என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிபோதை"
- ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
- அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.
தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.
கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.
உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.
இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.
இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.
500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.
இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.
சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.
இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.
அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.
பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .
அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 3,414 வாகனங்களை சோதனை நடத்தினர்.
அப்போது பள்ளி வளாகத்திற்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற 16 பள்ளி பேருந்து டிரைவர்கள் குடிபோதையில் இருப்பது கண்டிறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது நண்பரின் பெயர் சூட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு இரவு வெகுநேரம் வரை இருந்து மது சாப்பிட்டேன் என்று ஒருவர் தெரிவித்தார். மேலும் மற்றொரு டிரைவர் கூறும்போது பள்ளி முடிந்ததும் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி சோர்வடைந்தேன். இதனால் தூக்கத்திற்காக மது குடித்துவிட்டு தூங்கினேன் என்று கூறினார்.
பெங்களூர் நகரில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி வளாகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் மற்றும் சந்திப்புகளில் பள்ளி வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் டிரைவர்களை குழந்தைகளுக்கு தெரியாமல் தனியாக அழைத்து வந்து குடிபோதையில் இருக்கிறார்களா என்று அல்கோ மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில் 16 பள்ளி டிரைவர்கள் போதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர். பொதுவாக அல்கோ மீட்டரில் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு மது அருந்தியிருந்தால் மட்டுமே தெரியும் எனவே பிடிப்பட்ட 16 பேரும் காலையில் தான் மது குடித்துள்ளனர். ஆனால் அவர்கள் இரவில் மது குடித்ததாக கூறுகிறார்கள். இரவில் மது குடித்தால் காலையில் அல்கோ மீட்டர் மூலம் அதை உறுதி செய்ய முடியாது, எனவே பள்ளி பேருந்து டிரைவர்கள் கூறுவது தவறனாது.
குடித்துவிட்டு பள்ளி குழந்தைகளை பேருந்தில் ஏற்றிச் செல்வது ஆபத்தானதாகும் எனவே குடிபோதையில் பிடிபட்ட 16 டிரைவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 (கவனக்குறைவாக வண்டி ஓட்டுதல்) மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவு 185 (போதைப் பொருள் அல்லது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்டு செய்ய வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
- பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.
மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோசுக்குறிச்சி கரையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இவருக்கு முத்துலட்சுமி (35) என்ற மனைவியும், நதியா (14) என்ற மகளும் உள்ளனர். நதியா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் ஈஸ்வரனின் தாய் செல்லாயி (75) என்பவரும் வசித்து வந்தார். ஈஸ்வரனுக்கு சொந்தமான வயல் இருந்ததால் அதனை பார்த்துக் கொண்டு பசுமாடுகள் வளர்த்து பால் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.
ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மது குடித்துவிட்டு வருவதை தாய் மற்றும் மனைவி கண்டித்துள்ளனர். அவர்களுடன் ஈஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரனை மனைவி மற்றும் தாய் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அரிவாளால் தனது தாய் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதைப் பார்த்ததும் மனைவி மற்றும் மகள் நதியா ஆகியோர் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான பெரியாண்டி (80) என்பவர் எழுந்து வந்தார். அவரையும் ஈஸ்வரன் அரிவாளால் பயங்கரமாக வெட்டினார். இதில் பெரியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டையும் வெட்டினார். இதைப் பார்த்ததும் மகள் நதியா தடுக்க முயன்றார். இருந்த போதும் அவரது 2 கைகளையும் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் நதியா மயங்கி விழுந்தார்.
கையில் அரிவாளுடன் தனக்கு எதிரே வந்த அனைவரையும் வெட்ட முயன்றதால் அவர் அருகில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் ஒருவழியாக அவரை பிடித்து கால்களை கட்டினர். அதன் பிறகு நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் தலைமையிலான போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாய் உள்பட 2 பேரை வெட்டி சாய்த்ததுடன் மகளையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ், என்ஜீனியர். இவருக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல் காங்கேயன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எழில் குடிபோதையில் கார் கார் மீது உரசினார்.
காரினை சாலையோரம் நிறுத்திய சரண்ராஜ், எழிலை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலை தேடி வருகின்றனர்.
- ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது.
- தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, காரைக்கால் வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், காரைக்கால் எல்லைக்கு வந்த பொழுது, சாலையில் அங்குமிங்கும் அலைந்த வாரும், ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது. தொடர்ந்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர்.
ஒரு சில பயணிகள் காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை 300கி.மீ தூரம் பயணம் செல்லும் பஸ் டிரைவராக நாகை டெப்போ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பதும் அவரை காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேறு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்து டிரைவர் செல்வராஜை காரைக்காலில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார்.
- மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
தருமபுரி:
தருமபுரி போக்குவரத்து காவல் பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தங்கமணி. இவர் சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் தருமபுரி ரெயில்வே நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி, பார்த்து செல்லுமாறு தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளில் திட்டி போலீஸ்காரரை தாக்கியுள்ளார். இதில் தங்கமணிக்கு லேசான காயம் ஏற்பட்டு சீருடை கிழிந்தது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அருகேயுள்ள எ.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த பழனியப்பன் மகன் முனியப்பன் (வயது40) என்பதும், இவர் சென்டரிங் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து முனியப்பன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்கள் லாரியை நிறுத்தினர்
- போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக கன்டெய்னர் லாரியை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.
இதை கண்ட பின்னால் வ ந்த மற்ற வாகனங்களின் டிரைவர்கள் பீதியடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவியது.
இதை பார்த்த பொதுமக்கள் லாரியை நிறுத்தினர். மேலும் டிரைவரை பிடித்து போலீசாரை வரவழைத்து டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அம்பலூர் போலீசார் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படும் வகையில் குடி போதையில் கன்டெய்னர் லாரியை ஒட்டிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
- ரேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திரு.வி.க.நகர்:
சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் ரேகா (வயது 26). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தார். சென்னை புத்தகரம் அருகே வந்தபோது திடீரென தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தகாத வார்த்தைகளால் பேசி ரேகா வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேகாவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குடிபோதையில் போலீசாரையும் அவர் தரக்குறைவாக பேசியதோடு, பெண் போலீஸ் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த பேட்ச் மற்றும் செல்போன் 'ஹெட்செட்'டை அறுத்து ரகளை செய்தார்.
மேலும் அவர் போலீசாரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ரேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
போதையில் ரகளை செய்த ரேகா, தான் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், அழகு நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
- மாரிக்கண்ணன் டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தார்.
- பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
கோவை,
ராமநாதபுரம் மாவட்டம் விம்மநாதபுரம் புது தெருவை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (வயது 25).
இவர் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மணல் சப்ளை கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மாரிக்கண்ணன் ஊட்டிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.
பின்னர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மாரிக்கண்ணன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது அவர் அங்கு நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சில் ஏறினார். பின்னர் டிரைவரின் இருக்கையில் அமர்ந்து செல்பி எடுத்தார்.
இதனை பார்த்த டிரைவர் அவரை இறக்கி விட்டனர். அப்போது மாரிக்கண்ணன் டிரைவர் மற்றும் பொது மக்களிடம் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
- சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக் கிருஷ்ணா புரம் காலனியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (வயது27), அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் என்கிற யுவராஜ் இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியலை கத்தியால் சேதப்படுத்தினர். இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் நாட்டாமை சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த நாட்டாமை சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாரி முத்து, யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- முத்துக்கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து.
- கோவில் உண்டியை கத்தியால் சேதப்படுத்தினர் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக்கி ருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது30) ,அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர்கள் இருவரும் நேற்று மாலை 6 மணி அளவில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு குடிபோதையில் அந்த வழியாக வந்த வாகனங்க ளை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியை கத்தியால் சேத ப்படுத்தினர் .இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டுள்ளார்.
ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் 2 பேரும் சங்கரை சரமாரி யாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். காயமடைந்த சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை ஆசாமிகளை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்