கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரிப்பு: 4 பேர் கைது

போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரிப்பு: 4 பேர் கைது
Published on

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரஹீம் சரணியா. இவர் ஐதராபாத் மேல் பள்ளியில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.

இதில் கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்தது தெரிந்தது. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்ததாக பாண்டுரங்க ராவ், ரஹீம், அஜய்குமார், அஹர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பேகம் பேட்டை பஜாரில் உள்ள கடைகளில் சோதனை செய்து ஏராளமான கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com