search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம்"

    • பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது.
    • இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. சிறப்பாக செயல்படப் போவதில்லை என காங்கிரஸ் கூறியது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான மற்றும் திட்டமிட்ட முயற்சியாகும்.

    முதல் கட்ட தேர்தலில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது. இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. அவ்வளவு சிறப்பாக செயல்படப் போவதில்லை.

    மொத்தத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. இந்தியா கூட்டணி தெளிவான மற்றும் உறுதியான பெரும்பான்மை பெறப்போகிறது.

    பிரதமர் மோடியின் பிரசாரம் இப்போது விஷத்தால் நிறைந்துள்ளது. அவர் பேசும் மொழி அவரது கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது.

    பிட்ரோடா சொல்வது அவரது சொந்த கருத்துகள். அவை இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என தெரிவித்தார்.

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
    • குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.

    இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த சிறுகிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 80), முத்துலிங்கம் கடந்த சிலநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த முத்துலிங்கம் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்து அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.

    மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்
    • போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள திருவறம்பு கொல்வேர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி (வயது 47). செங்கல் சூளை தொழிலாளியான இவர், மனைவி-மகளை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான ஜெபமணி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஜெபமணி, மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் பாய் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரும்பிய படிப்பை படிக்க முடியாததால் வேதனை
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா(வயது17).

    இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ரம்யா விவசாயம் தொடர்பான படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் அவரை அவரது பெற்றோர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து விட்டனர்.

    இதன் காரணமாக ரம்யா கடந்த சில நாட்களாக படிப்பில் நாட்டம் இல்லாமல் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று கல்லூரியில் இருந்த அவர் கழிவறைக்கு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்து எலி மருந்தை சாப்பிட்டார்.

    பின்னர் வகுப்பறையில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த பேராசிரியர்கள் உடனடியாக ரம்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் ரம்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் ேபாலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நட்டாலம் காட்டாவிளையைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 39), தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்துரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.
    • மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரதீப் (வயது 26). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    குடும்ப தகராறு

    இவருக்கு வீர லட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவரது மனைவிக்கும், இவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வீரலட்சுமி டவுன் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் மகளிர் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.

    விஷம் குடித்தார்

    அப்போது அவரை போலீசார் கண்டித்தனர். இதனால் மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீவிர சிகிச்சை

    உடனடியாக போலீசார் அங்கு சென்று பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விஷம் குடித்த பிரதீப்பின் தாய் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    • மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால்
    • மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (48). விவசாயி. இவரது மனைவி தீபலட்சுமி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் மோகன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் மனைவி தோட்டத்திற்கு சென்று விட்ட நேரத்தில் தனியாக வீட்டில் இருந்த மோகன் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மகள் மத்திய துணை ராணுவ படையில் அசாமில் வேலை பார்த்து வருகிறார்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே உள்ள அண்டூர்புல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (வயது 53), தொழிலாளி. இவர் நேற்று மாலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கவனித்த மகன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெஸ்டஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ஜெஸ்டஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்த ஜெஸ்டசின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகள் மத்திய துணை ராணுவ படையில் அசாமில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் மற்றும் மகனுடன் ஜெஸ்டஸ் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மரம் ஏறும் பொழுது கீழே விழுந்ததில் சுந்தர் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
    • மனமுடைந்த சுந்தர் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 41). விவசாயி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மரம் ஏறும் பொழுது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரமாக மது அருந்தி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்தார். இதுகுறித்து சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்.
    • மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லுர் அருகே கோட்டைமேடு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (வயது35). இவர் தனது மகன் மேசாக் (11) மகள் மேகா (9) ஆகியோரு டன் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு அலங்காநல்லுர் போலீஸ் நிலையத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தார்.

    அப்போது கண்மணி மற்றும் குழந்தைகள் திடீ ரென மயங்கி விழுந்து உள்ளனர். பின்னர் கண்மணியிடம் போலீசார் விசாரித்தபோது, தான் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமார் 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரி வித்தார். மேலும் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த சரண் ராஜ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு சுமார் 2 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வந்த தாகவும் கூறினார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணுடன் சரண் ராஜூக்கு திருமணம் ஆகி விட்டது தெரியவந்ததால் தன்னை சரண்ராஜ் ஏமாற்றிய மன வேதனையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து தானும், தனது 2 குழந்தைகளும் எலி பேஸ்டை சாப்பிட்டு விட்ட தாகவும் கூறி உள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த போலீ சார் உடனடியாக அவர்கள் 3 பேரையும் அலங்காநல்லுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக் காதலால் இளம்பெண் தனது இரு குழந்தையுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×