தோல் மற்றும் சுவாசத்தின் மூலமாகவும், 100மிலி மலத்தின் வழியாகவும், 200மிலி வியர்வையின் மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது.

    நாம் அருந்தும் நீரில் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் உள்ளன. இவற்றை எலக்ட்ரோலைட்ஸ் என்று கூறுகிறோம். நமது உடலின் சமநிலை திட்டத்திற்கு, நாம் பருகும் தண்ணீர் மற்றும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும், எலக்ட்ரோலைட்களின் அளவும் இன்றியமையாதது. எனவே தண்ணீரை தேவைக்கு அதிகமாக பருகினாலும், குறைவாக பருகினாலும் அது நமது உடலின் சமநிலை திட்டத்தை பாதித்து நோய் நிலையை ஏற்படுத்தும்.

    தண்ணீரை அருந்தும் முறை பற்றி நம் தமிழ் மருத்துவ நூல்கள் விளக்குகின்றன. உணவு உண்ணும் போது வெந்நீரையோ அல்லது தண்ணீரையோ குடித்தலால் பசி மந்தப்படும். உணவு உண்ட சிறிது நேரம் கழித்து தண்ணீர் அருந்துவதால் செரிமானம் எளிதாகும். உடலுக்கு நன்மை உண்டாகும். காய்ந்து ஆறிய தண்ணீரால் பேதி, குன்மம், வாதாதிக்கம் போன்றவை நீங்கும் என வைத்திய நூல்கள் விளக்குகின்றன.

    நாம் பருகும் தண்ணீர் மற்றும் அதில் கரைந்துள்ள கனிமங்கள் மூலமே நமது உடலின் செயல் இயக்கம் இயல்பாக நடைபெறுகிறது. தண்ணீர் நமது உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது. நமது உடலில் வளர்ச்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு வெப்பச்சமநிலை அவசியம். மேலும் தண்ணீரின் அமில கார சமநிலை ஜீலீ 7. இது அமிலத்திற்கும் காரத்திற்கும் நடுநிலையான அளவு ஆகும். எனவே உடலின் பல வேதி வினைகளுக்கு தண்ணீர் அடிப்படையாக உள்ளது.

    நமது உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்து செல்லவும், கழிவுப்பொருள்களை வெளியேற்றவும், உணவு செரிமானத்திற்கும் தண்ணீரே அடிப்படை. இதேபோல கனிமங்களான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நரம்புகளில் தூண்டல்களை கடத்தவும், இதயத்தின் இயக்கத்திற்கு இன்றியமையாதவை ஆகும். உடலின் அமில கார சமநிலைக்கு குளோரின் என்ற கனிமம் இன்றியமையாதது. அதே போல தசைகளின் இயக்கம் மற்றும் நரம்புகளின் இயக்கத்தில் கால்சியம்) என்ற கனிமம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

    இந்த சமநிலை பாதிக்கப்படும் பொழுது உடல்வறட்சி, தசைகளில் வலி, இதய செயல்பாட்டில் மாற்றம், சிறுநீர் வெளியேறுவதில் மாற்றம், குழப்பம், மன அழுத்தம், உடல் வீக்கம், தலைவலி, வலிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், செரிமான குறைபாடுகள் போன்ற பல நோய்கள் ஏற்பட அடிப்படையாக அமைகின்றன. இதன்மூலம் நாம் பருகும் நீரின் முக்கியத்துவத்தை நம்மால் அறிய முடியும்.

    எனவே தண்ணீரானது தாகத்தினை தணிப்பதற்கு மட்டும் இன்றி, அது இயல்பாகவே பல பிணிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் மருந்தாகவும், உடலின் இயல்பான இயக்கத்திற்கு அடிப்படையாகவும் உள்ளது. இத்தகைய மருத்துவ பயனுடைய தண்ணீரைக் கொண்டு பிணிகளை நீக்கும் ஒரு இயற்கை மருத்துவ முறையே நீர் சிகிச்சை ஆகும். இந்த நீர் சிகிச்சையில் 2 வகைகள் உள்ளன.

    அவை புற சிகிச்சை, அக சிகிச்சை. இவை இரண்டும் மேலும் பல துணை வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. முதலில் அக சிகிச்சையில் காலை எழுந்து பல் துலக்கிய உடன் ½ முதல் 1 லிட்டர் வரை சாதாரண தண்ணீரோ (அ) வெதுவெதுப்பான தண்ணீரையோ மெதுவாக பருகவேண்டும். இதன் பின்னர் 30 நிமிடங்கள் வரை வேறு எதுவும் அருந்த கூடாது. மீண்டும் உறங்கச் செல்லாமல் சிறிது தூரம் நடப்பது சிறந்தது.

    இதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்படும். மலச்சிக்கலை நீக்கும். உணவு பாதையின் செயல்பாடு சீராகும். அஜீரணம் நீங்கும். உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும். இங்கு கூறப்பட்ட நீரின் அளவு இயல்பான உடல் நிலையில் உள்ள ஒருவருக்கு பொருந்தும். ஏற்கனவே சிறுநீரக நோய்கள், உடல் வீக்கம், குடல் புண் போன்ற வேறு ஏதும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படியே இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

    அகசிகிச்சையின் மற்றொரு முக்கியமான பிரிவு குடல் பகுதியை கழுவுதல். இதில் மலவாயில் வழியாக குறிப்பிட்ட அளவு நீரானது மருத்துவர்களால் குடல்பகுதியில் செலுத்தப்படும். இந்த சிகிச்சையின் மூலம் குடல் பகுதியானது முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் உணவு செரிமானம் மற்றும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகிக்கும் திறன் மேம்படுகிறது.

    நீர் சிகிச்சையின், புற சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. இவை அதற்கென குறிப்பிட்ட மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவரிடமே மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் வலிப்பு, நரம்பு நோய்கள் , இருதய நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று இச்சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த புறநீர் சிகிச்சையின் மூலம் உடலின் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடலின் வெப்ப நிலை சமச்சீராகிறது.

    இதன் ஒரு சில வகைகளாவன:

    1. வட்சு : இது மிதவெப்பமான நீரில் மேற்கொள்ளப்படும் ஒரு வித சிகிச்சை முறை ஆகும்.

    2. சிட்ஸ் பாத் : இது மூலம், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் முறை.

    3. ஸ்டீம் பாத்: இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒரு வித மருத்துவ முறை ஆகும். இவை தவிர மேலும் பலவகையான புறநீர் சிகிச்சை முறைகள் இயற்கை மருத்துவ முறையில் மேற்கொள்ளப்படுகின்றது,

    மேலும் இம்மருத்துவ முறையானது மூட்டு நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம், தசைவலி, தலைவலி போன்ற பல நோய்களில் இருந்து எளிதாக விடுபட உதவுகிறது. மேலும் ஜலநேத்தி என்ற மருத்துவ முறையானது நமது நாசியினை தூய்மை செய்யும் ஒரு இயற்கை மருத்துவ முறை ஆகும். இதன் மூலம் தொடர் தும்மல், மூக்கில் நீர் வடிதல், சைனஸ் போன்ற நோய்களில் இருந்து விடுபட முடியும். மேலும் இதன் மூலம் சுவாசம் சீராக நடைபெறும். கண்கள், காது, தொண்டை இம்மூன்று உறுப்புகளும் ஜலநேத்தி செய்வதன் மூலம் சீராக இயங்குகின்றன.

    மேலும் நமது மனதிற்கு புத்துணர்ச்சியும், முகத்திற்கு பொலிவும் தருவதோடு கோபம், மனச்சோர்வு ஆகியவற்றை நீக்கி மனதையும், உடலையும் நேர்த்தியாக இயங்கச் செய்கிறது. இந்த ஜலநேத்தி முறையை இயற்கை மருத்துவரிடம் முறையாக பயிற்சி பெற்ற பின்னர் செய்வது சிறந்தது. நாம் முன்னரே கூறியது போல மழை நீரானது உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. அதனை அப்படியே பயன்படுத்துவதை விட, காய்ச்சிய பின் பயன்படுத்துவதால் மழைநீரில் உள்ள மலினங்கள் நீக்கப்படுகின்றன. இதனை சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் வயிற்றின் அமிலச் சுரப்பை சீர் செய்கிறது.

    மேலும் உடலின் அமில கார சமநிலையை சரியான அளவில் இருக்கச் செய்கிறது. இவை தவிர மண் பானையில் வைத்து அருந்தும் நீரானது இயற்கையிலேயே குளிரூட்டப்படுகிறது. மண் பானையில் தண்ணீரை வைத்து குடிப்பதன் மூலம் தண்ணீரில் காரத்தன்மை ஏற்பட்டு அதனை பருகும் போது உடலின் அமில கார சமநிலை ஏற்படுவதாகவும் உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும் தற்கால நவீன ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர்.

    மேலும் செம்பிற்கு கிருமிகளை கொல்லும் ஆற்றல்இருப்பதாகவும், செம்பு பாத்திரத்தில் நீரை சேமித்து அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உணவுச் செரிமானம் மற்றும் ரத்தத்தின் அமில கார சமநிலை மேம்படுவதாக தற்கால நவீன ஆராய்ச்சி தரவுகள் கூறுகின்றன. ஆனால் இவைகளுக்கு எல்லாம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் மண்பானை மற்றும் செம்பு பாத்திரங்களில் நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள், மழைநீர் மற்றும் பலவிதமான நீர்நிலைகளின் பயன்களை பற்றியும் மருத்துவ குணங்களை பற்றியும் தம் நூல்களில் விளக்கி உள்ளனர்.

    எனவே தண்ணீரானது நோய் நீக்கும் மருந்தாகவும், நோய்கள் வராமல் பாதுகாக்கும் பேருபகாரியாகவும் உள்ளது. இத்தகைய மருத்துவ பயன்கள் இருக்க கூடிய தண்ணீரை சரியான அளவில், சரியான முறையில் பருகி அனைவரும் நோயில் இருந்து தற்காத்து, நல்ல உடல் நலனோடு வாழ்வோம்.
    • பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம், பண்ணாரி, அரியப்பம் பாளையம், ஓட்டை குட்டை, புளியம் கோம்பை, வட வள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன. பரவலாக மழை பெய்ததால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சி அளித்தது.

    இதே போல் திம்பம், தாளவாடி, ஆசனூர், தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    மேலும் பவானிசாகர், புளியம்பட்டி, புங்கர்பள்ளி, நல்லூர், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி- மின்னலுடன் பரவ லாக மழை பெய்தது.

    பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலுக்கு 950 கனஅடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 100 கனஅடியும், எல்.பி.பி. வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1055 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • ராஜபாளையத்தில் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை பலியானது.
    • ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன்-மாரீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் பரமேசுவரன் என்ற ஆண் குழந்தையும், 1½ வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

    நேற்று மாலை மாரீஸ்வரி துணி துவைத்து மொட்டை மாடியில் காய போட சென்றார். அப்போது வீட்டின் கீழே விளையாடிக் கொண்டிருந்த 1 ½ வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தவழ்ந்து சென்று தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டிப் பார்த்தாள்.

    இதில் குழந்தை எதிர்பாராத விதமாக பக்கெட்டில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது. துணியை காயப்போட்டுவிட்டு கீழே இறங்கி வந்த மாரீஸ்வரி குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்ததை கண்டு அலறி துடித்தார்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது அந் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • நாளை 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியையும் பார்வையிட்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    மேட்டூர் அணையில் இருந்து இன்று 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு நீர்வரத்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வெள்ள நிவாரண முகாம்களை ஏற்படுத்தி வருகிறோம். நாளை 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தங்களது கால்நடைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் ேபாது வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    வெடிகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையில் வழங்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது.

    தீயணைப்பு வீரர்கள் நீலகண்டன், வெங்கடேசன், ஆகாஷ் கண்ணன், நிரஞ்சன், விமல் ராஜ், வினோத் ஆகியோர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில், புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    • பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல்லடம் - திருப்பூர்மெயின் ரோடு அருகில் தெற்குபாளையம் பிரிவு பகுதியில் பிராமிஸ் நகர் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.இதன் அருகே பல்லடம் ராயர்பாளையத்திலிருந்து தெற்கு பாளையம் பிரிவில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் பிராமிஸ் நகர் வழியாக செல்கிறது.

    இந்தநிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மெயின் வாய்க்காலில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிராமிஸ் நகர் வாய்க்காலில் வந்து கொண்டு இருந்த நிலையில் கிளை வாய்க்காலில் மரம், செடி, கொடிகள் புதர்கள் மண்டி கிடந்ததால்தண்ணீர் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும், வாய்க்கால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    மேலும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளிலும் வாய்க்கால் தண்ணீர் கலந்து நிரம்பி வழிகின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் நகருக்குள் வந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • எங்கள் பகுதிக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என கூறியிருந்தனர்.
    • 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் தெற்கு நாங்கு நேரியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் வந்து நெல்லை கலெக்டர் அலு வலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

    சுத்தமான குடிநீர்

    தெற்கு நாங்குநேரி ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநி யோகிக்கப்பட்டு வருகிறது. அதிலும் உப்பு தண்ணீர் கலந்தும், புழுக்களுடன் விநி யோகிக்கபட்டு வருகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    சுத்தமான குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்ட சலவை தொழிலாளர் சங்க செயலாளர் மகாராஜன் தலைமையில் கொடுத்த மனுவில், வீரவநல்லூர் பகுதியில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். 3 ஆண்டுகளாக நாங்கள் பட்டா கேட்டு வருகி றோம். கடந்த ஆண்டு அப்போதைய தாசில்தார் 22 பேருக்கு பட்டா வழங்க ஆணை வழங்கினார். ஆனால் இதுவரை வழங்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ரத்த பரிசோதனை மையம்

    சமூக ஆர்வலர் செல்வ குமார் தலைமையில் தியாக ராஜ நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், நெல்லை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதி அருகே ரத்த பரிசோதனை மையம் அமைக்கபட்டுள்ளது.

    இதனால் நோயாளி களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படு கிறது. முறையான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட வில்லை. எனவே முன்பு போல அவசர சிகிச்சை பிரிவு அருகே ரத்த பரிசோதனை பிரிவை வைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    குப்பக்குறிச்சி மேட்டூர் பகுதி பொதுமக்கள் புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் 70 பேருக்கு இன்னும் பட்டா வழங்கப்பட வில்லை. இதற்கிடையே எங்கள் பகுதியில் தகுதியில்லா 164 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ஓய்வூதியம்

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நேரத்தை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும். 100 நாள் திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும். 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின்மோட்டார்களை மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சட்டத்திற்குபுறம்பாக குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும்,

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.

    மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக குடிநீர் பெறப்படுவது கண்டறியப்பட்டாலோ, வீட்டு குடிநீர் இணைப்பு களில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறிபட்டாலோ, அந்த கட்டடத்திற்கான குடிநீர் இணைப்பானது நிரந்தமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட நல்மேய்ப்பர் நகர், குறிஞ்சி மெயின் ரோடு, ரோஜா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் உதவி செயற்பொறி யாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவை சேர்ந்த செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சட்டத்திற்குபுறம்பாக குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும், மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படு வதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப் படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    உடுமலை :

    பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில் உடுமலை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.குறித்த நேரத்தில் தண்ணீர் நீரிட விலையெனில் பயிர்கள் கருகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினர் போலீஸ் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து ரோந்து செல்ல வேண்டும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியம், காடந்தேத்தி ஊராட்சியில் 190 மீள்குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் காடந்தேத்தி பஸ் நிலையத்தில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காலை, மாலை நேரங்களில் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.
    • நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-

    தேவகோட்டை நகரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசின் துணையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறுகள் நகரில் 3 இடங்களில் நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு விரைவில் தினமும் காலை, மாலை நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    நகரில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக தரம் உயர்த்தி மண் சாலை இல்லாத நகராக தேவகோட்டை மாற்றப்படும்.

    மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

    விரைவில் 6 வார்டு வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநகரங்களுக்கு இணையாக இளைஞர்கள் தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தவாறு கல்வி கற்பதற்கு வசதியாக இலவச வை-பை வசதி செய்யப்படும். நவீன விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும். தினச்சந்தை, வாரச்சந்தைக்கான புதிய கட்டிடத்திற்கு மதிப்பீடும் பணி நடக்கிறது.

    நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கால்வாய்களை மராமத்து செய்து சீர்படுத்தி குளங்கள் தூர்வாரப்படும். நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் பணியாள–ர்களுக்கு சீருடை வழங்குவது, உள்ளிட்ட 40 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

    திருச்சி

    துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காவிரி குடிநீர் மற்றும் சுற்றுசுவர் ரூபாய் 10 லட்சம் செலவில் அமைப்பது, சாமிநாதன் காய்கறி மார்க்கெட்டில் ரூபாய் 3 லட்சம் செலவில் கழிவறைகள் மராமத்து செய்வது, நகராட்சி மருத்துவமனைக்கு ரூபாய் 5 லட்சம் செலவில் குடிநீர் வசதி செய்து தருவது, காமராஜ் நகரில் பழுதடைந்துள்ள தார் சாலைகளை ரூபாய் 6 லட்சத்திற்கு புதுப்பிப்பது,

    பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது, உள்ளிட்ட 40 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளையராஜா, அம்மன் பாபு, சுமதி மதியழகன், முத்து மாங்கனி பிரபு, பாலமுருகவேல், கௌதமி கருணாகரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×