search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சியில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
    X

    கோப்பு படம் 

    மணவாளக்குறிச்சியில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

    • ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி காந்தாரிவிளையை சேர்ந்தவர் மாகீன் (வயது 60). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கும் உடைய இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். கட்டிலில் படுத்த அவர் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாகீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி பதர்நிஷா (55) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×