search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பளுகல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    கோப்பு படம் 

    பளுகல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • வாழைக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டு தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
    • பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள பூம்பள்ளி கோணம் மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் வினுகுமார்(வயது46), விவசாயி.

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் சரிவர வேலைக்கு செல்வ தில்லை. சம்பவத்தன்று வினுகுமார் வீட்டில் இருந்து மது குடித்து உள்ளார்.

    இதனை அவரது மனைவி கண்டித்து உள்ளார். ஆனால் அதனை வினுகுமார் கேட்கவில்லை. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.

    இதனால் மனமுடைந்த வினுகுமார் வாழைக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டு தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் விரைந்து வந்து கார் மூலம் வினுகுமாரை காரக்கோணம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினு குமார் இன்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வினுகுமாரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×