search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படுகொலை"

    • லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர்.
    • 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த தளபதிகள் அந்தஸ்திலான 3 முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    எனினும், இதனை இஸ்ரேல் முறியடித்தது. ஈரானின் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி அரசுகள் 99 சதவீதம் வழிமறித்து தடுத்து நிறுத்தியது. இவற்றில், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது.

    தொடர்ந்து, ஈரான் மீது இஸ்ரேல் பதிலடியாக தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காசாவை இஸ்ரேல் தாக்கியது. பணய கைதிகளாக உள்ள தன்னுடைய நாட்டின் குடிமக்களை மீட்கும் பணியை தொடர்ந்தது. இந்நிலையில், லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர். இதில், மேற்கு பகுதியை சேர்ந்த ரத்வான் படைகளின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவுகளின் தளபதி முகமது உசைன் ஷாஹவுரி கொல்லப்பட்டார்.

    அவர், லெபனானின் மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் இருந்து கொண்டு இஸ்ரேல் நிலப்பகுதியை நோக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதேபோன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவை சேர்ந்த மஹ்மூத் இப்ராகிம் பத்லல்லா என்பவரும் கொல்லப்பட்டார்.

    லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதலில், லெபனானின் எயின் ஈபெல் பகுதியில் கடலோர பிரிவை சேர்ந்த தளபதியான இஸ்மாயில் யூசெப் பாஜ் என்பவர் கொல்லப்பட்டார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

    • என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
    • குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.

    100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

    உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.

    புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.

    குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.

    சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.

    புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.

    சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.

    • எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
    • தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி படுகொலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

    சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை காலைத்து வருகின்றனர். pondஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
    • உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.

    உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
    • அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

    சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

    இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகொலை செய்த மர்ம கும்பல் உடனடியாக அங்கிருந்து தாங்கள் வந்த வாகனங்களில் தப்பி விட்டனர்.
    • கொலையுண்ட சக்திவேல் உடலை பார்க்க அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உள்ளனர்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகரை அடுத்த வண்டியூர் தேவர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34). மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் மதுரை சிந்தாமணி பகுதியில் ரைஸ்மில் நடத்தி வருவதோடு, பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, வீடு திரும்பிய சக்திவேல் தூங்க சென்றார். இதில் அதிகாலை எழுந்த அவர் குளித்துவிட்டு சங்கு நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ரைஸ்மில் குடோனுக்கு மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார். அவர் வண்டியூர் டோல்கேட் அருகே வந்தபோது திடீ ரென்று மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை முந்திச்சென்று வழிமறித்தது. இதனை சற்றும் எதிர்பாராத சக்திவேல் அதிர்ச்சியில் உறைந்தார்.

    அந்த கும்பலிடம் நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும் என்று சக்திவேல் கேட்டார். ஆனால் பதில் எதுவும் கூறாத அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை வெளியில் எடுத்தனர். இதனால் பதட்டம் அடைந்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் விடாமல் சில மீட்டர் தூரம் வரை ஓட ஓட விரட்டிய அவர்கள் ஒரு கட்டத்தில் அவர் தப்பாதவாறு சுற்றி வளைத்தனர்.

    பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சக்திவேலை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரை படுகொலை செய்த மர்ம கும்பல் உடனடியாக அங்கிருந்து தாங்கள் வந்த வாகனங்களில் தப்பி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து உடனடியாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. ஓ.பி.அணி அணி மாவட்ட செயலாளர் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சக்திவேலை கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கும்பல் யார்? அவர்கள் எந்த வழியாக தப்பினர்? என்பது குறித்து முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சக்திவேல் நடத்தி வந்த ரைஸ்மில் தொடர்பாக கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தொழில் போட்டியில் சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா?

    அதேபோல் சமீபத்தில் சரக்கு வாகனம் ஒன்று விற்பனை தொடர்பாக இவருக்கும், ஒரு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது பைனான்ஸ் தொழிலில் பணம் கொடுக்கல், வாங்கலில் கொலை அரங்கேறியுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட சக்திவேல் உடலை பார்க்க அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அங்கும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மதுரையில் பரபரப்பும், பதட்டமும் அதிகரித்துள்ளது.

    • பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டெஹ்ரான்:

    ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • லோடுமேன் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டி ருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மோட்டார் சைக்கிளால் உயிர்நாடியில் இடித்து சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதை பகுதியை சேர்ந்தவர் தர்மர் (வயது45). லோடுமேன் வேலை பார்த்து வந்தார். குடி பழக்கத்துக்கு அடிமையானவர்.

    நேற்று இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.அதன்பிறகு தர்மரை அந்த கும்பல் மோட்டார் சைக்கிளால் உயிர்நாடியில் இடித்து சென்று விட்டனர். இன்று காலை தர்மர் மயங்கிய நிலையில் கிடந்ததால் அவர் குடிபோதையில் இருக்கலாம் என நினைத்தனர்.

    அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது ரத்தம் இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தர்மரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றில் பிரசாதம் சாப்பிட்டதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ரார் என்பவரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளது ஒரு மதவெறி வன்முறை கும்பல்.

    இந்த வன்முறை செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமின்றி இஸ்லாமியர்கள் என்பதால் மட்டும் தாக்கப்படுவது இந்தியாவில் அன்றாட வழக்கமாகிவிட்டது, ஆனால் இதற்கு மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை. சமீபகாலமாக மத வெறுப்பு பேச்சு, கும்பல் படுகொலைகள் அரங்கேறி வருவது அன்றாடமாகிவிட்டது .

    இந்த அசாதாரண சூழல் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ராரை படுகொலை செய்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மதவெறி வன்முறை கும்பலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர்.
    • விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது.

    செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்.பா.ம.க. நகர செயலாளராக இருந்த அவர் கடந்த 9-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அஜய் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மேலும் சூர்யா, காவூர் விஜி, கார்த்திக் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் சூர்யா, காவூர் விஜி ஆகியோரை தனிப்படை போலீசார் மாமண்டூர் பாலாற்று பாலத்தில் வைத்து சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது. அவர்களை போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
    • கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்(வயது46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளராக இருந்தார். இவர் செங்கல்பட்டு நகரில், மணி கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் நாகராஜ் பூக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நாகராஜை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து நாகராஜ் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் நாகராஜின் உறவினர்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். நாகராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

    அப்போது கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இதற்கிடையே இரவு 11.30 மணியளவில் கொலையாளிகளில் ஒருவன் செங்கல்பட்டு அடுத்த புலிபாக்கம் பகுதியில் ரெயில்வேபாதை அருகே தப்பி செல்வது தெரிந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜா மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

    மேலும் பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் மீது கற்களை வீசியும் மற்றும் மறைத்து வைத்திருந்த கத்தியாலும் தாக்க முயன்றார்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபர் மீது ஒரு ரவுண்டு சுட்டார். இதில் வாலிபரின் இடது காலில் குண்டு துளைத்து சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. அவரது காலில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அங்கு டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வன், சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படுகிறது.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். பா.ம.க. பிரமுகர் கொலையில் இதுவரை 3 பேர் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ம.க. பிரமுகர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் சுட்டுபிடித்து உள்ள சம்பவம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நாகராஜ் கொலையை கண்டித்து இன்று காலை வணிகர் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் மறியலில ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம்.
    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு.

    செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலலவியது

    உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்நிலையில், பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    தப்பியோடிய கும்பலில் அஜய் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் காயமடைந்த அஜய் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×