search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    • குடிநீர் வினியோகம் இன்று இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

    அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க்ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, அண்ணாநகர் மண்டலத்தை பொறுத்தவரையில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிகேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகளிலும், அடையாறு மண்டலத்தில் ஆர்.ஏ.புரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள https://cmwssb.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில், தொட்டிகள் மற்றும் தெரு நடைகள் மூலம் லாரிகள் குடிநீர் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-45674567 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.
    • நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.

    நேற்று 79 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 57 கன அடியாக சரிந்தது.

    இதற்கிடையே கோடை காலத்தில் அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் கடந்த 11-ந் தேதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இருப்பினும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடிக்கும் கீழ் தொடர்ந்து நீடிப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.98 டி.எம்.சி.யாக உள்ளது.

    அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1500 கன அடியில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.
    • குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

    சென்னையில் தினமும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 700 நடைகள் (டிரிப்) குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 நடைகளாக உயர்ந்து உள்ளது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.

    இது குறித்து சென்னை குடிநீர் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. குழாய் மூலம் குடிநீர் வழங்க முடியாத பகுதிகளில் டயல் செய்து ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி இருப்பதால் ஏராளமானவர்கள் இதன் வழியாக குடிநீருக்கு பதிவு செய்கின்றனர். பணம் செலுத்தி குடிநீர் பெறுவோர் பயன்பாடு கூடியுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.

    மேலும், மார்ச் மாதத்தில் தெருக்களில் உள்ள தொட்டிகளை நிரப்ப 61 ஆயிரம் நடைகள் பயன்படுத்தப்பட்டன. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த லாரி டிரிப்புகள் 24,800 ஆக அதிகரித்துள்ளது.

    இதே போல டயல் குடிநீர் தேவை 30 ஆயிரம் நடைகளை உயர்ந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு லாரிகளின் டிரிப்புகளை அதிகரித்துள்ளது. தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    டேங்கர் லாரிகளின் பயணங்களை அதிகரிப்ப தன் மூலம் தனியார் தண்ணீர் டேங்கர் சப்ளையர்களின் ஆதிக்கத்தை மறைமுகமாக குறைத்து வருகிறோம்.

    புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பி உள்ளனர். அவர்களுக்கும் 'டயல்' குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,

    பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.

    தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,

    பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.

    தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெரு , கிழக்கு கரிகாலன் தெரு, டி.என்.ஜி.ஒ காலனி,ஆகிய பகுதி களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வெளியேறி வருகிறது. குடி தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் கழிவு நீர் வெளியேறி வீடுகள் முன்பு துர்நாற்றத்துடன் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மேற்கு கரிகாலன் 2-வது தெரு முட்டு சந்து என்பதால் அதிக அளவு தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.

    கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் நிலத்தடி நீரிலும் கலந்து போர்வெல் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது. இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யவில்லை. கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. தினமும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இப்பகுதியில் நோய்தொற்று பரவும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சுட்டெரிக்கும் வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.
    • கோடை காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இருக்கும் நிலையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் 11.75 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும்.

    ஆனால் இந்த ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு குறைவாக தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.

    கோடை காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இருக்கும் நிலையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் இந்த அளவிலேயே குடிநீர் தேவை இருந்து வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு குடிநீர் தேவை சற்று அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் பயன்பாடு உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி 1073 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக அதிகரித்துள்ளது. வீடுகளுக்கான குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் லாரிகளின் நடை (டிரிப்) கூடியுள்ளது. டயல் வாட்டர் என்ற திட்டத்தில் பணம் செலுத்தி குடிநீர் பெறுவது தற்போது அதிகரித்துள்ளது. இதுவரையில் 900 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1020 லாரிகளாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் லாரி நடைகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாரிகள் மூலம் தெருக்களுக்கு இலவசமாக குடிநீர் வினியோகம் செய்தல், தொட்டியில் குடிநீர் வழங்குதல் போன்றவற்றிற்கு 3600 முதல் 3,800 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. லாரிகள் மூலம் மட்டும் தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. ஆனாலும் கோடை காலத்தை சமாளிக்க போதுமான தண்ணீர் இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    8 மாதத்திற்கான குடிநீர் தேவையை சமாளிக்கும் அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்கு தேவைப்படுகிறது. அக்டோபர் மாதம் வரைக்கான குடிநீர் உள்ளது.

    அதனால் பயப்பட தேவையில்லை. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் மையங்களில் பெறப்படும் குடிநீர் சென்னைக்கு கை கொடுப்பதாக தெரிவித்தனர்.

    • நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

    பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.

    இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

    மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

    கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.

    • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
    • வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சென்னை:

    சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    • கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.
    • காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் ஜெகந்தி ராபாத் நகரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.

    இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் அதனை ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடிநீர் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசன செயலாளர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில்:- காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசர தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் காமராஜர் நகர் பெரியாம்பட்டி, புல்லுக்குறிச்சி, ஜொல்லம்பட்டி, காசி கொல்லன் கொட்டாய், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் புள்ளுக்குறிச்சி, காமராஜர்நகர், பெரியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாதத்திற்கு ஒரு முறை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இது மட்டும் இல்லாமல் உள்ளூரில் வழங்கப்படும் உப்பு தண்ணீர் கூட வழங்கப்படுவதில்லை.

    பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து ஊராட்சி , மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறியிட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை .

    இதனால் குடிநீர் இன்றி அவதி அடைந்து வந்த காமராஜர் நகர் ,புல்லுக்குறிச்சி, பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் காலி குடும்பங்களுடன் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் இன்று காலை குடிநீர் கேட்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர் .

    சாலை மறியல் ஈடுபட்டு வந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் உதயசங்கர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.

    கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.

    சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×