search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்"

    • கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு கொலை செய்துள்ளனர்.
    • சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு.

    திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் சிவக்குமாரின் தந்தை நாகராஜன். மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, திடீரென நாகராஜனை சூழ்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மர்ம நபர்கள் விரட்டியபோது கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ்வரன், வாசுதேவ பிரபு முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உட்பட 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பி ரமணியன் மன்ற பொருள் தன்னை ஆலோசிக்காமல் அதிகாரிகளே தயார் செய்து எடுத்து வருகின்றனர்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளான சூரப்பள்ளி மற்றும் ஆவடத்தூர் பகுதிக்கு அதிகாரிகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற வார்டுகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது. அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியை சமமாக பிரித்து வழங்க வேண்டும்.

    மேலும் பொது நிதி மூலம் செய்யப்படும் வரவு, செலவு கணக்குகளை முறையாக அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து அவர் உள்பட 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வார்டு கவுன்சிலரான ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.
    • கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தலவூர் கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது தலவூர் கிராம மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலரான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.

    அதன்படி தனது வார்டுக்கு உட்பட்டவர்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை சில்லறை காசுகளாக மாற்றினார். மொத்தம் 9 வாடிக்கையாளர்களின் மின் கட்டணமான ரூ 7 ஆயிரத்துக்கு ரூ,1, ரூ2, ரூ5 நாணங்களாக மாற்றி ஒரு பையில் மூட்டையாக கட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வழங்கினார்.

    அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் வாடிக்கையாளர்களின் மின் அட்டை மற்றும் சில்லறை காசுகள் அடங்கிய மூட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். அவற்றை வேறு வழியின்றி வாங்கிக்கொண்ட மின் ஊழியர்கள், சில்லறை காசுகள் அனைத்தையும் பல மணி நேரமாக எண்ணினர்.

    பின்பு மின் கட்டணத்துக்கான ரசீதை கவுன்சிலரிடம் கொடுத்தனர். இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியதாவது:-

    மின்சார வாரியமும், குடிநீர் வாரியமும் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி எங்களை கஷ்டப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி எனது வார்டில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. என்னுடைய வார்டில் தினமும் 20 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இன்று 9 வீடுகளின் மின் கட்டணத்தை சில்லறையாக கொண்டு வந்துள்ளேன். இதற்கு பிறகும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், எனது வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டண தொகையையும் நாணயங்களில் கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆம்னி பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
    • கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதலாவதாக புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி பேசும்போது, நான் டி.என்.பி.எஸ்.சி குரூப் -2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அரசு பணியில் சேர்ந்தேன். பெரியகுளம் நகராட்சி, தர்மபுரி நகராட்சிகளில் பணிபுரிந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றேன். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும் தேசிய, மாநில அளவில் விருதுகள் பெற்றுள்ளேன். அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறேன். தஞ்சாவூர் மாநகராட்சியிலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற கடுமையாக உழைப்பேன் என்றார்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய எம். எஸ். சுவாமிநாதன் பெயர் வைத்ததற்கும், தஞ்சை மேரிஸ் கார்னர் உயர்மட்ட மேம்பாலத்தை ராமநாதன் மருத்துவமனை வரை நீட்டிக்க உத்தரவிட்டதற்கும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை அதிகம் இருப்பதாக ஏலம் எடுத்தவர்கள் கூறியிருந்தனர். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று மறு ஏலம் விட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாமன்னர் சோழன் சிலைக்கு மின்அலங்காரம், மரப்படிகள், தடுப்புகள் ஆகியவற்றை தற்காலிகமாக அமைத்து தரும் பணிகள் மேற்கொள்ள ரூ.14 லட்சம் அங்கீகரிக்கவும் ஒப்பந்த புள்ளிகள் கோரி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது கவுன்சிலர்கள் நீலகண்டன் ,உஷா, காந்திமதி, கண்ணுக்கினியாள் உள்ளிட்ட சிலர் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் எப்படி கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சியில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், முறைப்படி தான் ஏலம் நடந்ததாகவும் , கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் சண்.ராமநாதன் வெளியேறினார்.

    அப்போது கவுன்சிலர்கள் பேசும் மைக் திடீரென அணைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் பற்றி பேச முன்னறிவிப்பு இன்றி எப்படி மைக் அணைக்கலாம் என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் நடந்த இந்த அமளி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன். இவரது பொதுப்பணியை பாராட்டும் வகையிலும், தொடர்ந்து 2-வது ஆண்டாக லயன்ஸ் கிளப் தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டதை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க சோழவந்தான் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மகளிர் குழு சொர்ணம், கோதை, பாமா, நல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிட்டு வரவேற்றார். கோவில் அர்ச்சகர் கண்ணபிரான், பிரசாந்த் சர்மா ஆகியோர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கி னர். ராமநவமி கமிட்டி நிர்வாகி காசி விஸ்வநாதன், அய்யப்ப சேவா சங்க செயலாளர் தாமோதரன், கணேசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கவுரவித்தனர். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. பெண் கவுன்சிலர்-கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நேருஜி நகரை சேர்ந்தவர் தி.மு.க. நிர்வாகி மூர்த்தி (வயது33). இவரது மனைவி ஆஷா (31). இவர் விருதுநகர் நகராட்சியில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று இவரது வார்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனை ஆஷா தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும், மகேஷ்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஆஷா தங்களை தான் வீடியோ எடுப்பதாக நினைத்து மாரீஸ்வரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா, அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 2பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்றனர். இந்த பிரச்சினையில் தானும் தாக்கப்பட்டதாக மாரீஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • உலக சாதனை படைத்தார்
    • முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்களுக்கான சிகிச்சை,

    என். ஜி. ஓ. காலனி :

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73- வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்க ளுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல், இஸ்லாமிய பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், மீனவர்களுக் கான முத்ரா கடன் திட்டம், மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட பாரதபிரதமர் மோடியின் 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பார்வைக்காக மத்திய அரசின் நலத்திட்டங் களை பிரதிபலிக்கும் வகை யிலான 73 ஸ்டால் வைக்கப்பட்டு அதன் மூலம் பொது மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வினை அமெரிக்காவில் இருந்து கிறிஸ்டோபர் என்பவர் வேர்ல்ட் ரிக்கார்ட் யூனியன் என்ற புத்தகத்தில் பதிவு செய்ய நேரில் பார்வையிட்டு மேலும் பிரதமர் மோடியின் 73 திட்டங்களை ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு வழங்கி யமைக்காக நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பனுக்கு உலக சாதனை படைத்தமைக்காக உள்ள சான்றிதழையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு குமரி மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஜெயக்குமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் ஜெகநாதன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் மாவட்ட தலை வர்கள் கணேசன், முத்து கிருஷ்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முரளி மனோ கர்லால், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர்கள் வீரசூரபெருமாள், சதீஷ், ஆட்சியம்மாள், தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன்பிள்ளை, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் டாக்டர் மோகன்ராஜ், பா.ஜ.க. முன்னாள் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செய லாளர் ரூபின், அகஸ்தீஸ்வரம் வடக்கு மண்டல தலைவர் சுயம்பு, முகிலன்விளை மிசா. ரெத்தினஜோதி, பா.ஜ.க. மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளர் பார்வதி விஜயகுமார், அக்ரி சிவா, மற்றும் பயனாளிகள், பொது மக்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
    • ஒரே இடத்தில் கிடைக்க கவுன்சிலர் அய்யப்பன் ஏற்பாடு

    என்.ஜி.ஓ.காலனி :

    பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படு வதையொட்டி நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பன் ஏற்பாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகாமில் வேலைவாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொதுமருத்துவம், பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் அடுப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல் ஆகிய வற்றுக்கான நடவடிக்கை உள்ளிட்ட உதவிகள் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட நபர்கள் என அனைவரும் பங்கேற்றனர். வார்டுக்கு ட்பட்ட பொதுமக்கள் அனை வரும் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையும்படி நாகர்கோ வில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப் பன் கேட்டுகொண்டுள்ளார்.

    • பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முன்பு பஸ்ஸில் அவரை ஏற்றிவிட்டு அங்கு நின்ற ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிந்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சொர்பின் (வயது40). பூதப்பாண்டி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவர், இன்று காலையில் தனது மனைவியை வேலை க்காக மோட்டார் சைக்கி ளில் அழைத்துச் ெசன்றார். பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முன்பு பஸ்ஸில் அவரை ஏற்றிவிட்டு அங்கு நின்ற ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர், தனது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் தேவை ப்படுவதால், அந்த நபருக்கு போன் செய்ய வேண்டும் என்று கூறி சொர்பின் வைத்திருந்த செல்போனை கேட்டு உள்ளார். அவரும் தனது போனை அந்த நபருக்கு கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிய அந்த நபர், போனில் பேசிய படியே அங்கிருந்து மாயமாகி விட்டார்.

    தன்னிடம் செல்போன் வாங்கி நபரை சொர்பின் தேடினார். அப்போது தான், அந்த நபர் தனது செல்போனை நூதன முறையில் பறித்துச் சென்ற தை சொர்பின் அறிந்தார். அது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • அனைத்து கட்சி கவுன்சிலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
    • ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள தேவைகளை சரி செய்து தரும்படியும் கவுன்சிலர் கிரண் ஷர்மிலி வினோத் குமார் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி 107-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரண் ஷர்மிலி வினோத்குமார் 107-வது வார்டு சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். கூட்டத்தில் பேச தொடங்கியதும் கட்சியின் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் தனது வார்டு பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அவரது பெரும்பாலான கோரிக்கைகள் அங்கு இருந்த அனைத்து கட்சி கவுன்சிலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

    முக்கியமாக அவருடைய வார்டு கவுன்சிலர் அலுவலகம் பெரிதும் சேதம் அடைந்துள்ளதாகவும் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அமைந்தகரையில் உள்ள எம் எச் காலனியில் உள்ள பழுதடைந்த பாலதை சரி செய்து தரும்படியும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், காண்ட்ராக்ட் ஒப்பந்த புள்ளிகளை கோரும் போது அதில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் குறைவான மதிப்பிற்கு ஒப்பந்தங்களை கோருகிறார்கள். இதில் யார் குறைவாக மதிப்பீடு செய்கிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் தரமற்ற வேலைகள் நடப்பதாகவும் இதற்கு ஒரு வரைமுறை செய்ய வேண்டும் என்றும் மேயருக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய வணக்கத்திற்குரிய மேயர், 50 லட்சம் வரை லிமிடெட் டெண்டர் கொடுக்கலாம் என்று அரசு உத்தரவு உள்ளதாகவும் அதை பின்பற்றலாம் என்றும் தெரிவித்தார். அப்போது அனைத்து கவுன்சிலர்களும் கைகளை தட்டி வரவேற்றனர். மேலும் ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள தேவைகளை சரி செய்து தரும்படியும் கவுன்சிலர் கிரண் ஷர்மிலி வினோத் குமார் கோரிக்கை விடுத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையாளர் முத்துசாமி மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் ,அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் துவங்கியதுமே கவுன்சிலர்கள் ஏன் ரகசிய கூட்டம் போல் நடத்துகின்றனர். பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் இருந்தால் தானே பொதுமக்கள் பிரச்சனை குறித்து என்ன பேசுகிறோம் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரிய வரும். அதை விடுத்து ரகசியமாக கூட்டம் நடத்துவது தேவையா என ஆட்சேபித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 48 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டதாகவும் இதற்கு 3,7,10,11,12,13,17, ஆகிய 7 வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், தீர்மானங்களை எதிர்த்து1,2,4,6,8,9,14,15,16,18, ஆகிய 10 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.

    இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்து வடக்கூரை சேர்ந்தவர் நாராயணசாமி. தொழிலாளி. இவரது மகன் ராஜாமணி (வயது 30). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகவடிவு என்பவருடன் திருமணம் நடந்தது. ராஜாமணி அந்த பகுதியில் பலசரக்கு கடையும் நடத்தி வந்தார். நேற்று மதியம் அவர் கீழநத்தம் பகுதியில் அமைந்துள்ள பாளை தாலுகா போலீஸ் புறக்காவல் நிலையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை அழைத்து வர சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜாமணியை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ராஜாமணியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய நிலையில் அங்கு ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாளை தாலுகா போலீசார் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? ஏதேனும் முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கீழநத்தம் மேலூர் மற்றும் தெற்கூர் பகுதிகளை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே ராஜாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் திரண்டு நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ×