என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
    X

    தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

    • தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் புன்னைவனம். இவரது மகன் அழகர் (30). மில் தொழிலாளியான இவர் திருமணத்துக்கு மறுத்து வந்தார். இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்த போது கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் அழகர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த அழகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×