search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுத்த பணத்தை திருப்பி தராததால் படகில் அழைத்து சென்று நடுக்கடலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை
    X

    கொடுத்த பணத்தை திருப்பி தராததால் படகில் அழைத்து சென்று நடுக்கடலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை

    • கொடுத்த பணத்தை திருப்பி தராததால் படகில் அழைத்து சென்று நடுக்கடலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யபட்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள காரக்கோட்டை கோழிசனம் பகுதியை சேர்ந்தவர் சுலோ–சனா (வயது 60). கணவரை இழந்து விதவையான இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகி–றார்.இதற்கிடையே கடந்த 2-ந்தேதி வெளியில் சென்ற சுலோசனா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்தவித தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசா–ரித்தனர். அப்போது சுலோ–சனா கொலை செய்யப்பட் டது தெரிய வந்தது. அதா–வது, அதே ஊரை சேர்ந்த கொழுந்தன் முறை கொண்ட உறவினரான ரமேஷ் என் பவர் தனியாக வசித்து வந்த சுலோசனாவிற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.அப்போது ரமேஷ் அவ–ருக்கு பண உதவிகளும் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு சுலோசனாவால் உடனடியாக திருப்பி தர–முடியவில்லை.

    இந்தநிலையில் சுலோச–னாவை ஒரு இடத்திற்கு வரும்படி ரமேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சோமநாதபட்டினம் கடற் கரை பகுதிக்கு சென்று அங்கே இருந்த நண்பர் செந்தில்குமாரை கூட்டிக் கொண்டு அங்கிருந்து படகு மூலம் கடலுக்குச் சென் றுள்ளனர்.நடுக்கடல் பகுதிக்கு சென்றதும் ரமேஷ் தான் வைத்திருந்த கட்டையால் சுலோச்சனாவின் பின் தலையில் அடித்துள்ளார். இதில் சுலோச்சனா மயங்கி விழுந்ததும் கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    அதனை தொடர்ந்து சுலோசனாவின் உடலை மணமேல்குடி அலையாத்திக்காடு புதர் பகுதியில் வீசிவிட்டு சென் றுள்ளது தெரிய வந்துள்ளது.அதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பரான செந்தில்குமாரை கைது செய்த போலீசார் தலை–மறைவாக உள்ள ரமேசை தீவிரமாக தேடி வரு–கின்றனர். கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்ப–வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.


    Next Story
    ×