search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adulterated"

    • போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.
    • ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரஹீம் சரணியா. இவர் ஐதராபாத் மேல் பள்ளியில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.

    இதில் கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்தது தெரிந்தது. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்ததாக பாண்டுரங்க ராவ், ரஹீம், அஜய்குமார், அஹர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பேகம் பேட்டை பஜாரில் உள்ள கடைகளில் சோதனை செய்து ஏராளமான கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் பறிமுதல் செய்தனர்.

    • கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
    • இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.

    • சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.
    • கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.

    இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட னர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் 13 வழக்குகளில் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    அதில், கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    ×