search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested"

    • தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம்.
    • கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    தக்கலை:

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தக்கலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாநில துணை தலைவர் வக்கீல் ராபரட் புரூஸ், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டார் வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜான் விக்னேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தாரகை கட்பர்ட், நிர்வாகிகள் குமார், செல்வின்ராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மக்களை பிரித்தாள நினைக்கும் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் இன்றைக்கு கோ பேக் மோடி எனும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என்றார்.

    அவரை தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கண்டிக்கின்றோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ராதா கிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
    • தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி படுகொலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

    சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை காலைத்து வருகின்றனர். pondஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
    • உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.

    உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மைதிலி.

    தம்பதியின் 2-வது மகள் ஆர்த்தி (வயது 9) கடந்த 2-ந் தேதி வீட்டுக்கு வெளியே ஆர்த்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு சி.சி.டி.வி.யில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் எங்கே சென்றார்? என்ற எந்த பதிவும் கிடைக்கவில்லை.

    போலீசார் அந்த பகுதியில் வீடு வீடாக தேடியும் சிறுமி பற்றி தகவல் தெரியவில்லை. 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவும் வலியுறுத்தினர்.

     

    4 நாட்களாகியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 40 போலீசார் நேற்று முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அப்போது ஒரு கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. சோலை நகரை ஒட்டிய அம்பேத்கார் நகர் பகுதி மாட்டு கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வாய்க்காலில் வேட்டியால் கட்டி மூட்டை ஒன்று கிடைப்பதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அதில் மாயமான சிறுமியின் உடல் இருந்தது. அவரை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியது தெரியவந்தது.

    இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலியல் துன்புறுத்தல் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய கோரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ள 5 நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினர்.

    முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்குள் மறியல் செய்த பொதுமக்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைத்தனர்.

    இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்தார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.

    இவ்வாறு போலீசார் கூறினார்.

    இதுதொடர்பாக 2 பேரிடமும் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.
    • ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரஹீம் சரணியா. இவர் ஐதராபாத் மேல் பள்ளியில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.

    இதில் கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்தது தெரிந்தது. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்ததாக பாண்டுரங்க ராவ், ரஹீம், அஜய்குமார், அஹர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பேகம் பேட்டை பஜாரில் உள்ள கடைகளில் சோதனை செய்து ஏராளமான கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் பறிமுதல் செய்தனர்.

    • பிரதமர் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
    • மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர்.

    ஈரோடு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு புது வீதியில் வசிக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பிரதமர் நரேந்திர மோடி பல்லடம் வருகை எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.

    தமிழகம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, இன்று வரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மறைமுகமாக துணை நிற்பதை கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகிலனை கைது செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
    • ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

    ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அந்த மனுவில், 'புகார்தாரரை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை. அவரை குடும்பத்தில் ஒருவராக கருதி அவருக்கு தனி படுக்கை அறை ஒதுக்கி உரிய பாதுகாப்பு வழங்கினோம். மேல்படிப்புக்கும் ஏற்பாடு செய்தோம். நாங்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. நாங்கள் அப்பாவி. எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இளம்பெண் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சம்மனுடன் போலீசார் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.

    • பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
    • மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா எலவள்ளி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு பாரதம்மா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வார்டனாக மஞ்சுநாத் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா மற்றும் வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் மாணவ-மாணவிகளை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தலைமை ஆசிரியை பாரதம்மா அந்த பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) சில மாணவர்களை கட்டாயப்படுத்தி வைத்து சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை வைத்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதம்மா, வார்டன் மஞ்சுநாத், சமூக அறிவியல் ஆசிரியர் அபிஷேக், ஓவிய ஆசிரியர் முனியப்பா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் மரேஷ், ஒப்பந்த பணியாளர் கலாவதி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பற்றி தாலுகா சமூக நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மஸ்தி போலீசார் கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவை:

    கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    தடையையும் மீறி இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கோவையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை போலீசார் பீளமேடு பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • குழந்தையை பெற்றோரே கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும், ஆலப்புழாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் லிவ்விங் டுகெதர் ஜோடியாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றரை மாதம் ஆன பெண் குழந்தை இருந்திருக்கிறது.

    சம்பவத்தன்று அந்த ஜோடி கொச்சி கருகப்பள்ளியில் உள்ள லாட்ஜில் குழந்தையுடன் தங்கியிருந்திருக்கிறது. இந்நிலையில் அந்த ஜோடி, தங்களது குழந்தையை சுய நினைவு இல்லாத நிலையில், எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கிறது.

    அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. அந்த குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார், அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே, குழந்தை மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

    ஆகவே அந்த குழந்தையை அவர்களது பெற்றோரே கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். அது பற்றி குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொன்றது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றதற்கான காரணம் குறித்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது
    • கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தலையை கைப்பற்றியதுடன் உடலையும், கொலையாளியையும் தேடினர். தொடர்ந்து தலை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் குள்ளம்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்த பிரபல ரவுடியான திருமலை (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் உடலை அங்குள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    திருமலை கொடுத்த தகவலின்பேரில் அவரது பைக் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது - பிரபல ரவுடியான திருமலை நேற்று முன்தினம் பைக்கில் வாழப்பாடி முத்தம்பட்டி சென்றார். அங்கு விவசாய தோட்ட பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்தம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி 45 என்பவரை மிரட்டி ஒன்றரை பவுன் நகையை பறித்தார்.

    அங்கிருந்து நடுப்பட்டி வழியாக வந்த போது சாலையில் நடந்து வந்த குமார் மீது மோதுவது போல சென்று தகராறு செய்தார். பின்னர் இரு வரும் சமரசம் ஆகிய நிலையில் தன்னுடன் வந்தால் மது வாங்கி தருவதாக கூறி குமாரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக் குட்டை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினர்.

    பின்னர் இருவரும் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த திருமலை, குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தலையை அறுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலையில் வீசி விட்டு சென்றதும், அங்குள்ள சி.சி.டி.சி. காமிரா பதிவால போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்துஅவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ைகதான பிரபல ரவுடி ஏற்கனவே 2 கொலைகள் செய்துள்ள நிலையில் தற்போது சிறிய பிரச்சினையில் ஒருவரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடும்நிலை உள்ளது.

    ×