search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B.A.B. Drainage"

    • முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது.
    • கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கிலோ மீட்டர் நீளம் பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 லாரி அளவு தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் திருட்டின் மதிப்பை கணக்கிடுகையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 கோடி வரை நடந்திருக்கலாம். கால்வாயின் மொத்த தூரமான 126 கிலோ மீட்டருக்கும் கணக்கிட்டால் பல கோடி ரூபாய் வரை தண்ணீர் திருட்டு நடந்திருக்க கூடும் என காங்கயம்-வெள்ளகோவில் பி.ஏ.பி. நீர் பாசன சங்க தலைவர் பி.வேலுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் நீர் பாசன சங்கத்தின் மூலம் போடப்பட்ட விதிமுறைகளை தாண்டி பல அடி ஆழத்திற்கு குழாய்கள் அமைத்தும், அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வைத்தும் கால்வாயில் பாயும் நீரை திருடுகின்றனர். முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். இது போன்று பல இடங்களில் பல விதமாக தண்ணீர் திருடுவதன் மூலம் கடைமடை விவசாயிகள் தண்ணீரை அனுபவிக்கும் சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீர் பாசன அதிகாரிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரத் துறை ஆகியோர் சேர்ந்து தண்ணீர் திருட்டை தடுத்து முறையான பாசன நீர் வினியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுத்து சமச்சீராக நீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ேமலும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் (நீர்வளத்துறை) காங்கயம்- வெள்ளகோவில் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார்.
    • திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட இடம் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    உடுமலை உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார்.உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக் கூறி பேசினார்கள். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் திருமூர்த்திஅணை கட்டப்பட்ட போது பல்வேறு விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலத்தை தானமாக வழங்கினார்கள்.இதனால் பாசனத்திற்கு தண்ணீரும் குடிப்பதற்கு குடிநீரும் இன்றளவும் தடையில்லாமல் பெற்று வருகின்றோம். ஆனால் திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட இடம் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.அதை தவிர்க்க வேண்டும்.பொதுநல நோக்கோடு வழங்கப்பட்ட அந்த நிலங்களை அணைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மேலும் பிஏபி கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் போது திருட்டு நடைபெற்று வருவது தொடர்கதையாக உள்ளது. அதை தடுப்பதற்கு அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கடைமடை விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

    உடுமலை பகுதியில் கேபிள் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவதில்லை. உழவர் சந்தையில் இடம் பற்றாக்குறை காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் உழவர் சந்தைக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் தினசரி சந்தையை மேம்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். விவசாயிகள் பொதுமக்கள் அளிக்கின்ற புகார் மனுக்களுக்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் குறைகளுக்கு தீர்வு காண முடியாமல் பொதுமக்கள் விவசாயிகள் மாதக்கணக்கில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தளி பேரூராட்சி பகுதியில் அதிக அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டு உள்ளது. முறையான அனுமதி இன்றி எடுத்துச் செல்லப்பட்ட கிராவல் மண் சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் ஏழை எளிய மக்கள் மண் எடுப்பதற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.

    அமராவதி சர்க்கரை ஆலையில் இளம் சூடு ஏற்றுதல் தாமதமாக நடைபெறுகிறது.கரும்பு அறுவடைக்கு முன்பே பணியை முடித்திருக்க வேண்டும். நடவடிக்கை தாமதம் ஆவதால் கரும்பின் எடை குறைந்து விவசாயிக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது.எனவே கரும்பு அரவையை சர்க்கரை ஆலையில் விரைந்து தொடங்க வேண்டும். அதே போன்று நீராதாரங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. இதனால் மழை காலத்துக்குள் நீராதாரங்கள் ஆழப்படுத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது. மேலும் நீர் வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் உடுமலை பகுதி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டங்களில் நிலவும் குளறுபடிகளால் கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அதுமட்டுமின்றி வேளாண்மை துறை,தோட்டக்கலைத்துறை, பொருளியல் துறை இணைந்த ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் ஒருங்கிணைந்த சேவையை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். உடுமலை மடத்துக்குளம் பகுதியில் நில அளவை பிரிவில் அளிக்கின்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ளது.அதற்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். மேலும் பொன்னாலம்மன் சோலை பகுதியில் இருந்து குழிப்பட்டி மலைவாழ் கிராமத்திற்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.அதை மீட்டு மலைவாழ் மக்கள் சமதள பகுதிக்கு வந்து செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.ஆனால் முகாமுக்கு வருகை தந்திருந்த துறை சார்ந்த அதிகாரிகளில் ஒரு சிலரே குறைகளுக்கு பதில் அளித்தனர்.மற்ற அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு அமர்ந்து இருந்தனர்.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் உரிய பதில் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.இந்த கூட்டத்தில் தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ உதவியாளர் ஜலஜா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் வழியாக பாசன நீர் பகிர்ந்தளிக்கபட்டு வருகிறது. தற்போது மூன்றாம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி., கால்வாய்களிலிருந்து 4-ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒருசிலர் இந்த கால்வாய்களில் கரைகளை சேதப்படுத்தி குழாய்கள் அமைத்து கடை மடை விவசாயிகளுக்கு நீர் தட்டுபாட்டை ஏற்படுத்தும் வகையில்நீரை உறிஞ்சி நீர்திருட்டில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதைத்தொடர்ந்து பாசன சங்கதலைவர்கள் சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது உடுமலையிலிருந்து பிரியும் மைவாடி பகிர்மான கால்வாயில் கரைகளை சேதப்படுத்தி பக்கவாட்டில் துளையிட்டு நிரந்தரமாக பி.வி.சி., குழாய்களை அமைத்து ஒரு சிலர் நீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், முறைகேடாக நீர்திருட்டில் ஈடுபட்டோர் மீது புகார் அளிக்கபட்டுள்ளதாகவும் வாய்க்கால் கரைகளை சேதபடுத்தி நீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.  

    • மவுனகுருசாமி:விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மண் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலி விதைகளைத் தடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை ஆர்டிஓ அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.உடுமலை தாசில்தார் கண்ணாமணி,ஆர்டிஓ. நேர்முக உதவியாளர் ஜலஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

    மவுனகுருசாமி:விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மண் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இதனைத் தடுக்க வேண்டும்.திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது.இதற்கு பராமரிப்புப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் சரியாக பணி செய்யாதது காரணமா என்பது குறித்து ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.சின்னாருக்கு மேல் வனப்பகுதிக்குள் அரசியல் உள்நோக்கத்தோடு சில வேலைகள் நடைபெறுகிறது.அதனைத் தடுக்க வேண்டும்.

    பெரியசாமி:மசக்கவுண்டன் புதூர் அருகில் தென்னை நார் தொழிற்சாலை அமைப்பதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.கோர்ட் உத்தரவை மதிக்காமல் மின் வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளது.உடனடியாக மின் துண்டிப்பு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மின் கம்பியில் சுருக்கு போட்டு தூங்குவோம்.தரமற்ற மக்காச்சோள விதைகளால் ஏக்கருக்கு 21 மூட்டை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலி விதைகளைத் தடுக்க வேண்டும்.

    ராமசாமி:காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களால் பெருமளவு இழப்பு ஏற்படுகிறது.ஆனால் காட்டுப்பன்றியால் ஏற்பட்ட சேதத்துக்கு மட்டுமே வனத்துறை இழப்பீடு வழங்குகிறது.காலம் தவறி ஜனவரி மாதம் பூக்கும் பருவத்தில் பெய்த மழையால் நெல் சாகுபடியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    பாலதண்டபாணி:மருள்பட்டி பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளது.அதனை மீட்டுத்தர வேண்டும்.104 ஏக்கர் பரப்பளவில் உள்ள மருள்பட்டி குளத்திற்கு நீர் வரத்து பெறக்கூடிய நீர்வழித்தடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும்.கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு ஏக்கர் மக்காசோளத்தட்டை ரூ .5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.ஆனால் உடுமலையில் கொழுமம் சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில போலீசார் அந்த வாகனங்களை நிறுத்தி ரூ .100 வசூல் செய்கின்றனர்.மேலும் காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்துகின்றனர்.இதனால் ஏற்படும் காலதாமதத்தால் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே விவசாய வாகனங்களை தடுத்து நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.அமராவதி சர்க்கரை ஆலையில் அரவைக்காக 2 ஆயிரத்து 650 ஏக்கர் கரும்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதம் சரியான படி அரவை துவங்குமா என்ற சந்தேகம் உள்ளது.அதனை தெளிவுபடுத்த வேண்டும்.

    மதுசூதனன்:அரசு மூலம் உற்பத்தி செய்யப்படும் அசோஸ்பைரில்லம்,பாஸ்போ பாக்டீரியா போன்றவை வேளாண்மைத்துறை மூலம் 50 சதவீதம்மானியத்தில் வழங்கப்படுகிறது.அதே நேரத்தில் தனியார் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதே பொருட்கள் தோட்டக்கலைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.மானியம் என்ற பெயரில் வெளிச்சந்தையை விட அதிக விலைக்கு இனக்கவர்ச்சிப்பொறி,கடப்பாரை,மண்வெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.பயன்படுத்த முடியாத பொருட்கள் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து விரிவான கூட்டம் நடத்த வேண்டும்.உரக்கடைகளில் யூரியா கேட்டால் நானோ யூரியா வாங்கச் சொல்கிறார்கள்.இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.மக்காச்சோளத்துக்கு செஸ் வரி விதிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்துக்கு 1 சதவீதம் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது.மேலும் மக்காச்சோளத்தை தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்துக்கு ரகசிய விற்பனை செய்வதற்குப் பதில் பொது ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்.குமரலிங்கத்தில் கணவர் தேனீ கொட்டி இறந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு விதவை சான்று,முதல் திருமண சான்று வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலரால் கடும் அலைக்கழிப்பு ஏற்பட்டுள்ளது.புரோக்கரைப் பார்த்தால் தான் காரியம் நடக்கும் என்ற நிலை உள்ளது.

    சேனாதிபதி:கோவில் நிலங்கள் பல இடங்களில் தனி நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக செல்லப்பம்பாளையம் கரட்டுப்பெருமாள் கோவிலுக்குச்சொந்தமான 25 ஏக்கர் நிலம்தனி நபருக்கு பட்டா செய்யப்பட்டுள்ளது.

    கோபால்: கலெக்டர் உத்தரவை மீறி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு பாண்ட் பேப்பரில் ஒப்பந்தம் கேட்கிறார்கள்.விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதை எளிமைப்படுத்தாமல் அலைக்கழிக்கப்படும் நிலையில் வணிக நோக்கத்துக்காக எடுப்பவர்கள் தங்கு தடையில்லாமல் எளிதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சிங்காரம்: மது அருந்துபவர்கள் பிஏபி. வாய்க்கால்,இட்டேரி போன்ற இடங்களில் உடைத்து வீசுவதால் விவசாயிகளும் கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எரிசனம்பட்டி மின்வாரிய அலுவலகம் 2 கிமீ தூரம் தள்ளி இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.எனவே பழைய இடத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெகதீஸ்ஜே: ஜே. என். பாளையம் முதல் பாலாறுதுறை வரை உள்ள சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது.இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது.தேங்காய் உரிக்கும் எந்திரத்துக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் கூடுதல் மானியம் வழங்க வேண்டும்.

    ஸ்ரீதர்:குடிமங்கலம் ஒன்றியத்தில் அரசு சிமெண்டுக்கு பணம் கட்டினால் வருவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகிறது.தற்போது பதிவு செய்வதற்கே மறுக்கிறார்கள்.பெதப்பம்பட்டி நால் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.
    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் தெற்கு அவிநாசிபாளையம் செங்காட்டுபாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் இல்லாததால் விவசாயிகள் உள்பட பலா் சிரமத்தை சந்தித்து வருகின்றனா் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.

    இதற்கிடையே, போராட்டத்துக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, விவசாயிகளுடன் வட்டாட்சியா் கோவிந்தராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதில், பி.ஏ.பி. வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு, விவசாயிகளுக்கு நீா் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.

    • காதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
    • இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    தாராபுரம்:

    பி.ஏ.பி.,இரண்டாம் மண்டல பாசனத்துக்காக தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பி.ஏ.பி.பிரதான வாய்க்கால்களில் கோழிப் பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் செத்துப்போன கோழிகளைக் கொண்டு வந்து போடுவதும், இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

    இந்நிலையில், பி.ஏ.பி.,வாய்க்காலில் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாக மிதந்து வருவது விவசாயிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குண்டடம் அருகே காணிக்கம்பட்டி அருகே பாயும் நந்தவனம்பாளையம் கிளை வாய்க்காலில் திடீரென ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் குவியல்குவியலாக மிதந்து வந்தன.

    இது குறித்து குண்டடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: -சமீப காலமாக பிஏபி. வாய்க்கால் என்பது கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. தண்ணீரில், செத்த கோழிகளை சாக்குகளில் கொண்டு வந்து வீசிச் செல்வதால் அந்த கோழிகள் அழுகிப் போய் துா்நாற்றத்துடன், விவசாய வயல்களுக்குள் வந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆயிரக்கணக்கான காலி மது பாட்டில்கள் உடைந்து, அதன் கண்ணாடிச் சிதறல்கள் வயல்களுக்குள் வந்து விவசாய வேலை செய்வோரின் கால்களை பதம் பாா்க்கும் நிலை உள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு, பிஏபி. வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    • பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல்லடம் - திருப்பூர்மெயின் ரோடு அருகில் தெற்குபாளையம் பிரிவு பகுதியில் பிராமிஸ் நகர் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.இதன் அருகே பல்லடம் ராயர்பாளையத்திலிருந்து தெற்கு பாளையம் பிரிவில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் பிராமிஸ் நகர் வழியாக செல்கிறது.

    இந்தநிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மெயின் வாய்க்காலில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிராமிஸ் நகர் வாய்க்காலில் வந்து கொண்டு இருந்த நிலையில் கிளை வாய்க்காலில் மரம், செடி, கொடிகள் புதர்கள் மண்டி கிடந்ததால்தண்ணீர் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும், வாய்க்கால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    மேலும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளிலும் வாய்க்கால் தண்ணீர் கலந்து நிரம்பி வழிகின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் நகருக்குள் வந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ×