என் மலர்
நீங்கள் தேடியது "Mughal"
- பர்மால் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய வேலைக்காரியின் மகளை தான் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தான்.
- புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறையினரை தயார்படுத்துவோம்.
இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே கூறியுள்ளார்.
உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பகடே, "ஜோதாவும் அக்பரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் கூட எடுக்கப்பட்டது.
வரலாற்றுப் புத்தகங்களும் அதையே சொல்கின்றன. ஆனால் அது ஒரு பொய். அக்பர்நாமாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பர்மால் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய வேலைக்காரியின் மகளை தான் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தான்.
ஆங்கிலேயர்கள் நமது மாவீரர்களின் வரலாற்றை மாற்றி எழுதினர். அவர்கள் வரலாற்றை சரியாக எழுதவில்லை. முதலில் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டனர். பின்னர், இந்தியர்கள் வரலாற்றை எழுதினர். அந்த வரலாற்றிலும் ஆங்கிலேயர்களும் செல்வாக்கு செலுத்தினர். வரலாற்றில், பெரும்பாலானவை அக்பரைப் பற்றி தான் உள்ளது. மகாராணா பிரதாப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறையினரை தயார்படுத்துவோம். அதனுடன், நமது கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பாதுகாப்போம்.
1569 ஆம் ஆண்டு அக்பருக்கும் அமர் ஆட்சியாளர் பர்மலின் மகள் ஜோதாவுக்கும் நடந்த திருமணத்தை ஆளுநர் மறுத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
- பிரதமர் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
- மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர்.
ஈரோடு:
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு புது வீதியில் வசிக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பிரதமர் நரேந்திர மோடி பல்லடம் வருகை எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.
தமிழகம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, இன்று வரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மறைமுகமாக துணை நிற்பதை கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகிலனை கைது செய்தனர்.






