search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viduthalai siruthagal party"

    • சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை கே.கே நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குட்டி (வயது40). ரவுடியான இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7.50 மணியளவில் ரமேஷ் வீட்டின் அருகே உள்ள பாரதிதாசன் காலனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு உள்ள டீக்கடைக்கு வந்தார்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அரிவாள், கத்தியுடன் ரமேசை சுற்றி வளைத்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். உடனே கொலையாளிகள் தயாராக நின்ற காரில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    கொலையை நேரில் பார்த்த டீக்கடைக்காரர் மற்றும் அங்கிருந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட ரமேசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகள் தப்பிய காரில் மேலும் சிலர் இருந்து உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பதைபதைக்க வைக்கும் கொலைக்காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. கொலையாளிகள் தப்பிய காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கொலை நடந்த பாரதிதாசன் காலனி, 100 அடி சாலை சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். இப்பகுதியில் மாம்பலம் தாலுக்கா அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் அருகருகே உள்ளன.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் தினமும் அப்பகுதியில் உள்ள டீக்டைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

    இதனை நோட்டமிட்டு மர்ம கும்பல் தங்களது கொலை திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். ரமேஷ் ஆந்திராவில் நடந்த ஒரு கொலையிலும், எம்.கே.பி.நகரில் நடந்த ஒரு கொலையிலும் சம்பந்தப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ரமேசின் செல்போனுக்கு கடைசியாக பேசிய நபர்கள் யார்?யார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

    ×